Sunday, 20 April 2014

நிறம் மாறும் பச்சோந்திகள்...

நிறம் மாறும் பச்சோந்திகள்...

ஓணான்போல் பச்சை நிறத்தில் காணப்படும்
பச்சோந்திக்கு அப்பெயர் வரக்
காரணமே அதன் பச்சை நிறம் தான்.
இலைகளுக்கு மத்தியில்
தன்னை மறைத்து கொள்ளவும்,
எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும்
பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக்
கொள்ளும் என்பதும் தெரிந்த விஷயம்.
சில தெரியாத விஷயங்களும் இருக்கின்றன,
அதில் முக்கியமானது பழுப்பு, சிவப்பு,
மஞ்சள், வெள்ளை, நீலம்,
கறுப்பு அல்லது இவைகளுள்
ஏதாவது ஒரு நிறத்தை கொண்டு தங்களின்
நிறத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்திகள்
மாற்றிக் கொள்கின்றன.
எனினும் பெரும்பாலான நேரங்களில்
பச்சோந்திகள் தங்களின்
நிறத்தை பச்சை நிறத்தில் மாற்றிக்
கொள்கின்றன.
பச்சோந்தி இனத்தில் மொத்தம் 100
வகை உண்டு, இவற்றில் 59 பச்சோந்தி இனங்கள்
மடகாஸ்கர் தீவில் இருக்கின்றன.
தனது உடலின் நீளத்தை போல்
மூன்று மடங்கு நீளநாக்கை கொண்ட
பச்சோந்தி லபக்கென்று இரையை நாக்கில்
சுருட்டி பிடித்துக் கொள்கிறது.
இப்படி நாக்கில் ஒட்டிய
இரை கீழே விழுவதே கிடையாது, காரணம்
அதன் நாக்கில் சுரக்கும் கெட்டியான
பசை போன்ற திரவமாகும்.
பச்சோந்தியின் இரண்டு கண்களும்
ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில்
பார்க்க கூடியவை.
ஓணானை போல
மரத்தை விட்டு நிலத்திற்கு வருவதில்லை,
அப்படி இறங்கி வந்தால்
தனது எதிரிக்கு இரையாகிவிடுவோம்
என்பதை அவை உணர்ந்தே இருக்கின்றன.
எப்படி பச்சோந்திகளால் இப்படிப்பட்ட
வெவ்வேறு நிறங்களுக்கு மாற
விடுகிறது?
இதன் தோல் பகுதியில் பல்வேறு விதமான
நிறமிகள் உண்டு, இதுதான் பச்சோந்தியின்
உடல் பலவிதமாக
மாறுவதற்கு உதவுகின்றது.
கறுப்பு நிறமான இந்த நிறமியில்
“மெலனோபோர்ஸ்” என்னும் அணுக்கள்
காணப்படுகின்றன.
இந்த நிறமி மெலனோபோர்சுடன் கலக்கும்
போது வெவ்வேறு நிறங்கள் தோன்றுகின்றன.
குறிப்பாக பச்சோந்திகள் வேகமாக
நடக்கும் போதும், சூழ்நிலைக்கேற்ப
தங்களை மறைத்து கொள்ளும் போதும் இந்த
நிறமாற்றம் வேகமாக நடைபெறுகிறது.
தவிர, இவற்றின் நரம்பு மண்டலங்களும்
நிறமாற்றத்திற்கு உதவுகின்றன.
மேலும் தனது இணையை கவர்வதற்காகவும்,
ஆண் பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக்
கொள்கிறது.

வழுக்கை விழுவது ஏன்?

வழுக்கை விழுவது ஏன்?

தலைமுடியைப் பற்றி மிகவும்
இளக்காரமாக நினைப்பவர்கள் நாம்.
‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற
மாதிரி பல பழமொழிகள்
நம்மிடையே வழக்கத்தில் உண்டு.
ஆனால், உண்மை நிலவரம் என்ன?
முப்பது வயதில் தலைமுடி வெளுக்க
ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம்
குறைய ஆரம்பித்து விடுகிறது.
நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள்
உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம்
முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்
முடிகள் உள்ளன.
புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின்
என்கிற மூலப்பொருள்தான் முடிகள்
வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது.
புரோட்டின் சத்து குறைந்தால்,
முடி அதிகமாக உதிரும் என்பதைச்
சொல்லவே தேவையில்லை.
யூமெலானின் (eumelanin) என்கிற
பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக
இருப்பதற்குக் காரணம். பொமேலானின்
(Pheomelanin) என்கிற பொருள்
அதிகமாக இருந்தால்,
தலைமுடி செம்பட்டையாக இருக்கும்.
இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின்
அதிகமாக இருப்பதால் நம்
தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.
நம் உடம்பில்
எத்தனை முடி இருக்கிறதோ,
அவற்றுக்கான அடித்தண்டு (follicies),
தாயின் வயிற்றில் இருக்கிற
போதே தோன்றி விடுகிறது.
பிறப்பிற்குப்பின் புதிய
முடி வளர்வதற்கான
அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.
ஒவ்வொரு அடித்தண்டிலும்
இருபது முதல்
முப்பது முறை முடி வளரும்.
ஒருமுறை முடி வளர்ந்தால்,
மூன்றிலிருந்து ஐந்து வருடம்
வரை இருக்கும்.
தலையில் வளரும்
முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச்
என்கிற ரீதியில் வளரும். வெயில்
காலத்தில் வேகமாக வளரும்.
தலைமுடியின்
வளர்ச்சி பதினைந்திலிருந்
து முப்பது வயதுக்குள் அதிவேகமாக
இருக்கும்.
ஒரு மாத காலத்துக்குள்
ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால்,
அது நார்மலான விடயம்தான். அதனால்
ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை.
இதேபோல தலைவாரிக் கொள்கிற
நேரத்தில் 15, 20 முடிகள் உதிரலாம்.
பெண்கள்
குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம்.
தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60
முடிகள் உதிரலாம்.
தலைமுடி உதிருவதில்
மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.
முதலாவது, அனெகன். இந்த நேரத்தில்
முடியின் அடித்தண்டு நம் உடம்பில்
நன்றாகக் காலூன்றி வளரும்.
இரண்டாவது நிலை, கேடகன் (சிணீtணீரீமீஸீ).
நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும்
வளராமலும், விழவும் முடியாத
நிலையில் இருக்கும். மூன்றாவது,
டெலகன். நன்கு வளர்ந்த
முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த
நிலை.
தலைமுடி இழப்பில் இருபதுக்கும்
மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும்,
மூன்று முக்கியமான வகைகளை மட்டும்
விளக்கமாகச் சொல்கிறேன்.
1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.
3. அலோபேசியா ஏரியாட்டா.
ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
* ஆன்ட்ரியோஜெனிக்
அலோபேசியா என்று இதற்குப் பெயர்.
முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித
ஆண்களுக்கு முப்பது முதல்
ஐம்பது வயது வரை உள்ளவர்கள்
பாதிக்கப்படுகிறார்கள்.
* இதற்குப் பல காரணங்கள் உண்டு.
வழுக்கை பரம்பரையாக
ஏற்படுவது என்பது தவறான கருத்து.
இதற்கு ஐம்பது சதவிகித
வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும்
பொடுகினாலும்
தலைமுடி பலமிழந்து போகலாம்.
* மனஉளைச்சல் காரணமாகவும்
தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள்
காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற
நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
* சிகரெட் பிடிப்பதும்,
தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான
காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான
மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர்
ரத்த அழுத்தம் தொடர்பான
மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில
வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும்
மாத்திரைகளை சாப்பிடும்போதும்
தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.
* சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும்,
தலையில்
கண்டபடி டை அடிப்பதாலும்கூட
முடிகள் உதிரலாம்.
* நம் ரத்தத்தில்
டிஹெச்டி என்று ஒரு பொருள்
இருக்கிறது. இது ரத்தத்தில்
அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும்
என்று எல்லா மருத்துவர்களும்
ஒப்புக்கொள்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
* பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன்
மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய
கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள்
பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14
வயதுக்குள் நிறைய
தலைமுடி இழக்கலாம்.
* பிரசவம் முடிந்த சில
மாதங்களுக்குள் நிறைய
தலைமுடி கொட்டலாம்.
நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய்
நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
* சில
பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான
பிரச்னை உருவாகும்போதும்
முடி உதிரலாம். இன்னும் சில
பெண்களுக்கு ‘ஓவரி’யைச்
சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால்
ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ,
குறைவாகவோ சுரப்பதாலும்
முடி உதிரலாம்.
* ஊட்டச்சத்து குறைவாக
இருக்கும்போது, முடி உதிர்கிறது.
உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச்
சத்து குறைந்தால், முடி அதிக அளவில்
உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின்
எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க
வேண்டும்.
* கர்ப்பத் தடை மாத்திரைகளைச்
சாப்பிடுகிற போதும்,
பெண்களுக்கு அதிக அளவில்
முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம்.
நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில
உணவு வகைகளையே மீண்டும் மீண்டும்
சாப்பிடுவதனால், சில வகை சத்துகள்
குறைந்துவிடுகின்றன. இதனாலும்
முடி உதிர்கிறது.
அலோபேசியா ஏரியாட்டா:
* வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான
விடயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற
வழுக்கைதான். இளம் பருவம் முதல்
எண்பது வயதுக்குள்
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
* தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப்
பகுதியில் வேண்டுமானாலும் வரலாம்.
தலையில் உள்ள முடி அதிவேகத்தில்
உதிர ஆரம்பிக்கும்.
பதினைந்தே நாட்களுக்குள்
தலை சொட்டை ஆகிவிடும்.
* இப்படி திடீரென முடி உதிர்வதற்கான
காரணம் வேடிக்கையானது. நம்
உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல்
தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம்
உடம்பிற்குள் நுழைந்துவிட்டால்,
அதை அழித்துவிடுவது நம் உடலின்
இயற்கையான அமைப்பு.
* உதாரணமாக, நோய்களை உருவாக்கும்
பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால்,
அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய்
எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால்,
சில சமயங்களில் நம் உடலில் உள்ள
முடிகள் தேவையில்லாதவை,
அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்
என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம்
உடலில் உள்ள முடிகள் எல்லாம்
உதிர்ந்துவிடுகின்றன.

சைனுசைடிஸ் நோய்

சைனுசைடிஸ் நோய்

ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான
பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும்
ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன்
விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக்
குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய்
குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத்
தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய்
வருகிறது.
குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக்
குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும்.
முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும்.
நேரமே இல்லை” எனப் பல
காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர்
கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக்
கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல.
இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை)
தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும்
அழுக்குப் போக என்றால், இரவில்
மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே,
இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல்
முதலில் மிக அவசியம்.
நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர்
ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத்
தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்
தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த
மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ்
நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன்
தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய்
எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune
Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப்
பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பெருவாரியான நேரங்களில்,
சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத்
தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும்
நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி,
நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள
hypersensitivityயைச் சீராக்காமல்,
இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம்.
அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப்
பயிற்சி செய்துவாருங்கள்.
யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப்
பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும்.
நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம்
இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில்
சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச்
சீராக்கப் பெரிதும் உதவும்.
உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம்
மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில்
உள்ள piperine, piperidine சத்துகள் நோய்
எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக்
கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால்,
நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம்
எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

குறட்டை: நோயா, நோயின் அறிகுறியா?

குறட்டை: நோயா, நோயின் அறிகுறியா?

ஏன் ஏற்படுகிறது?
தேவைக்கு மேல் உடல் எடை அதிகரிக்கும்போதும்,
வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித
ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும்,
மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர்
வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும்
தசைநார்கள் வலுவிழப்பதாலும்,
குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள்
சாப்பிடுவதாலும், தொண்டையில் உள்ள
சதை தடிப்பதாலும், குழந்தைகளுக்கு டான்சில்
அல்லது அடினாய்டுகள் ஏற்படுவதாலும்
உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியைத்
தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.
எப்போதாவது குறட்டை விடுவதால்
பிரச்சினை இல்லை – விடுகிறவர்களுக்கு மட்டும்!
என்ன பிரச்சினை?
என்ன பிரச்சினையா? (குறட்டை ஆசாமிக்குத்
துணைவியாய் இருப்பவர்களைக் கேட்டால் தெரியும்).
குறட்டைச் சத்தம் அந்த அறையில் - சில சமயங்களில்
அந்த வீட்டில் - சில வேளைகளில்
பக்கத்து ஃபிளாட்டிலேயே – யாரையும் தூங்க
முடியாமல் செய்துவிடும். குறட்டைவிடுவதால்
அவர்களாலேயே தொடர்ந்து தூங்க முடியாது.
அப்படி வரும் தூக்கமும் ஆழ்ந்த தூக்கமாக
இருக்காது.
தங்களுக்குத் தூக்கக்
குறைவு ஏற்படுகிறது என்பதைச்
சம்பந்தப்பட்டவர்களாலேயே உணரவும் முடியாது.
அடுத்த நாள் வேலைக்குச்
செல்லும்போது அல்லது வேலையில்
இருக்கும்போது கண்ணைச் செருகும். ரத்தஅழுத்தம்
அதிகரிக்கும். இதயத் தசைகள் விரிவடையும். சில
வேளைகளில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும்
இது காரணமாக அமையலாம்.

Saturday, 19 April 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்!

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்
பயன்களும்!

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல்
ஆரோக்கியத்தைக் காப்பாற்ற
மூலிகை செடிகளின் இலை, வேர், காய்,
பழம், பட்டை, மற்றும், விதைகளைப்
பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த
சித்தர்கள், தன்வந்திரி, மூலனார்,
நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத்
திறனாலும் அனுபவத்தாலும் பல
மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில்
எழுதிவைத்துள்ளனர்.சுமார் 4000
வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில்
மூலிகை மருத்துவத்தைப்
பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர்
வேதமருத்துவத்தில் 341 மருந்துச்
செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.
தற்போது இது நடைமுறையில் உள்ளது.நம்
நாட்டில் சுமார் 2000 முதல் 7000
வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன.
இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச்
செடிகள் நாட்டு மருந்துகள்
தயாரிப்பிலும் 100 முதல் 150
மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும்
பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம்
மூலிகை செடியிலிருந்து
மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த
மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால்
மூலிகை மருந்து உற்பத்தியில் நம்
நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.
நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை,
மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப
நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன.
அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம்
அடைந்துள்ளோம்.
மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில்
தீராத நோய்களையும் பக்க விளைவுகள்
இன்றி குணப்படுத்தவும்,
பிணியின்றி வாழவும் இயற்கையான
முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள்,
மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும்,
ஆங்கில மருத்துவத்தை விட
மூலிகை மருத்துவப்
பணச்செலவு குறைவாக இருப்பதாலும்,
மேலும் பக்க விளைவுகளும்
இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம்
காட்டுகின்றனர்.இந்நிலையில்
இங்கு பரவலாக நாம் பயன்படுத்தும்
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்
பயன்களும்:-
*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை,
கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள்
பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும்,
சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பவுடர் :- அதிகமான
கொழுப்பை குறைக்கும். இரத்த
கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி,
ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பவுடர் :-
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த
மூலிகையாகும்.
*நவால் பவுடர் :- சர்க்கரை நோய்,
தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும்,
நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி,
ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச
கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும்,
உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி,
இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பவுடர் :- இரத்த
கொதிப்புக்கு சிறந்தது, உடல்
குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பவுடர் :-
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்
நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பவுடர் :-
நரம்பு தளர்ச்சி நீங்கும்,
ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு,
சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பவுடர் :- வாய் புண்,
வயிற்றுபுண் ஆறும்.
சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த
மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பவுடர் :- உள், வெளி,
நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல்
கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு,
அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண்
ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல்,
வரட்டு இருமல் நீங்கும், குரல்
இனிமையாகும்.
*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள்,
வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பவுடர் :-
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல்
நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பவுடர் :-
அனைத்து விஷக்கடிக்கும்,
சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை,
சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி,
முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி,
உடல் பொலிவு, சரும
பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு,
தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு,
கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பவுடர் :-
ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பவுடர் :-
கொழுப்புசத்தை குறைக்கும்.
மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை,
கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள்
அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள்
இருக்கும்.
*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக
கோளாறு, கல் அடைப்புக்கு மிகச்
சிறந்தது.
*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண்,
வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல்,
வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும்,
முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பவுடர் :- ஜீரண
கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு,
ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண்
நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பவுடர் :- நீரில்
கலந்து குடித்துவர சூடு குறையும்,
முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி,
வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பவுடர் :- உடல்
குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி,
நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக
கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால்
ஏற்படும் அதிகப்படியான
இழப்பை சரி செய்யும், உடல்
வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :-
தினசரி பூசி வர முகம்
பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர
நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும்,
வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பவுடர் :- உடல்
குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பவுடர் :- கை , கால்களில்
பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை,
பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்..

நாடி என்றால் என்ன?

நாடி என்றால் என்ன?

அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி
சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித
உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க
முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம்
மற்றும் பல
விஷயங்களுக்கு நமது முன்னோர்கள்
பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.
பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட
இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத
ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல
முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும்
கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் –
இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.
நாடி தலையில் இருந்து கீழ்
நோக்கி வரும்.
இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள
முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள்
காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் /
பித்தம் இந்த நாடி மூலம் மிக
துள்ளியமாக கணிக்க முடியும்.
இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல
நாடிகளை பற்றி விலாவாரியாக
கூறுகிறேன்.
வாத நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது Index finger
எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும்
வாத நாடி.
பித்த நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது நடு Middle
Finger விரலில் தெரிவது வாத நாடி.
கப நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது மோதிர
விரலில் Ring Finger தெரிந்தால் அது கப
நாடி.
ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது சிறிய
விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி
பூத நாடி – நாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது Suzhumunai
Imbalance என்னும் மூளை தடுமாற்றம்
தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும்
ஆள்காட்டி விரல் நடுவே தெரியும்
அல்லது நெற்றியில் தெரியும்
இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும்.
குரு நாடி – என்றால் வாதம் / கபம் /
பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின்
கூட்டு கலவை தான் குரு நாடி.
பிரனான் நாடி – இது சாதாரணமாக
யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில
விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல்
யாரவது இருப்பின் அவர்களின் பிராணம்
செல்கிறதா என்று பார்ப்பது.
ஆங்கில மருத்தவம் – அல்லது ஸ்டெத்தஸ்கோப்
சில வருடங்களுக்கு முன் தான்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம்
மூன்னோர்கள் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம்
செய்திருக்கின்றனர். வாதம் / கபம் /
பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல்
பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள்
மனிதனுக்கு வராது.