Wednesday, 1 January 2014

வேப்பமரத்தின் மருத்துவ மகிமைகள்...

வீட்டு வாசலில் வேம்பு –
நிழலுக்காகவும் குளிர்ச்சியான
காற்றுக்காகவும் நம் முன்னோர்கள்
பின்பற்றிய வழக்கம் இது.
கிராமங்களில்
வழிபாடு தொடங்கி பல்
துலக்குவது வரை வேப்ப மரம்தான்
வரம்!வேம்பின் தாவரவியல் பெயர்
‘அஸாடிராக்டா இண்டிகா’ (
Azadirachta indica). அரிட்டம்,
துத்தை, நிம்பம்,
பாரிபத்தி என்பவை இதன்
வேறு பெயர்கள். இது கடுமையான
வெப்பத்தையும் வறட்சியையும்
தாங்கி வளரும் இயல்புடையது.
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட
விடாது என்பது கிராமப்புற
மக்களின் அசைக்க முடியாத
நம்பிக்கை. இதனாலேயே,
கோயில்களில் புனித மரமாகப்
போற்றப்படுகிறது. பச்சை வேப்பன்
இலைகளைச் சுடு தணலில்
வாட்டும்போது வெளிவரும் புகை,
கொசுக்களை ஓட ஓட விரட்டும்.
வேப்ப மரத்தில்
இருந்து பிரித்து எடுக்கப்படும்
‘அஸாடிராக்டின்’(Azadirachtin)
என்னும் வேதிப் பொருளில்
இருந்து பூச்சிக்கொல்லிகள்
தயாரிக்கப்படுகின்றன. வேப்ப
மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப்
பணிகளுக்கு உதவுகிறது. அதன்
பிசின், கோந்து தயாரிக்கும் மூலப்
பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் எண்ணற்ற
பலன்களின் காரணமாக, இதைக்
‘கற்பக விருட்சம்’
என்றே சொல்வார்கள். இந்த மரத்தின்
ஒவ்வொரு பாகமும் அதிகமான
பயன்களைக்கொண்டது.

இலை:
வேப்பங்கொழுந்துடன் ஓமம்,
மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக்
கறிவேப்பிலை, சோம்பு,
சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித்
தனியாக நெய்விட்டு வதக்கி,
உப்புப் போட்டு, நீர் விடாமல்
மைபோல் அரைத்து எடுத்துத்
தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம்,
வயிற்றுப் பொருமல், மார்புச்
சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக்
கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல
குணம் கிடைக்கும். இது,
குடற்புழுக்களையும் நீக்கும்.
புண்களைக் கழுவவும், வேப்ப
இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப்
பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன்
குன்றிமணி அளவுக்கு வேர்ச்
சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம்
மூன்று முறை கொடுத்தால்,
அம்மை நோய் குணமாகும்.
வேப்பிலையைத்
தனியாகவோ அல்லது மஞ்சளுடன்
சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப்
பூசினால், சொறி சிரங்கு, வீக்கம்
மற்றும் அம்மைப் புண் ஆகியன
குணமாகும். வேப்பிலையை நீரில்
நன்கு ஊறவைத்துப் பின்
உலர்த்தி உப்பு சேர்த்துப் பல்
துலக்கினால், பயோரியா நோய்
கட்டுப்படும்.

பூ:
வேப்பம்
பூக்களை நெய்விட்டு வதக்கி,
உப்பு, புளி, வறுத்த மிளகாய்,
கறிவேப்பிலை இவற்றுடன்
சேர்த்து அரைத்துத் துவையல்
செய்து சாதத்துடன்
பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி,
ஏப்பம், சுவை இன்மை,
வாந்தி ஆகியன குணமாகும்.
வயிற்றுப் புழு நீக்கியாகவும்
இது செயல்படும். வேப்பம் பூவில்
வடகம் மற்றும் ரசம் போன்றவையும்
தயாரித்து உண்ணலாம். சுவையாக
இருக்கும்.

காய்:
மிகவும் கசப்புச்
சுவையை உடையது. காய்ச்சலைக்
குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை:
புழு நீக்கியாகச்
செயல்படும்.
கிருமி நாசினியாகவும்
செயல்படுகிறது.
விதைகளை அரைத்துப்
புழு உண்டாகிவிட்ட புண்களின்
மேல் தடவினால், புண்களில்
இருந்து புழுக்கள்
வெளியேறுவதோடு புண்ணும்
விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்:
வேம்பின்
விதையில் இருந்து எடுக்கப்படும்
எண்ணெயுடன் எருக்கு இலையைச்
சேர்த்து ஒத்தடம் கொடுத்தால்,
பிடரி வலி போன்ற
அனைத்து வலிகளுக்கும் நிவாரணம்
கிடைக்கும்.

பட்டை:
வேப்பன் பட்டையை நீரில்
இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45
மி.லி. அளவில் குடித்துவந்தால்,
காய்ச்சல் குணமாகும். உடல்
சோர்வையும் நீக்கும். வேப்ப மரப்
பட்டையைப் பொடி செய்து, நான்கில்
இருந்து எட்டு கிராம் வீதம் தினம்
இருவேளை உட்கொண்டால், வாந்தி,
சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்:
உலர்த்தி சூரணம்
செய்து இரண்டில்
இருந்து ஆறு கிராம் அளவில்
உட்கொண்டால், மேகரோகம்
குறையும்.

புண்ணாக்கு:
வேப்பன் புண்ணாக்கு,
பயிர்களுக்கு நல்ல உரமாகும்.
இதை இடித்துப்
பொடி செய்து வறுத்துத்
தலைவலிக்குப் பற்று போடலாம்.
இது போல் வேம்பின் மருத்துவ
பயன்கள் இன்றியமையாதது. மேலும்
பல நோய்களுக்கு அருமருந்தாக
விளங்கும் வேம்பின்
குணநலன்களை அறிந்துகொள்வோமா?
* வேப்ப எண்ணையுடன் தூய
தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ்
எண்ணையை 1:4 என்ற விகிதத்தில்
கலந்து உடலில் தேய்த்தால்,
பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில்
இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த
கலவை தோல் எரிச்சல்,
சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள்
ஆகியவற்றையும்
குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட
தேனீரைப் பருகும்போது,
தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும்
கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய்
எண்ணை அல்லது ஆலிவ்
ஆயிலை கலந்து தலைக்கு தடவி,
ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர்
குளிக்கவும். தொடர்ந்து 3
வாரங்களுக்கு இப்படி தேய்த்துக்
குளித்து வர, நீண்ட நாட்களாக
இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும்
பேன் தொல்லைகள் நீங்கி,
ஆரோக்கியமான பளபளப்பான
தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3
வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க
வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப
இலை கஷாயத்துடன்,
சிறிதளவு தேன் கலந்து பருகி வர,
தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப
இலையை உலரவைத்து பொடியாக்கி,
சிறிதளவு நீர்
கலந்து பசையாக்கி முகத்தில்
தடவி வர, பருக்கள் மற்றும்
கொப்புளங்கள் நீங்கி முகம்
பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை,
மாலை இருவேளைகளிலும் 2
துளிகள் மூக்கில் இட்டு வர
சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில்
வேப்ப விதை மற்றும் வேப்ப
எண்ணையை தெளித்து வர,
கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக
இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40
முதல் 50 வேப்ப இலைகளைப்
போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க
வைக்கவும்.
பிறகு ஆறவைத்து வடிகட்டி
குடிக்க, உடலில் உள்ள தசைகள்
மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப
இலைகளை தினமும் மென்று வர,
ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன்,
அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல்
சூட்டை தணிக்கும் சிறந்த
மருந்தாகவும் இது பயன்படுகிறது.

No comments:

Post a Comment