இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும்.
இது பல மருத்துவப் பயன்களைக்
கொண்டிருக்கிறது. சுக்கு, மிளகு,
திப்பிலி என்பது திரிகடுகம்
எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு,
மிளகு, திப்பிலி என்னும்
மூலிகைகள்
உடலுக்கு நன்மை தரக்கூடியது.
இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும்
ஒரு விவசாய பயிராகும். இது பல
நோய்களுக்கு அருமருந்தாக
உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான
வைரஸைத் தாக்கி அழிக்கிறது;
தலைவலியைப் போக்குகிறது.
இரத்த ஓட்டம் சீராக இருக்க
உதவுகிறது; கொழுப்புச்சத்தைக்
குறைக்கிறது மத்திய
நரம்பு மண்டலத்தைத்
தூண்டி இருதய, சுவாசத் தசைகள்
சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத்
தடுக்கிறது.
செரிமானத்தை சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத்
தடுக்கிறது. மகளிரின்
கருப்பை வலிக்கும்,
மாதவிலக்கு நேரங்களில்
அடிவயிற்றில் உண்டாகும்
வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம்,
காயங்கள், சிரங்குகள்
போன்றவற்றிக்கும் இது நல்ல
மருந்தாகும். இஞ்சியானது பசியைத்
தூண்டுவதுடன்,தேவையற்ற
கழிவுகளை வெளிக் கொணர
பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள்,
சிறுகுடல், பெருங்குடல்
உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம்
சுத்தப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான
நோய்களுக்கு காரணமாக இருக்கும்
மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ
உணவு வகைகளை சமைக்கும்போது,
வெள்ளைப்பூண்டும், இஞ்சியும்
அதிக அளவில்
சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சி சாறை பாலில்
கலந்து சாப்பிட வயிறு நோய்கள்
தீரும்.
இஞ்சியை நன்றாக சுட்டு,
அதை நசுக்கி உடம்பில் தேய்க்க
பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம்
கலந்து சாப்பிட வாதக்
கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
காலையில் இஞ்சி சாறில்,
உப்பு கலந்து மூன்று நாட்கள்
சாப்பிட பித்த தலைச்சுற்று,
மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு,
தேன் கலந்து சூடாக்கி காலையில்
வெறும் வயிற்றில்
ஒரு கரண்டி வீதம்
சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர
தொப்பை கரைந்து விடும்.
இஞ்சி சாறில், தேன்
கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
ஒவ்வொருநாளும் உணவில்
ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்
கொள்வது, இதய
நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல்
காக்கும். இஞ்சியானது இதய
ரத்தக்குழாய்கள் எதிலும்
அடைப்பு உண்டாகாமல் தடுத்தும்,
மேலும் உண்டாவதைக் கரைத்தும்
உதவுவதாக ஆய்வுகள்
கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும்
உபயோகிக்கும் போது, அதன்
தோலை நீக்குவது மிக
முக்கியமானது. இல்லை எனில்
மாறாக வயற்றுக்
கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம்
செய்யும்போது அதன் மேல்
தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன்
மேல் தோல் நஞ்சாகும். அதே போல்
சுக்கை சுத்தம் செய்யும்போது அதன்
மேல்
சுண்ணாம்பை தடவி காயவைத்து பின்
அதை நெருப்பில் சுட்டு பின் அதன்
தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானது; சுத்தம்
செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
தினம்
ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர்
மோரில் கரைத்துக் குடித்தால்
இடுப்புப் பகுதியில்
கொழுப்பு சேராமல்
பார்த்துக்கொள்ளும். சேர்த்த
கொழுப்பையும் கரைக்கும். எந்த
பானம் குடித்தாலும், அதில்
ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள்.
40 வயதுக்கு பின்
மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட
வேண்டாம்....!
Friday, 24 January 2014
இஞ்சி
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment