Thursday, 2 January 2014

நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ நாட்டு மருத்துவ குறிப்புகள்...

இறைவன் பூமியை படைத்து அதில்
இயற்கை வளங்களை உருவாக்கி அவற்றை அனுபவிக்க
மனிதனையும் படைத்தான்.
பூமியில் உள்ள
அனைத்து உயிரினங்களுக்கும்
தேவையான அனைத்தையும்
படைத்துள்ளான். இவற்றை சரியான
முறையில் பயன்படுத்தாமல்
இருப்பது மனிதன் மட்டுமே.
அவனது பேராசை இதற்கு காரணமாக
உள்ளது எனலாம்.
இதனால் பல்வேறு நோய்கள்
உண்டாகி, உடல் ஆரோக்கியம்
பாதிக்கப்பட்டு மகிழ்ச்சியை தொலைத்து மன
உளைச்சலோடு வாழ்ந்து வருகிறான்
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும்
பெற பின்வரும்
முறைகளை கடைப்பிடிக்க
வேண்டியது அவசியமாகும்.
இவை அனைத்தும்
இயற்கையோடு இணைந்ததாகும்....

இயற்கை உபாதைகளை அடக்கவோ,
தவிர்க்கவோ கூடாது. காலை,
மாலை என 2 வேளைகள் மலம்
கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும்.
இயற்கை உபாதைகளுக்குப்
பிறகு கைகளை சுத்தமாக கழுவ
வேண்டும்.
ஆண்டுக்கு இருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து
உட்கொள்ள வேண்டும். இதன் மூலம்
உடலின் அனைத்துப்
பகுதிகளுக்கும் சத்துக்கள் மற்றும்
ஆக்சிஜன் கிடைக்கும்.

வாரம் 2
முறை அல்லது ஒரு முறையாவது நல்லெண்ணெய்
தேய்த்துக் குளிக்க வேண்டும்.
அன்றைய நாளில் தயிர், மோர்,கீரை,
மீன், கருவாடு, நண்டு, இறால் மீன்
போன்றவற்றை உண்ணக் கூடாது.
சைனஸ் தொந்தரவு, மூக்கடைப்பு,
சளி, இருமல், தும்மல், காய்ச்சல்
ஆஸ்துமா உள்ளவர்கள் எண்ணெய்
தேய்த்து குளிக்க கூடாது.
தினசரி நல்லெண்ணெய்,
அல்லது தேங்காய்
எண்ணெயை தலையில் தேய்க்க
வேண்டும். இல்லாவிடில்
கண்பார்வை மங்குதல், பேன்,
தலைவலி, தூக்கமின்மை,
மறதி போன்றவை ஏற்படும். எள்
எண்ணெய் தலைக்கு நன்மை பயக்கும்.
தலைக்கு அடிக்கடி சாயம்
பூசுவதை தவிர்க்க வேண்டும்.
ஷாம்பு போட்டு குளிப்பது, கிரீம்
சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

தரமற்ற எண்ணெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்படும்
பதார்த்தங்களை உண்ணக் கூடாது.
வீட்டு பலகாரங்களையும்
அளவோடு உண்ணுதல் நலம்..
குளிர் பானங்களை அருந்துவதால்
சளி, இருமல், சைனஸ் தொந்தரவுகள்
நாமே காசு கொடுத்து அழைத்துக்
கொள்கிறோம். இதனை தவிர்க்க
வேண்டும்.

அசைவ உணவுகளை அடிக்கடி உண்ணுவதை தவிர்க்க
வேண்டும். உணவில் தினமும் 6
சுவைகளும்
இருக்குமாறு உண்ணுதல் நலம்
பயக்கும். எந்த சுவையும்
அளவோடு இருக்க வேண்டும். எந்த
சுவையும் மிகுந்தாலும்,
குறைந்தாலும் நோய் ஏற்படும்
அபாயம் உண்டு.

மீன், நண்டு, ராட்டு,
கருவாடு சாப்பிடும்
பொழுது தயிர், மோர்,
கீரை வகைகளை தவிர்த்து மிளகு,
பூண்டு, சீரகம், திப்பிலி சேர்ந்த
ரசத்தை மட்டும்
உணவோடு சேர்த்து சாப்பிடலாம்
அல்லது தனியாக குடிக்க அஜீரணம்
ஏற்படாது, வாந்தி, பேதி ஆகாது.

முன்பு உண்ட உணவு செரித்த
பின்பு அடுத்த
வேளை உணவு உண்ண வேண்டும்.

அசைவ உணவு சாப்பிட்ட
பிறகு எலுமிச்சை பழரசம் + தேன் +
இஞ்சிச்சாறு தேவையான
அளவு கலந்து குடித்தால்
வயிறு உப்புசம், செரியாமை,
குமட்டல், வாந்தி, புளித்த ஏப்பம்
இவைகள் தீரும்.

மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 3
லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தாகத்தை அடக்குவது,
சிறுநீரை அடக்குவது,
உணவு மாறுபாடு, தொற்று நோய்
கிருமிகளின் தாக்கம்
இவைகளாலே சிறு நீரகத்தில்,
பித்தப்பையில் கற்கள்
உருவாகின்றன.

நாம் தினசரி உணவாகப்
பயன்படுத்தும் அனைத்துமே நம்
உடல் உறுப்புகளை பாதுகாக்கும்
அற்புத மருந்துகள்.
உணவே மருந்து ஒவ்வொன்றுமே பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிக்
கொண்டு அனைத்து உறுப்புகளையும்
பாதுகாத்து நோய் வரவிடாமல்
தடுக்கும் தடுப்பு மருந்துகள்.

தினம் ஒரு பயிர்வகை தினம்
ஒரு பழவகை தினம்
ஒரு கீரை வகை தினம்
ஒரு காய்வகை தினம் இரு தானிய
வகை உணவில் சேர்த்துக் கொள்ள
நலமுடன் வாழலாம்.

அனைத்து வீட்டிலும்
சத்து மாவு தயாரித்துக்
கொள்ளுங்கள்.
இரவு வெகுநேரம் விழித்திருக்கும்
பழக்கம் நிச்சயம்
நோயை உண்டாக்கும். இரவு சீக்கிரம்
படுத்து அதிகாலை சீக்கிரம் (4-4.30)
எழுந்திருக்க புத்தி தெளிவு, மன
அமைதி, உடல் சுறுசுறுப்பு,
நம்பிக்கை கிடைக்கும்.

தரமற்ற ஐஸ்கிரீம், கேக், சிப்ஸ், பப்ஸ்,
சாக்லேட், மிட்டாய் போன்றவைகளில்
எந்தவித சத்துக்களும் இல்லை.
இவைகளை எடுத்துக் கொள்ள எந்த
மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை.
பின் ஏன்
எடுத்துக்கொண்டு நோயை வரவேற்கிறீர்கள்.

சத்து குறைபாடு, உடல்
வளர்ச்சியின்மை, உடல் மெலிவு,
கை, கால் சோர்வு, அசதி,
இவைகளுக்கு சத்து மாவு பயன்படுத்தலாமே!
தரமாகவும் இருக்கும் செலவும்
குறைவு தானே. உடற்பயிற்சி,
நடைப்பயிற்சி, ஆசனங்கள்
செய்யலாம்.வீட்டு வேலைகள், தோட்ட
வேலைகள் செய்யலாமே உடலும்
உறுதி பெறும். மனமும்
தெளிவுறும்.

இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம்,
வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலம்,
மல்லி, கறிவேவப்பிலை,
புதினா இவை எல்லாம் நம் உடலைக்
காக்கும் கற்ப மருந்துகள்.

நம்மைச் சுற்றியுள்ள மருத்துவ
குணமுள்ள மூலிகைகளையும்
மருந்தாக்கி கொடுத்து நோயை முற்றிலும்
நீக்கி நீண்ட ஆயுளையும்
நிம்மதியையும், மகிழ்ச்சியையும்
கொடுப்பதே நாட்டு வைத்தியம்....!

1 comment:

  1. நாம் நாள்தோறும் உபயோகிக்கும் வீட்டு உணவு பொருட்கள் கொண்டு மருத்துவ குறிப்பு தந்தமைக்கு நன்றி

    ReplyDelete