செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக
காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும்
வரை மூடக்கூடாது.
*கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும்
பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது,
எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும்,
வெங்காயத்தையும் ஒன்றாக
வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும்,
உருளைக்கிழங்கும் வைக்கக்
கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது,
எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன்,
குழம்பு அதிகமாக
கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க
நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்
கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில்
இருக்கும்
போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை...
*மாவு பிசைந்தவுடனேயே பூரி போட
வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட
ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
* குருமாவை இறக்கும் போது, கரம்
மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில்,
நான்கு மிளகை போட்டு வைக்க
வேண்டும்.
*குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற
வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள்
இரவே நறுக்கி, தண்ணீரில் போட
வேண்டும்.
* கடலை உருண்டைக்கு,
வெல்லப்பாகு, முத்தின பாகாக
இருக்க வேண்டும்.
* வற்றல் குழம்பை, தாளித்த
எண்ணெய், மேலே வரும்
வரை கொதிக்க விட வேண்டும்...!
No comments:
Post a Comment