கலை என்பது மனித மனங்களில்
ஊறிப்போன ஒரு விஷயமாக
உள்ளது. தமிழகத்தின் பண்டைய
காலங்களில் இயல், இசை, நாடகம்
என்று கலையை மூன்றாகப்
பண்படுத்தி வைத்திருந்தனர் நம்
முன்னோர்கள். இதேபோல் நாகரீகத்
தொட்டில்கள் எனப்படும் பண்டைய
கிரேக்கர்களின் கலை ரசனைக்கும்,
கட்டிட கலைக்கும் சான்றாக
விளங்குகிறது அக்ரோபாலிஸ்
மலைச் சரிவில் அமைந்துள்ள
கலை அரங்கம்.
கிரேக்கத்தின் அன்றைய எஃபிடாரஸ்
நகரில் கட்டப்பட்டுள்ள இந்த டூரிங்
டாக்கீஸ் சுமார் 2 ஆயிரத்து 500
ஆண்டுகளைக் கடந்தும் இன்றும்
கம்பீரமாக
நின்று கொண்டிருக்கிறது.
கிரேக்கர்கள் கி.மு. ஆறாம்
நூற்றாண்டின் மத்தியில்
இருந்து வசந்த காலத்தை கொண்டாட
நாடக விழாக்களும், போட்டிகளும்
நடத்துவது வழக்கம்.
டையோனிசஸ் என்ற கிரேக்க
கடவுளின் நினைவாக நடத்தப்படும்
இந்த விழாக்களை ஏராளமானோர்
கண்டுகளிக்க வசதியாக
மிகப்பிரம்மாண்டமான
கலை அரங்குகள் கட்டப்பட்டன.
அவற்றில் ஒன்றுதான் எஃபிடாரஸ்
நகரில் உள்ள கலை அரங்கம். சுமார்
15 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும்
வகையில் கட்டப்பட்டுள்ள இந்த
அரங்கம், அரை வட்ட வடிவில்
அமைந்துள்ளது.
அக்ரோபாலிஸ் மலை அடிவாரத்தில்
பாறைகளை குடைந்து இதனை உருவாக்கியிருப்பதால்
நடிகர்களின் குரல்கள் மலையில்
மோதி எதிரொலிக்கின்றன. இதனால்
எந்த மைக் வசதியும்
இல்லாமலேயே கடைசி வரிசை ரசிகர்களும்
நாடக
உரையாடல்களை கேட்டு மகிழ்ந்தனர்.
இது அந்தக் கால டி.டி.எஸ். எபெக்ட்
போலும்.
இதற்கு வசதியாக ஒரே சமயத்தில்
பல கதாபாத்திரங்கள்
பேசுவது போன்ற காட்சிகள்
தவிர்க்கப்பட்டன. ஏனென்றால்
அதற்கும் எதிரொலிப்புதான்
காரணம். ஒரே நேரத்தில் பல
கதாபாத்திங்கள் பேசினால்
பார்ப்பவர்களுக்கு எதுவும்
புரியாது என்பதால் டெக்னிக் ஆக
தடுத்து விட்டனர்.
நாடக நடிகர்கள் அரங்கின் நடுவில்
உள்ள ‘ஆர்கெஸ்ட்ரா’
என்று அழைக்கப்பட்ட திறந்த
வெளிப்பரப்பில் தங்களின்
திறமைகளை வெளிப்படுத்தினர்.
பண்டைய கிரேக்கத்தின் இந்த
பிரம்மாண்ட கலை அரங்கம்
உலகிலேயே மிகப் பழமையான,
நாகரிகமான நாடகக் கூடமாக
இது இன்றும் திகழ்கிறது....!
Thursday, 16 January 2014
2500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களின் DTS தியேட்டர்கள்...
Labels:
அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment