பொன்னாங்காணியின் மருத்துவ
பலன்கள்...
கீரைகளின்
ராஜா என்றழைக்கப்படும்
பொன்னாங்காணி கீரையில்,
எண்ணற்ற மருத்துவ குணங்கள்
நிறைந்துள்ளது.
சாதாரணமாக கீரையின்
காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த
சூழலிலும் வளரக்கூடிய கீரை தான்
பொன்னாங்காணி.
இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து,
கொழுப்புச்சத்து, மினரல் சத்து,
கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற
சத்துக்கள் அடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து 27
நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும்
நிலவைப் பார்க்கலாம்
என்று ஒரு பழமொழி உண்டு.
அந்த
அளவிற்கு கண்பார்வைக்கு மிக
துல்லியமாக தெரிய உதவும்.
பயன்கள்
இக்கீரையுடன் மிளகும், உப்பும்
சேர்த்து சாதத்துடன்
சாப்பிட்டு வந்தால் உடல்
எடை குறையும்.
துவரம் பருப்பு, நெய்யுடன்
சேர்ந்து சாப்பிட்டால் உடல்
எடை கூடும்.
உடலை, தோலைப் பளபள
என்று மாற்றுவதில்
பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல்
நோய்களை குணப்படுத்த ஏற்றது.
இன்று நாம் உண்ணும் உணவிலும்
சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம்
கலந்திருப்பதால் அவை இரத்தத்தில்
நேரடியாக கலந்துவிடுகின்றன.
இதனால் இரத்தம்
அசுத்தமடைகின்றது.
பொன்னாங்காணி கீரையை நன்றாக
அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன்
பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம்,
சீரகம், பூண்டு, மிளகுத்தூள்
சேர்த்து வேகவைத்து மசியல்
செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த
இரத்தம் சுத்தமாகும்,
உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
அதிக வெயிலில்
அலைந்து வேலை செய்பவர்களுக்கும்,
கணனி முன் அதிக நேரம்
அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும்,
சரியான தூக்கம்
இல்லாதவர்களுக்கும் கண்கள்
சிவந்து காணப்படும், கண்களில்
எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் பொன்னாங்காணிக்
கீரையை பொரியல்
செய்து சாப்பிட்டு வந்தால்
இப்பிரச்சினை நீங்கும்.
பொன்னாங்காணிக் கீரை வாய்
துர்நாற்றத்தை நீக்கும்.
இதயத்திற்கும் மூளைக்கும்
புத்துணர்வு ஊட்டும்.
No comments:
Post a Comment