Wednesday, 1 January 2014

தேன்..


01. உடல் ஆரோக்கியத்திற்கு தேன்
வழி வகுக்கும், தேனும் வெந்நீரும்
கலந்து அருந்தினால் பருத்த உடல்,
மெலியும், ஊளைச் சதை குறையும்
உடல் உறுதி அடையும்.
02. தேனுடன் எலுமிச்சம்
பழச்சாறு கலந்து அருந்தினால்
வாந்தி, குமட்டல் ஜலதோஷம்,
தலை வலி குணமாகும்.
03. தேனுடன்
வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால்
கண்பார்வை பிரகாசம் அடையும்.
04. தேனும், முட்டையும், பாலும்
கலந்து சாப்பிட்டுவந்தால்
ஆஸ்துமா உபாதையிலிருந்து
தப்பலாம்.
05. இருமல், சளித்
தொல்லை நுரையீரல் தொடர்பான
நோய் எது இருந்தாலும் பார்லிக்
கஞ்சியை வடிகட்டி அதில் தேன்
கலந்து சாப்பிட, இருமல்
மட்டுப்படும். சளித்
தொல்லை குறையும்.
06. தேனையும் மாதுளம் பழ
ரசத்தையும் சம அளவு சேர்த்துத்
தினமும் சாப்பிட்டால் இருதய
நோய்கள் தீரும்.
07. உடம்பில் இரத்தக்
குறைவு அல்லது சோகை நோய்
இருந்தால் தேனும், பாலும்
சாப்பிட்டு வந்தால் சோகை நோய்
நீங்கும்.
08. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து,
நன்றாகக் குழைத்து பழுக்காத
கட்டிகள் மேல் பூச கட்டிகள்
பழுக்கும்.
09. மீன் எண்ணெயோடு தேனைக்
கலந்து உண்டு வந்தால், ஆறாத
புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்ச
ி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ்
வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்
குத் தொப்புளைச் சுற்றிலும் தேன்
தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம்
பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த்
தொந்தரவுகள் குறையும். கல்லீரல்
வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன்,
அரை அவுன்ஸ்
இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களி
தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த
சுத்தியும், இரத்த விருத்தியும்
ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும்
நீங்கும்.
14. அல்சர்
நோய்க்கு சாப்பாட்டிற்கு முன்
இரண்டு கரண்டித் தேனைத்
தொடர்ந்து சாப்பிட்டு வர,
குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன்
சமளவு தேன் கலந்து பருகினால்
நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப்
பொருளாகும். தேன் மூலம் எல்லாப்
பிணிகளையும் நீக்கமுடியும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில்
தேனை நாவால் தொட்டுச்
சாப்பிட்டு வந்தால் எந்த
வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக
இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில்
ஒரு டீஸ்பூன் தேன் கலந்து,
பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச்
சாற்றையும் சேர்த்துச்
சாப்பிட்டு வந்தால் உடல்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக
இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள
சளி எல்லாம் கண் காணாத
இடத்திற்கு ஓடிவிடும். குடல்
மற்றும் வயிற்றுக் கோளாறுகள்
நீங்கிவிடும். குளிர்ச்சியால்
ஏற்படும் எல்லா வியாதிகளையும்
உடல்
எதிர்த்து நின்று தடுத்துவிடும்.
இதய பாதிப்புகள் நீங்கி இதயம்
பலம் பெறும். புதிய இரத்தம்
உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச்
செல்வதற்கு முன்பும்
பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத்
துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய்,
ரோஜா இதழ்கள்
சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில்
காய வைக்கவேண்டும்.
பின்பு ஒரு ஸ்பூன் வீதம்
காலையும், மாலையும்
சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்
குணமாகிவிடும்.
20. என்றும் இளமையுடன் இருக்க
வேண்டு-மென விரும்புவோர்
தினமும் தேனை அருந்தவேண்டும்.
நாற்பது வயதைக் கடந்தவர்கள்
கண்டிப்பாகத் தினமும்
தேனை அருந்திவர வேண்டும்.

No comments:

Post a Comment