இன்றைய உலகமயமாக்கப்பட்ட
காலகட்டத்தில் படிப்பு, வேலை,
வியாபாரம் என அனைத்திற்கும்
அடிப்படை ஆங்கிலம் என்ற
நிலை உருவாகி விட்டது.
ஆங்கிலம்
தெரிந்திருப்பது உலகளாவிய
நோக்கித்திலான எண்ணங்களையும்,
தன்னம்பிக்கையும் தரும். எந்த
ஒரு மொழியையும் கற்பதில்
என்றுமே தவறில்லை.
சமுதாயாத்தில் பெரும்பாலும்
யாருடன் தொடர்பு கொள்ளவும்
ஆங்கில மொழி அத்தியாவசியமாக
விட்டது.
குறிப்பாக வேலைக்கான
நேர்காணலில் இன்றைய இளைய
தலைமுறையினரில் பெரும்பாலும்
திறமை இருந்தும் ஆங்கில
மொழி தெரியாத ஒரே காரணத்தால்
குறுகிப் போகின்றனர்.
எந்தமொழியையும் எளிதில்
கற்றுவிட முடியும் என்ற
நம்பிக்கையுடன் கீழ்கண்ட
ஆலோசனைகளை உங்களது வாழ்வில்
பயன்படுத்த துவங்குங்கள்...
விரைவில் உங்களுக்குள்
ஒரு மாற்றம் தெரியும்.
ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி;
நம்மால் படிக்க முடியாது... போன்ற
எதிர்மறையான
எண்ணங்களை முதலில்
உங்களது மனதில்
இருந்து முழுவதுமாக
அகற்றிவிடுங்கள். தினமும்
குறைந்தது 30
நிமிடங்களாவது ஆங்கிலம்
நாளிதழ், சிறுகதை, கவிதை,
கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்...
போதுமான வார்த்தை ஞானம்
இல்லை என்றால் எந்தமொழியிலும்
திறம்பட
உங்களது கருத்துக்களை வெளியிட
முடியாது என்பதை நினைவில்
கொள்ளுங்கள். எனவே,
முடிந்தவரை ஆங்கில
வார்த்தைகளின்
அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத
வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான
அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.
தவறாகப்
பேசு விடுவோமோ..மற்றவர்கள்
ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோமோ...போன்ற
எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில்
பேசப் பழகுங்கள்.
ஆங்கில
டி.வி செய்தி சேனல்களை பாருங்கள்.
பிரிட்டிஷ்
மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள
பி.பி.சி சேனலையும், அமெரிக்க
மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள
சி.என்.என் சேனலையும், இந்திய
ஆங்கில
மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள
என்.டி.டி.வி போன்ற இந்திய
ஆங்கில செய்தி சேனல்களையும்
பார்க்கலாம்.
தனிமையில்
உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில்
பேசி,
அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள்.
பின்,
அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில்
உள்ள தவறுகளை அறிந்து,
அடுத்தமுறை அதனை தவிர்க்க
பயிற்சி பெறுங்கள். எந்த
ஒரு மொழிக்கும் இலக்கணம்
அவசியம். பேசும்திறன், காலங்கள்,
வினைச் சொற்கள்
போன்றவை ஒரு மொழியில்
முக்கியத்துவம் பெறுகின்றன.
அவற்றை முழு ஆர்வத்துடன்
கற்றுக்கொள்ள முயலுங்கள்.
டிக்ஸ்னரி’ (அகராதி)
யை உங்களது அபிமான
நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள்
குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான
விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன்
அறிந்து கொள்ளுங்கள். அந்த
வார்த்தைகளை உங்களது தகவல்
தொடர்பில்
தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
ஆங்கில மொழியில் புலமை பெற்ற
ஒருவரை ஆங்கில
நாளிதழை சத்தமாக வாசிக்க
சொல்லி, அவர்
எவ்வாறு உச்சரிக்கிறார்
என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
டய்ரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக்
கொள்ளுங்கள். அதனை நீங்கள்
மட்டுமே பயன்படுத்துவதால்,
தவறாக எழுதிவிடுவோமோ என்ற
பயம் உங்களுக்கு பெரும்பாலும்
இருக்காது. தினமும்
நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும்
உங்களது ஆர்வத்தின்
அடிப்படையில் மட்டுமே மிகச்
சிறப்பாக செயல்படுத்த முடியும்
என்பதை அடிமனதில்
பதிந்துகொண்டு,
பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம்
விரைவில் உங்களது நாக்கில்
தவழும்...!
Friday, 31 January 2014
ஆங்கிலம் speak easy...
ஆச்சர்யம் தரும் நாஸ்கா கோடுகள்...
பெரு நாட்டிலுள்ள
மச்சு பிச்சு மர்மத்தை விட தீர்க்க
முடியாத மர்மம் தான்
அதே நாட்டிலுள்ள
நாஸ்கா கோடுகள்!எந்த விசயமாக
இருந்தாலும் அறிவியல் சார்ந்த
பதிலைத் தர விஞ்ஞானிகளும்
தவறுவதில்லை. அப்படிப் பட்ட
விஞ்ஞானிகளின் அறிவிற்கே சில
சமயம் சவால் விடும் படியாக
அமைந்து விடுகிறது முன்னோர்களின்
படைப்புகள்!!
எத்தனை சூத்திரங்களைக்
கொண்டு அனுகினாலும்
முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில்
உள்ள மர்மத்தையும் சிக்கலையும்
அவிழ்க்க முடிவதில்லை!!
அப்படி ஒரு முடிச்சு தான்
பெரு நாட்டு நாஸ்கா மக்கள் வரைந்த
கோடுகள்!! கோடுகள் வரைவதில்
அப்படி என்ன பெரிய மர்மம்..?
இவர்கள் வரைந்த கோடுகளின்
பிரம்மாண்டமும், வரைந்த முறையும்
தான் பிரமிப்பிற்குக் காரணம்.
இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த
நாஸ்கா நிலத்தில செந்நிறத்தில்
கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன.
இந்தக் கூழாங்கற்கள் அகற்றப்படும்
இடம் வெளிர் நிறமாக மாற,
இதே முறையில்
கோடுகளை வரைந்துள்ளனர்.
இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள்
அளவிற்கு உள்ள இடத்தில்
ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது.
ஒரு இடத்தில் ஆரம்பிக்கும்
கோடு சிறிய காதுகள், தலை,
கால்கள், அளவான உடல்,
ஆறேழு சுற்று சுற்றிய வால் என
சீராக வரையப்பட்டு ஆரம்பித்த
இடத்திலேயே முடிகிறது.
பாடப்புத்தகத்தில்
ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம்
சிரமப்படும் வேளையில்,
எப்படி பிரம்மாண்டமான
கோடுகளைத் தீட்ட முடிந்தது..?
இந்தக் குரங்கின் முழு உருவத்தைப்
பார்க்க வேண்டுமென்றால்
குறைந்தது ஒரு கிலோமீட்டர்
உயரத்திற்குச் செல்ல வேண்டும்.
அதுவும் இப்பொழுது இருப்பதைப்
போல உயரத்தில்
இருந்து கண்கானிக்கும் கருவிகள்,
கட்டுமானத்துறையில்
பயன்படுத்தப்படும் அளவெடுக்கும்
கருவிகள் எதுவும் இல்லாத 2000
ஆண்டுகளுக்கு முன்பு!
நாஸ்கா கோடுகள்
அமைந்திருப்பது பெரு நாட்டில்
உள்ள நாஸ்கா மற்றும் பால்பா என்ற
இரண்டு இடங்களுக்கு நடுவிலான
80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
வறண்ட பீடபூமியில்!! இந்தப்
பீடபூமியில் காற்று,
மழை சுவடே இல்லாததால் 2000
ஆண்டுகளாகியும் அழியாமல்
உள்ளன. குரங்குகள், பறவைகள்,
சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள்
என பெரிய உருவங்களும்,
முக்கோணம், நாற்கரம் போன்ற
வடிவங்களும் ஏராளமான நீண்ட
கோடுகளும் பீடபூமி முழுவதும்
வரையப்பட்டுள்ளன.
நாஸ்காக்
கோடுகளை ஆராய்ச்சி செய்யும்
வல்லுனர்கள், "எப்படி பல
நூறு மீட்டர்கள் தொலைவில்
இருந்து வரும் 60
கோடுகளை ஒரே புள்ளியில்
இணைத்திருக்கிறார்கள்"
என்று வியக்கிறார்கள்.
விண்கலன்களில்
இருந்து எடுக்கப்பட்ட
புகைப்படங்களிலும் தெளிவாகத்
தெரியும் படியான
ஆயிரக்கணக்கான
கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள்
வரைந்திருக்கிறார்கள்...? இந்தக்
கோடுகள் கூறும் அர்த்தமென்ன..?
மரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர்
தன் வாழ்நாள் முழுவதையும்
நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார்.
நாஸ்கா கோடுகள் வின்வெளியில்
உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும்,
சூரியன் மற்றும் சந்திரனின்
உதயத்தையும் அஸ்தமனத்தையும்
குறிப்பதாகக் கூறியுள்ளார்.
இவருடைய ஆராய்ச்சி முடிவையும்
தீர்வாக ஆராய்ச்சியாளர்கள்
ஒத்துக்கொள்வதில்லை.
வேற்று கிரக உயிரினங்கள்
வந்திறங்க உதவுவதற்கே இந்த
கோடுகள்
வரையப்பட்டுள்ளதென்று சிலரும்,
இறைவனை வழிபடுவதற்கும் தங்கள்
இருப்பிடத்தைத்
தெரிவிப்பதற்காகவும்
வரையப்பட்டது என்று சிலரும், மிக
நீளமான ஆடைகளின்
இழைகளை நெய்வதற்காக இந்தக்
கோடுகள் வரையப்பட்டதென்றும்
சிலர் கூறுகிறார்கள்.
நூற்றுக்கணக்கான
ஆராய்ச்சியாளர்கள் தங்கள்
தீர்வை வெளியிட்டாலும்,
நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக்
கொண்டே இருக்கிறது. சுற்றுலாப்
பயணிகளுக்கு கால் நூற்றாண்டாகத்
திறந்துவிடப்பட்டுள்ளது. பெரிய
அளவிளான பலூன்களில்
ஏறி ஒரு கிலோமீட்டர் உயரத்தில்
பறந்தபடியே இந்தக் கோடுகளையும்
உருவங்களையும் பார்க்க முடியும்.
நம் முன்னோர்கள் நம்மை விடவும்
சிறந்து விளங்கினார்கள்
என்பதற்கு நாஸ்கா கோடுகள்
ஒரு எடுத்துக்காட்டு தான்...!
Monday, 27 January 2014
சீனியின் உபயோகமும் அபாயமும்...
சீனியின் உபயோகமும் அபாயமும்.
உங்கள் சட்டைக்கொலரில் உள்ள
அழுக்கு எந்த
சோப்பைக்கொண்டு தேய்த்தாலும்
போக மறுக்கிறதா? கவலைப்படாமல்
அரை தேக்கரண்டி சீனியை எடுத்து
தேய்த்துப்பாருங்கள்.
நிச்சயமாகப்போய்விடும். It is cane
ஆக, சட்டை அழுக்கைப்போக்கும்
ஒரு வேதிப் பொருளைத் தான் நாம்
சீனி என்ற பெயரில் அன்றாடம்
அள்ளி அள்ளித்தின்று
கொண்டிருக்கிறோம். விடாத
மை அழுக்கையே சில நொடிகளில்
போக்கும் இந்த சீனியை சலிக்காமல்
தினந்தோறும் உட்கொள்ளும்
நமது குடல் என்ன பாடுபடும்? என்ற
நமது சிந்தனையை சீனியின்
இனிப்பு சுவை மழுங்கடித்து
விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல்
தற்போது வெளியாகியுள்ளது.
இனிப்யை விரும்பி
சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க
முடியும்? காலையில் எழுந்தவுடன்
குடிக்கும் டீ, கோப்பியில்
இருந்து இரவு படுக்கச்செல்லும்
முன் குடிக்கும் பால் வரை சீனியும்
நமது அன்றாட
உணவினூடே ஒரு ஊடுபொருளாக
நமது குடலுக்குள் செல்கிறது.
இது தவிர, கிலோ கிலோவாக
இனிப்பு தின்பண்டங்களை தின்று
தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான்
செய்கிறார்கள். ’இல்லாத
ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை’
என்ற முதுமொழிக்கு ஏற்ப,
இலுப்பம் பூவைப்
போன்று வெள்ளை வெளேர்
என்று சிரிக்கும் சீனியை,
ஆலைகளில்
எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற
விபரத்தை முழுமையாக
தெரிந்து கொண்டவர்கள் அதைத்
தொடக்கூட
ஒன்றுக்கு இரண்டு முறை
யோசிப்பார்கள். இந்த
வெள்ளை சீனியை தயாரிக்க
என்னென்ன வகையான
ரசாயனப்பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன?
என்பதை பார்ப்போம்.
1.கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்
நிலையில்
புளுயுடு பாக்டீரியாவை
கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர்
அல்லது குளோரின் எனப்படும்
ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
2.பிழிந்தெடுக்கப்பட்ட
கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட்
முதல் 70 சென்டிகிரேட்
கொதிநிலையில், ஒரு லிட்டர்
கரும்பு சாற்றுடன் 200
மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம்
கலந்து சூடுபடுத்தப்படுகிறது.
இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட்
அழுக்கு நீக்கியாக
பயன்படுத்தப்படுகிறது.
3. இதன்
பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம்
என்கிற அளவில் சேர்த்து சல்பர்-
டை-
ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது.
4. 102 சென்டிகிரேட்
வெப்பநிலை கொண்ட கொதிகலனில்
சூடுபடுத்தப்படும் இந்த
சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த
நல்ல விட்டமின்களை இழக்கின்றது:
எதிர் வினையாக,
அளவுக்கு அதிகமான
செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி
விடுகிறது.
5. அடுத்த கட்டமாக,
பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து
தெளிகலனில் இட்டு மண்,
சக்கை போன்ற பொருள்களை தெளிய
வைத்து, வடிகட்டி,
பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த
சாறு கிடைக்கிறது.
6. மீண்டும்
கொதிகலனில் இட்டு காஸ்டிக்
சோடா, வாஷிங் சோடா சேர்த்து,
நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின்
சாறு அடர்த்தி மிக்க
சர்க்கரை குழம்பாக
உருமாற்றப்படுகிறது.
7. அதன்
பின்னர், சல்பர் டை ஆக்சைடும்
சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும்
சேர்க்கப்பட்டு, படிக நிலையில்
கற்கண்டாக
சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது.
இந்த மறுபிறவி காலத்தில் சல்பர்
டை ஆக்சைடு எனப்படும் மெல்லக்
கொல்லும் நஞ்சு,
ஒவ்வொரு துளி சர்க்கரையிலும்
பரவி, கலந்து விடுகிறது.
8.இவ்வாறு தயாரான சீனியில்
எஞ்சி நிற்பது வெறும் கார்பன்
என்னும் கரியே. அதனால் தான்,
தயாரான நாளிலிருந்து ஆறு மாத
காலத்துக்கும் அதிகமான
சர்க்கரையை பயன்படுத்த
கூடாது என நமது முன்னோர்கள்
வலியுறுத்தி வந்தனர்.
9.தயாரிக்கப்பட்டு ஆறு மாத
காலத்தை கடக்கும்
போது சர்க்கரையில் உள்ள சல்பர்
டை ஆக்சைடு என்னும் ரசாயனம்
மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள
நஞ்சாக மாறிவிடுகிறது. இதன்
விளைவாக, குடல் சார்ந்த நோய்கள்
மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை,
குடல்புண், சளித்தொல்லை,
உடல்பருமன், இதய நோய் மற்றும்
சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம்
போன்ற கொடிய வியாதிகள்
அனைத்துக்கும் இதுதான் பிரதான
காரணியாக அமைகின்றது.
எனவே,
ஆலைகளில் தயாரான
வெள்ளை சர்க்கரையின்
பயன்பாட்டை குறைத்துக் கொண்டு,
வெல்லம், பனை வெல்லம், நாட்டுச்
சர்க்கரை போன்றவற்றை தாராளமாக
பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின்
தாக்கத்தில்
இருந்து விலகியே இருப்பதன்
மூலம் ஆரோக்கியமான
வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’
மேற்கொள்ள முடியும்.
பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்.
பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்.
பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர
வைக்கும் பெயர். ஜப்பான்
மக்களுக்கும் அப்படித்தான். உலக
மேப்பில் இப்படியொரு கடல்
உள்ளதா என்றால்..
இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் பசிபிக் கடலின்
ஒரு பகுதியை தான்
இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான்
கடற்கரை பகுதியில் உள்ள இந்த
பிசாசின்
கடலுக்கு இன்னொரு செல்லப்
பெயரும் உண்டு. அது ‘டிராகன்
டிரையாங்கிள்’. அதாவது டிராகன்
முக்கோணம்.
ஜப்பான் தலைநகர்
டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ.
தொலைவில் உள்ளது மியாகே தீவு.
இப் பகுதியில்
இருக்கிறது பிசாசின் கடல்.
ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-
உமி’ என்கிறார்கள். இதன் வழியாக
சென்ற யாரும்
உயிரோடு திரும்பியதில்லையாம்.
இப்பகுதியை கடந்து சென்ற பல
கப்பல்கள், படகுகள் மர்மமான
முறையில் மாயமாகியிருக்கின்றன.
அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள்
என்ற தகவலும் இல்லை.
இப்பகுதியில் திடீர் திடீரென
தீவுகள் உருவாவதும், இருக்கும்
தீவுகள் மறைவதும்
பீதியை ஏற்படுத்துகிறது.
அட்லான்டிக் பெருங்கடலின்
வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன்
கடல் பகுதியில் உள்ள பிரபலமான
மர்ம
பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’.
இந்த வழியாக சென்ற கப்பல்கள்,
இப்பகுதியை கடந்து சென்ற
விமானங்கள்
போன்றவை இப்பகுதியில் மர்மமான
முறையில் மாயமானதாக
கூறப்படுகிறது. அமெரிக்காவின்
புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள
பெர்முடா முக்கோணத்துக்கு நேராக
பூமிப் பந்தின் மறு புறத்தில்தான்
ஜப்பானின் பிசாசு முக்கோண
பகுதி இருப்பதால் மக்களை அதிகம்
பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா-நோ-
உமி’ முக்கோணம்.
பெர்முடா முக்கோணம் போல,
மாநோஉமி வழியாக செல்லும்
கப்பல்கள், விமானங்களும்
அடிக்கடி மாயமாகியிருக்கின்றன.
1952 - 1954 காலகட்டத்தில் டிராகன்
முக்கோண கடல் பகுதி வழியாக
சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள்
நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத
புதிராகவே இருக்கிறது. அந்த
கப்பல்களில் பயணித்த 700 பேரின்
நிலை பற்றியும் தெரியவில்லை.
இதை பற்றி கண்டுபிடிக்க 31
விஞ்ஞானிகள் அடங்கிய
குழு டிராகன் முக்கோணத்தின்
முக்கிய பகுதிக்கு கப்பலில்
சென்றுள்ளனர்.
அவர்களும் திரும்பி வரவில்லை.
அதற்கு பிறகு, ஜப்பான்
அரசு சுதாரித்துக்
கொண்டு அப்பகுதியை அபாயகரமான
பகுதியாக
அறிவித்தது என்கிறார்கள் டிராகன்
முக்கோணம்
பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.
விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர்
வேறுமாதிரி சொல்கிறார்கள்.
‘‘ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் எரிமலைகள்
வெடிப்பது,
நிலஅதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பதுதான்.
கடலுக்கு அடியில் இருக்கும்
எரிமலைகள், நில அதிர்வுகள்
காரணமாக கடலின் மேல் பகுதியில்
திடீர் அலைகள் உருவாகின்றன.
அதில் சிக்கும் கப்பல்கள்
விபத்துக்குள்ளாகின்றன.
டிராகன் முக்கோண பகுதியில் சில
தீவுகள்கூட திடீர் திடீரென
மாயமாகின்றன. திடீரென புதிதாக
தீவுகள் உருவாகின்றன.
இதற்கெல்லாம்கூட கடல் அடியில்
ஏற்படும் நிலநடுக்கமும்
எரிமலைகளும்தான் காரணம்’’
என்கின்றனர். நெருப்பை கக்கும்
டிராகன்கள்தான் இதற்கு காரணம்
என்று நம்புபவர்களும்
இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய
புராண கதைகளை உதாரணம்
காட்டுகின்றனர்.
‘‘மியாகே தீவுப்பகுதியில் பல
ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான
டிராகன்கள் வாழ்ந்தன.
அந்த இனம் அழிந்துவிட்டாலும்
அவற்றின் அமானுஷ்ய
சக்தி இன்னமும் அப்பகுதியில்
சுற்றிக் கொண்டிருக்கிறது.
மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக
அவை கருதுகின்றன.
தங்களது சாம்ராஜ்யத்துக்குள்
வருபவர்களை டிராகன் சக்திகள்
விடுவதில்லை. அந்த வழியாக
வரும் கப்பல்கள்,
படகுகளை அழிக்கின்றன’’
என்கின்றனர் அவர்கள்.
பெர்முடா முக்கோணம் போலவே..
இன்னமும் மர்மமாக
இருக்கிறது பிசாசு கடல்...!
Opportunity cost..
Opportunity cost..
பொருளியலின் அடிப்படைக்
கருத்துகளில் ஒன்று Opportunity
Cost. நீங்கள் இந்த
தகவலை படித்துகொண்டிருக்கும்
நேரத்தை வேறு பல
வேலைகளுக்கு செலவு செய்திருக்க
முடியும்.
அவற்றை எல்லாம்
விட்டுவிட்டுத்தான்
இப்பொழுது இதை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
உதாரணமாக, இந்த காலை நேரத்தில்
நீங்கள் இரண்டு வேலைகள்
செய்யவேண்டியுள்ளது செய்தித்தாள்
வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது.
இதில் செய்தித்தாள்
வாசிப்பது முதன்மையானது என்றால்
உடற்பயிற்சி செய்வது இரண்டாம்
சிறந்த செயலாகும்.
நீங்கள் செய்தித்தாள்
வாசிப்பது என்று தேர்ந்தெடுத்தால்
உடற்பயிற்சி செய்யும்
வாய்ப்பை இழக்கின்றீர்கள். எனவே,
இந்த நேரத்தில் செய்தித்தாள்
வாசிப்பதற்கான Opportunity Cost
இரண்டாம் சிறந்த வாய்ப்பான
உடற்பயிற்சி செய்யும்
வாய்ப்பை இழந்ததேயாகும்.
ஒரு செயலின் opportunity cost,
அச்செயலுக்காக எதை நீங்கள்
விட்டுக்கொடுத்தீர்களோ அதுவேயாகும்.
Production Possibility Frontier
Opportunity Cost-ஐ அளவிட
உருவாக்கப்பட்ட
மற்றொரு கருத்து Production
Possibility Frontier. ஒரு நாட்டில்
உள்ள எல்லா வளங்களையும்
பயன்படுத்தி அரிசி, கோதுமை என
இரண்டு பொருட்களை உற்பத்தி செய்யமுடியும்.
எல்லா வளங்களையும்
பயன்படுத்தினால் 100
மூட்டை அரிசி அல்லது 200
மூட்டை கோதுமையும்
உற்பத்தி செய்யமுடியும்.
இதனை வரைபடத்தில் A, B ஆகிய
புள்ளிகள் குறிப்பிடப்படுகின்றன.
100
மூட்டை அரிசி உற்பத்தி செய்யவேண்டும்
என்றால் 200
மூட்டை கோதுமை உற்பத்தியை விட்டுக்கொடுக்க
வேண்டும், அதாவது 1
மூட்டை அரிசியின் Opportunity
Cost 2 மூட்டை கோதுமை.
உதாரணமாக c என்ற புள்ளியில் 50
மூட்டை அரிசியும், 100
மூட்டை கோதுமையும்
உற்பத்தி செய்யப்படுகிறது. B
புள்ளியிலிருந்து c புள்ளிக்குச்
செல்லும்போது கோதுமை உற்பத்தி 100
மூட்டைகள் குறைந்து,
அரிசி உற்பத்தி 50
மூட்டை உயர்ந்துள்ளது. எனவே, 1:2
என்பது Opportunity Cost. A
லிருந்து c புள்ளிக்குச்
செல்லும்போது அரிசி உற்பத்தி 50
மூட்டைகள் குறைந்து,
கோதுமை உற்பத்தி 100
மூட்டை உயர்ந்துள்ளது.
எனவே, 1:2 என்பது Opportunity
Cost. A, C, B ஆகியப்
புள்ளிகளை இணைத்து Production
Possibility Frontier பெறப்படும்.
இந்த நேர்க்கோடு Production
Possibility Frontier முழுவதும்
opportunity cost ஒரே அளவில்
உள்ளது.
Opportunity cost இடத்துக்கு இடம்
மாறும். ஒவ்வொரு புள்ளியிலும்
Opportunity cost மாற்றும்
போது Production Possibility
Frontier வலைக்கோடாக இருக்கும்.
மேலிருந்து கீழே செல்லச்செல்ல
கோதுமை உற்பத்திக்கான
Opportunity cost அதிகரிக்கும்
என்றால் Production Possibility
Frontier வெளிப்புறமாகக்
குவிந்திருக்கும்.
Production Possibility Frontier மேல்
உள்ள எந்தப் புள்ளியிலும்
அனைத்து வளங்களையும்
முழுவதும்
பயன்படுத்தி உற்பத்தி செய்யமுடியும்.
Production Possibility
Frontierக்கு வலப்புறம் உள்ள
புள்ளிகளில்
உற்பத்தி செய்யமுடியாது,
ஏனெனில் அதற்குத் தேவையான
வளங்கள் இல்லை. Production
Possibility Frontier-க்கு இடப்புறம்
உள்ள புள்ளிகளில்
உற்பத்தி செய்யமுடியும் ஆனால்
எல்லா வளங்களையும் முழுவதும்
பயன்படுத்த முடியாது.
பேசுவதற்கு இரண்டு பக்க மூளைகளும் பயன்படுகிறது...
பேசுவதற்கு இரண்டு பக்க
மூளைகளும் உதவுகின்றன என
சமீபத்திய
ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுவரை எடுத்த
ஆய்வுகளுக்கு எதிர்மறையாக இந்த
கருத்து உள்ளது.
பேசும்போது நம் தலையில் உள்ள
இரண்டு பக்க மூளைகளும்
உதவுவதாக அமெரிக்காவில் உள்ள
நியூயார்க் நகரத்தில் சமீபத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பேசுவதற்கு மூளையின்
ஒரு பகுதி மட்டுமே உதவுவதாக
ஆராய்ச்சி முடிவுகள்
தெரிவித்திருந்தன.
கவனித்தல் மற்றும் பேசுதல்
ஆகியவற்றை மூளையின்
ஒரு பகுதி மட்டுமே செய்வதாக வந்த
ஆராய்ச்சி முடிவுகளின்
அடிப்படையில், பேச்சையும்
மூளையின்
ஒரு பகுதி மட்டுமே செய்வதாக
இதுவரை எடுத்த ஆய்வுகள்,
மறைமுகமாகக் கணக்கிட்டன. ஆனால்
தற்போது எடுக்கப்பட்டுள்ள
ஆய்வு நேரடியாக கணக்கிட்டது.
இதன் அடிப்படையில்
பேச்சு அலைகள் நேரடியாக
உள்ளே சென்று அவை பேச்சிலும்
உணர்ச்சியிலும் பிரதிபலிப்பதாக
உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ள
து. அதன் அடிப்படையில்
இருதரப்பு மூளைகளும்
பேச்சுக்கு உதவுகின்றன என்ற
முடிவு வெளியானது.
எனினும்,
பேச்சுக்கு நமது மூளை எப்படி திறம்
பட பதிலளிக்கிறது என்பதுடன்
பிணைந்த துடிப்புக்கு நாம்
எப்படி சரியாக
பதிலளிப்பது என்பது குறித்த
ஆராய்ச்சியை விஞ்ஞானிகள்
மேற்கொண்டு வருகிறார்கள்.