Monday, 24 March 2014

குழந்தை வளர்ப்பு...

குழந்தை வளர்ப்பு.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே-
பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும்
அன்னை வளர்ப்பினிலே”
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை.
ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில்
பிறக்கக் கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள்
தான் பெற்றோர். உயிராகி, கருவாகி,
உருவாகி, பிள்ளைக்கனியமுதாய்ப்
பிறந்து, முகம் பார்த்து சிரித்து,
தவழ்ந்து, விழுந்து நடந்து, பிஞ்சுப்
பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி,
சிரித்து, அழுது,
பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும்
குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில்
எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம்
தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும்.
குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள்,
விருப்பு – வெறுப்புகள்
உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது.
பொதுவாக நம் எண்ணங்களே செயலாகின்றது;
செயலே பழக்காமாகின்றது;
பழக்கமே வழக்கமாகின்றது;
வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித
ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட
குழந்தைகளை உருவாக்கும்
பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான்
இருக்கிறது.
அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில்
நாம் விதைக்கும்
விதையே விருட்ஷமாகி நல்ல குடிமகனாக
உருவாக வாய்ப்பாகின்றது.
குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல்
வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம்
குடும்பத்திற்கு மட்டுமில்லாமல்
நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான்.
பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும்
குழந்தைகளின் வளர்ப்பு குறித்த
பொதுவான முறைகள் இங்கே
வீட்டில் குழந்தைகள்
1. எந்த வயது குழந்தையையும்
திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல்
ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக்
கூடாது.
2. சிறுசிறு வேலைகளை இளமைக்
காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப்
பழக்க வேண்டும்.
3. குழந்தைகள் எதிரில் பெரியவர்கள்
சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக்
குழந்தைகளைப் பாதிக்கும்.
4. எந்தக் குழந்தையுடனும் உங்கள்
குழந்தையைத் தொடர்புபடுத்திப்
பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில்
ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும்
விதைத்து விடும்.
5. குழந்தைகள் எதிரில்
பெரியவர்களை மரியாதை குறைவாகப்
பேசக்கூடாது.
6. எல்லாருடைய நல்ல
குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில்
பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக்
கூடாது.
7. குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக்
கற்றுத் தர வேண்டும்.
8. பிள்ளைகளின்
வேலைகளை அவர்களே செய்யப் பழக்க
வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப்
பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும்
வேலைப்பளு குறையும்.
9. குழந்தைகளுக்கு உறவுகளின்
அருமையையும் விட்டுக் கொடுத்தலையும்
புரிய வைக்க வேண்டும்.
10.ஆபத்தை விளைவிக்கும் எந்தப்
பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும்
தூரத்தில் வைக்கக் கூடாது.

No comments:

Post a Comment