Monday, 31 March 2014

கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி

கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த
சொர்க்க பூமி
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,
தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும்
கிழக்கில் உள்ள சில சிறு,
சிறு தீவுகளையெல்லாம்
இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட
நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,
ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,
ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு,
ஏழுகுரும்பனை நாடு என
இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள்
இருந்துள்ளன பறுளி, குமரி என்ற
இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என
இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை,
கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான
மூன்று நகரங்கள் இருந்தன.
அதிலே கபாடபுரம் என்பது
பாண்டியர்களின்இடைச்சங்ககால தலைநகரம்
என்று கருதப்படும் நகரமாகும்.
இறையனார் அகப்பொருளில் பின்வரும்
குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம்
அரங்கேறியதாக கூறப்படுகிறது.
குறிப்பு
இடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம்
கபாடபுரம்
சங்கம் நிலவிய ஆண்டுகள்
3700 (37 பெருக்கல் 100)
சங்கத்தில் இருந்த புலவர்கள்
அகத்தியனார், தொல்காப்பியனார்,
இருந்தையூர்க் கருங்கோழி மோசி,
வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன்,
திரையன் மாறன், துவரைக் கோமான்,
கீரந்தை இத் தொடக்கத்தார்
புலவர்களின் எண்ணிக்கை
3700
பாடிய புலவர்களின் எண்ணிக்கை
59
பாடப்பட்ட நூல்கள்
கலி, குருகு, வெண்டாளி,
வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன
சங்கம் பேணிய அரசர்கள்
வெண்டேர்ச் செழியன் முதல்
முடத்திரு மாறன் வரை ( சாளரம்.கொம் )
சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை
59
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை
5
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல்
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம்,
இசைநுணுக்கம், பூதபுராணம்
கபாடபுரம் இரந்ததற்கான சான்றுகள்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக
பாண்டிய மன்னர்களின்இரண்டாம் தமிழ்ச்சங்கம்
செயல்பட்ட கபாடபுரம் என்றதமிழூர்
திருச்செந்தூர் ஆகும்.
கபாடம் என்றால் முத்து.உலகம் போற்றிய
ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக
திருச்செந்தூரின் கடற்பகுதி முன்னாளில்
விளங்கியது. ( சாளரம்.கொம் )
இராமாயணத்தில் கபாடபுரம்
சீதையை நோக்கி தென்திசையை
தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம்
சுக்கிரீவன் பின்வருமாறு கூறுகிறான்.

" நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும்
போது தங்கம், முத்து, ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட
ஒரு நகரத்தை காண்பீர்கள் அந்த
பேரரசான பாண்டியனின்
கபாடபுரத்திலும்சீதையை தேடிப்பாருங்கள்
!"

—இராமாயணம், கிசுகிந்தாகாண்டம்
(4.41.18
கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய
இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில்
இல்ங்கை நோக்கிச்செல்ல இருந்த
அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும்
போது,
‘ததோ ஹேமமயம் திவ்யம்
முக்தாமணி விபூஸ்யதம்
முக்தா கபாடம் பாண்ட்யானாம்
கதா திருக்யசவானரா’
என்று கூறுகிறார்.
‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான
மதுரையைக் கடந்து நீ
செல்லும்போது முத்லில் ஒரு ஊர்
வரும்.அங்கு நீ
இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த
ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம்
விரும்பாது.ஏனெனில் அங்குள்ள
நாகரீகமும்;பண்பாடும் உன்னை இழுக்கும்
எனவே அங்குநிற்காமல்
தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல
இலங்கைவரும்’ இராமாயணக் காலத்தில்
கபாடபுரம் இருந்தது என்பதும்
உறுதியாகிறது. ( சாளரம்.கொம் )
முதலில் தமிழ்ச்சங்கம் குமரி நாட்டில்
தென் மதுரையில்செயல்பட்டது.கடல்
கோளினால்[சுனாமி]
குமரி நாடு அழியவேவடதிசை நோக்கிக்
குடிபெயர்ந்தனர்.குமரியாற்றிற்கும்
தாமிரபரணிக்குமிடையே உள்ள
கபாடபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு இரண்டாம் தழிழ்ச்சங்கம்
நிறுவப்பட்டது.பாண்டிய மன்னருள்
அப்பேறு பெற்றவன் வெண்தேர்ச்செழியன்
ஆவான்.அவனைத் தொடர்ந்து 59
பாண்டியமன்னர்கள் ஆண்டனர்.அந்நாளிலும்
கடல் கோள்[சுனாமி]ஏற்படவே,
கடைசி அரசனான முடத்திருமாறபாண்டியன்
தப்பிப் பிழைத்து தற்போதுள்ள மதுரையைத்
தலைநகராகக் கொண்டு கடைச்சங்கத்தைத்
தோற்றுவித்தான்.
இஃது தமிழறிஞர்களின்கூற்று ஆகும்.
( சாளரம்.கொம் )
இரண்டாம் தமழ்ச்சங்கத்தின் காலம்
கி.மு.6804 முதல்கி.மு.3105
வரை ஆகும்.3700 ஆண்டுகள் கபாடபுரம்
பொருணை[தாமிரபரணி]ஆற்றின்
முகத்துவாரத்தில் [அலைவாய்]
இருந்தது.இச்சங்கத்தில் அகத்தியர்,குன்றம்
எறிந்தகுமரவேள்[முருகன்]ஆகியோர்
புலவர்களாக இருந்தனர்.73 புலவர்கள்
கவி பாடி அரங்கேற்றினர்.கபாடபுரம்
என்றபெயர் காலவெள்ளத்தில்
வழக்கொழிந்து போனது. திருச்செந்தூரில்
காண்ப்படும் கல்வெட்டொன்று,‘திரிபுவன
மாதேவி சதுர்வேதி மங்கலம்’
என்று இவ்வூரைக்குறிப்பிடுகிறது.
இப்பெயரும்
வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம்
என்றால்
நான்கு வேதங்களாகும்.நான்கு வேதங்களும்
இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,அவ்
வேதங்களை
ஓதும்அந்தணர்களுக்கு[வேதியர்களுக்கு]
தானமாகக் கொடுக்கப் பெற்றஊர் என்றும்
பொருள்படும்.வேதியர்களான
திரிசுதந்திரர்கள்2000 மக்கள்
திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத்
தொண்டுசெய்து வந்தனர்.இன்றும்
அவர்களது வாரிசுகள் உள்ளனர்.

நமது எண்ணங்கள் காந்த அலைகளின் வடிவம் கொண்டவை!

நமது எண்ணங்கள் காந்த அலைகளின் வடிவம்
கொண்டவை!

நமது எண்ணங்கள் ஒரு வித காந்த அலைகளின்
வடிவம் கொண்டது.அவை எப்பொழுதும்
அலை அலையாக
வெளிபட்டுக்கொண்டே இருக்கும்,அல்லது
வெளியேறிக்கொண்டே இருக்கும்.நல்லது
நல்லபடியாக{விளைவு நன்மை}
தீயது தீயபடியாக {விளைவு தீமை}. நாம்
மகிழ்ச்சியாக அல்லது சோகமாக
இருக்கும்போது நமது எண்ணத்திற்கேற்ப
நமது எண்ண அலைகளும்
மாறுபடுகின்றது.அவை முதலில் நம்மைத்
தாக்கி விட்டு பிறகு காந்த அலைகளாக
வெளியேறுகின்றது.அப்படி வெளியேறும்
அந்த காந்த அலைகள் நம்மை சுற்றி உள்ள
சூழலையும் பாதிக்கின்றது.
சரி முதலில் இந்த முதல்
நிலையை சற்று ஆராய்வோம்.நாம்
மகிழ்ச்சியாக அல்லது சோகமாக
இருக்கும்போது இந்த
மனோ நிலை நம்மை முதலில்
தாக்குகின்றது என்று சொன்னேன்
அல்லவா.எப்படி என்று பார்போம் வாருங்கள்.
ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதன் முதலில்
காதல் வசப்படும்போது அவர்கள்
எல்லை இல்லா ஆனந்தப் பரவசத்தில்
இருப்பர்.அந்த ஆனந்தப் பரவசம்
அவர்களை தாக்கும்.அதற்கான
அடையாளங்களை முதலில் அவர்கள் முகத்தில்
காணலாம்.முகம் மலர்ந்து இருக்கும்.உடலில்
ஒரு சுறுசுறுப்பு தோன்றும்.தோற்றத்தில்
ஒரு கம்பீரம்
காட்சியளிக்கும்.உடை உடுத்துவதிலும்,
தங்களை அலங்காரம் செய்வதிலும் மிகவும்
முனைப்பாக இருப்பர்.சுருங்கச்சொன்னால்
எதிலும்
ஒரு மிடுக்கு இருக்கும்.இப்போது
இவர்களின் மனம் நேர்மரையில் {POSITIVE}
இருக்கின்றது என்று பொருள்.
பிறகு அந்த எண்ணம் சுற்று சூழலையும்
பாதிக்கும் என்று சொன்னேன்
அல்லவா.சந்தோசத்தில்
மலர்ந்து முகம்,சுறுசுறுப்பான
செய்கைகள்,அழகான உடை,கம்பீரமான
தோற்றம்,அலங்காரம் செய்யப்பட்ட
வசீகரிக்கப்பட்ட உடல் அமைப்பு.எதிலும்
ஒரு மிடுக்கு.இவை அனைத்தும் காண்போர்
அனைவரையும் சுண்டி இழுக்கும்
தன்மை கொண்டவை.புதிய மணமக்களுக்கும்
இது பொருந்தும்.சரி இந்த மாற்றம்
அனைத்திற்கும் மூலப் பொருள் எது?
முதலில் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான
மனோ நிலைதான்.
இந்த மகிழ்ச்சியான மனோநிலையில் மாற்றம்
ஏற்பட்டால் என்ன சூழல் நிகழும்,அதையும்
சற்று பார்போம் வாருங்கள்.இந்த காதல்
ஜோடிகள் ஏதோ ஒரு சந்தற்பத்தால்
கட்டாயமாக பிறரால் பிரிக்கப்
படுகின்றனர் என்று வைத்துக்
கொள்வோம்.அப்போது மகிழ்ச்சியில் இருந்த
அவர்களின்
மனோநிலை இப்போது மாலா துயரத்தில்
ஆழ்ந்து விடும்.இதன்
வெளிப்பாடு,முகத்தில் சோகம், செயலில்
சுறுசுறுப்பு இன்மை,தன் சுய
அலங்காரத்தை அலட்சியப்
படுத்துவர்.சோகமே வடிவாக இருப்பர்.
அவர்களின் மனம் இப்போது எதிர்மறையில்
{NEGATIVE} இருக்கும்.இப்படிப்பட்ட
மனோநிலையில் உள்ளவர்கள்
செய்கைகளையும்,வருகைகளையும்,
தோற்றங்களையும் பிறர்
விரும்புவதில்லை.சுருங்கச் சொன்னால்
இவர்கள் எங்கும் அலையாத விருந்தாளியாக
இருப்பர்.
கொஞ்சம் இங்கே கவனிக்கவும் அதே காதல்
ஜோடிகளுக்கு தங்கள் மனோ நிலையில்
மாற்றம் ஏற்பட்டதும்,அந்த மாற்றம் முதலில்
அவர்களை பாதித்தது பிறகு அவர்களின்
சுற்று சூழலையும்
மாற்றி விட்டது.இவை ஒரு உதாரணாமாக
இருந்தாலும்இதுதான் உண்மையினும் உண்மை.
“கரு-எண்ணத்தை கவனமுடன் கையாளுங்கள்”
!உங்களது மகிழ்ச்சியான எண்ணங்கள்
உங்களுக்கு ஒரு வசீகரத்
தோற்றதை தரவல்லது. !உங்களது சோகமான
எண்ணங்கள் பிறர் உங்களை வெறுக்கும்
சூழலை தோற்றுவிக்க வல்லது.
மனம் அது செம்மையானால் மந்திரம்
ஜெபிக்க வேண்டாம் மனம்
அது செம்மையானால் வாசியை அடக்க
வேண்டாம் மனம் அது செம்மையானால்
வேதங்கள் ஓத வேண்டாம் மனம்
அது செம்மையானால் இறைவனை தேடித்
திரியவேண்டாம் “மனம் என்ற கோவில்
திறக்கின்ற நேரம்
அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்”
இவை அனைத்தையும் சொன்னவர் “திருமூலர்”
“MIND MOVES MATTER” “மனம்தான்
சூழ்நிலையை உருவாக்குகின்றது”

உங்கள் வாழ்க்கை துணை எப்படிப்பட்டவர்

உங்கள் வாழ்க்கை துணை எப்படிப்பட்டவர்...

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க
பலவற்றை நாம் கையாளுகின்றோம்.
பெரும்பாலோனோர் தங்களின்
வாழ்க்கை துணை அழகாக
இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து,
அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால்
அது மட்டும் போதாது என்பதை,
திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின்
மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர்.
நம்மில் பலர்
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும்
போது செய்யும் பெரிய தவறு, நம்
வாழ்க்கைத் துணை அழகாக
இருக்கிறாரா என்பதை மட்டும்
பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள்
மற்றும் அவர்களின் இதர
குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக
வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும்
பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர்
என்று கூறுவது தவறல்ல. ஆனால்
அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது.
ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட்டும்
பார்த்து எப்போதும்
வாழ்க்கை துணையை தேட கூடாது. ஏனெனில்
அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே.
இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம்
என்னென்ன நல்ல பண்புகள் இருக்க வேண்டும்
என்று தெரிந்து கொள்ள
கீழே படித்து பாருங்கள்.
நீங்கள் நீங்களாக இருக்கும் போதே,
உங்களை விரும்பினால்,
அது வாழ்க்கை துணையின் நல்ல பண்பாகும்.
ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர்
தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால்
மட்டுமே விரும்புவார்கள். தங்கள்
வாழ்க்கை துணையின்
மற்றொரு முகத்தை காண அவர்கள்
விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல
பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால்,
நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும்
உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில்
உங்களுக்கு தோள் கொடுப்பார்.
நல்ல வாழ்க்கை துணை கஷ்ட காலங்களின்
போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள்,
அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும்
அல்லது வெளியில்
அழைத்து செல்வதாகட்டும்.
ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற
முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான
காரணத்தை தெரிவிப்பாரே தவிர,
சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக்
கூறமாட்டார்கள்.
ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின்
வளர்ச்சியை நன்றாக
புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த
புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின்
அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும்
உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக
கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின்
வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த
முற்படுவார்.
ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம்
எதுவும் பார்க்காமல், தன்
காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன்
காதலை உடனுக்குடன்
வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி,
இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக,
வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக
உங்களை கருதுவார்கள். மற்ற அழகான
நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள்
மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.
ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை,
எப்போதும் அவருடன் இருக்க வேண்டும்
என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள்.
அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள்
ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும்
வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள்
மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள்
புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்
.
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள்
தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக
உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள்.
இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக்
கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட
நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால்,
கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக
இருக்க முடியாது.
எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும்
சரி, ஒரு நல்ல
வாழ்க்கை துணை உங்களுக்காக தன்
நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். “சாரி,
வேலையில் பிசியாக இருந்து விட்டேன்”
என்ற வாக்கியத்தை நல்ல
வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும்
கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர்
உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம்,
கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம்,
நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற
எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால்
தான்.

Sunday, 30 March 2014

காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?

காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?

காதல் என்பது ஒரு வகையான தனித்த
உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள்
சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும்
கிடையாது பாஸ். காதல் என்பது...
காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம்,
விரகம் ஆகிய உணர்வுகளில்
ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த
ஒரு உணர்வு என்று பெரியார் சொல்கிறார்.
ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம்
மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும்.
காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு.
காதலை ஒழிக்க வேண்டும். காதல்
திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க
நடக்கும் நாடகத் திருமணங்கள்
என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில்
கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த
காலகட்டத்தில், காதலர்தினமும்
நெருங்கி வரும் வேளையில்
காதலைப்பற்றிய விரிவான விவாதம்
தேவை என்று கருத வேண்டியுள்ளது.
முதலில் காதல் என்பது வெளிநாட்டுப்
பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப் பேசுபவர்கள் தமிழ்நாட்டின்
அரிச்சுவடியே தெரியாதவர்கள்
என்று தான் சொல்ல வேண்டும். தமிழர்
வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான
பண்பாட்டுக்கூறு. தமிழ் இலக்கியங்களில்
காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப்
போற்றாத ஒரு இலக்கியத்தைக் கூட பார்க்க
முடியாது. தமிழ் இலக்கியங்களில்
அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின்
காதல் வாழ்க்கையைப் பற்றி, காதலைப்
பற்றி விரிவாகப் பேசுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால்
காதலிக்க வேண்டும் என்று பேச வரவில்லை.
இலக்கியங்களில் இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்த
ஒவ்வொருவனின் உணர்விலும் காதல்
தோன்றியே தீரும். காதலை எதிர்ப்பவர்கள்
வேண்டுமானால் அந்த உணர்வுக்கு காதல் என்ற
பெயரை வைக்காமல் வேறு பெயரைக் கூட
வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காதல்
என்ற உணர்வுக்கு யாராலும்
எதிர்வினையாற்ற முடியாது.
இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும்
இணையதளத்தில் காதல் கருத்துக்கள் பல
வழிகளில் வெளிப்படுகின்றது. ஆனால்
உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம்
வைத்து பழகும்போது தான்
அதை உணரமுடியும். சிலருக்கு காதல்
செய்யும் போது, ஆரம்ப காலத்தைத் தவிர
மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான
விஷயமும் இல்லாமல், ஃபோர்
அடிப்பது போன்று உணர்வார்கள்.
சிலருக்கு அதனாலேயே காதல்
தோல்வி அடைந்துவிடும்.

Wednesday, 26 March 2014

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா?

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா?

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன்
வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25
கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள்
ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச்
சிறிய வத்தியாசம் தான்
நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண
உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம்
வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது.
கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது.
ஆக அவனது உயிர் பிரிந் தாலும்
அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள்
நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. இது தவிர
மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள்
இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில்
8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம்.
காரணம் பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன.
இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித
விறைப்புத் தன்மையும் இல்லாமல்
படுத்து உறங்குவதால் நமது உடம்பின்
உயரம் கூடுகிறது.
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின்
ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன்
பிறகு அது மடிந்து விடும்.
புது சிவப்பணுக்கள் உருவாகும்.
இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம்
120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர்
முதல் 6 லிட்டர்
வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம்
மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல்
நகம் மெதுவாக வளர்கிறது.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப்
பக்கம், இந்த ப்பக்கமாகப்
புரண்டு படுக்கிறோம்.
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும்,
அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு.
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்.
15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது.
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630.
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது.
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது.
20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்.
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.
22. நாம் படுத்திருக்கும் போது 1
நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும்
உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர்
மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1
நிமிடத்திற்கு 27 லிட்டர்
மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.
23. நமது சிறு நீரகத்தில்
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள்
இருக்கின்றன. இவைகள் ஊறுகாய்,
உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால்
பாதிப்படைகிறது.
24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது.
25. மனித உடலில் மிகப்பெரிய
உறுப்பு தோல்.
26. நமது தலையின் எடை 3.175
கிலோ கிராம்.
27. மூளையின் 100கோடி நியூரான்கள்
நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்.
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான்
பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த
உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த
3 தசைகள் கிடை யாது.
29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது
.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30
அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது.
32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்.
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள்
உள்ளன.
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது.
காரணம் ஞாபங்கள், நினைவுகள்,
எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும்,
மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்
அந்நியன் தான்.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது.
கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன.
கண்சிமிட்டும் போதெல்லாம்
கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன.
அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல்
இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர்
வினியோகம் ஆகிறது.
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4
வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம்
வளராமல் இருந்து உதிர்கிறது.
பிறகு புது கேசம் வளர்கிறது.
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால்
இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர்
ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக
துடிக்க பொறாமை, கெட்ட
சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம்,
உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது.
அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம்
தகவல்களை அனுப்புகிறது.
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்.
42. மனிதன் சிந்திக்கும் வேகம்
நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும்
வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும்
கணக்கிடப்பட்டுள்ளது.
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே.
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது.
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13
வைட்டமின்கள்.
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே.
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன்
திரவத்தையும் உட்கொள்கிறோம்.
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள்
இருக்கின்றன.
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்.
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்
றும் அறியப்படுகிறது.
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்.
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன
சென்டி மீட்டர்.
53. மனிதன் பயன்படுத்தும் சொல்
தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள்
தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள்
வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்.
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர்
வீதம் வளர்கிறது.
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்.
57. மனிதனின் உடலிலுள்ள
குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72
தசைகள் வேலை செய்ய வேண்டும்.
பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்.
59. நமது நுரையீரல் 3 லட்சம்
துவாரங்களையும் இரத்த குழாய்களையும்
கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம்
2400 கி.மீ. உள்ளது.
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்.
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம்
இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70
சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி,
சோர்வு, வாந்தி, வயிற்றுப்
போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்.
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்.
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது.
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள
நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
68. ஒரு முறை வெளியாகும். ஆணின்
விந்தில் 30 கோடி உயி ரணுக்கள்
வரை இருக்கும்.
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம்
உள்ளது.
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம்
உடல் முழுவதும்
ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும்
நேரம் 30 செகண்டு ஆகும்.
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச்
சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது.
இதனால் தான் மனிதனுக்கு கோபம்
வருகிறது.
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6
கிராம் ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.
74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள்
50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில்
வேலை.
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப்
பார்த்தால் என்ன
அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர்
இதயம் இருக்கும்.
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
‘ஆலவியோலி’ என் னும் சிறிய
காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30
கோடியாகும்.
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது.
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன.
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.
81. நமது நாக்கில் சுவை உணரும்
மொட்டுக்கள் 9000 உள்ளன.
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின்
துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு.
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன்
செல்களால் உருவானது.
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார்
3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான்
பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ்
பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய்
சுமார் 375 முறை ஏற் படுகிறது.
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக்
கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்.
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2
அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70
தடவை செல்கிறது.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால்
உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க
முடியாத அளவிற்கு வளர்ச்சி.
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10
நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில்
5மாதங்கள் வீணாக்கப்படுவதாக
கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அவயத்தின் படைப்பின்
நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும்
போது பெரும் வியப்பில் ஆழ்த்தும்
அத்தனை ஆச்சரியங்களையும்
எழுதி முடித்துவிட முடியாது.
உதாரணத்திற்கு, நமது மூளையைப்
பற்றி நவீன விஞ்ஞானம்
அறிந்து கொண்டது மிகமிக
சொற்பமானது தான் இன்னும் தெரியாத
புரியாத விளங்கிக் கொள்ள முடியாத
விநோதங்கள் ஏராளம், ஏராளம்..