Sunday, 31 March 2019

ஏப்ரல் 1

ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒருவர் மற்றவரிடம் சென்று பொய் சொல்லி அதை உண்மை என நம்பவைத்து ஏமாற்றி மகிழ்வர்.
ஏமாற்றம் அடைந்தவரை, "ஏப்ரல் ஃபூல் ஏமாந்த ஃபூல்..." என கிண்டல் செய்வது, அவர்கள் ஏமாற்றம் அடைந்ததின் அடையாளமாக அவர்கள் மேல் கலர் சாயங்களை பூசுவது என இந்நாளில் சில மோசமான காரியங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினமான வரலாறுத் தொடர்பாக பல கதைகள் சொல்லப்பட்டாலும், காலண்டர் மாற்றம் விஷயத்தில் இது உருவானது என்பதுதான் பிரபல்யமான கருத்தாக இருக்கிறது.

பொதுவாக தொழிலாளர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் என சில தினங்களை கொண்டாடும் போது அந்தந்த தினம் யாருக்கானதோ அவர்களுக்கு செய்யும் கடமைகளை அந்த ஒரு நாள் மாத்திரம் சரிவரச் செய்வார்கள்.
உதாரணமாக, தொழிலாளர்கள் தினத்தன்று அவர்களுக்கான உதவிகளை செய்தல், அவர்களின் முன்னேற்றங்களுக்கான பாதைகளை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரியங்களை செய்வார்கள்.
தொழிலாளர்கள் தினம் உட்பட அனைத்து தினங்களிலும் அந்நாளைச் சார்ந்தவர்களை மற்ற தினங்களில் கண்டும் காணாமல் இருந்துவிட்டு அந்த ஒரு நாள் மாத்திரம் அவர்களுக்கான கடமைகளைச் செய்வது சரியான நடைமுறையல்ல. அது ஒரு நாள் கூத்துதான். என்றாலும், ஒரு நாளாவது செய்கிறார்களே என்ற கண்ணோட்டத்தில் ஒரு பேச்சுக்குப் பார்ப்போம்.
அதுபோல்தானே இந்த ஏப்ரல் 1லும் அறியாத மக்களை அறிவில் மேம்படுத்தும் காரியங்களை செய்யவேண்டும்.
ஆனால் இந்த ஏப்ரல் 1லாவது அவ்வாறு செய்யாமல் நன்றாக உள்ளவர்களையும் முட்டாள்களாக மாற்றும் அறிவீனமான காரியத்தையே செய்து வருகின்றனர்.
பள்ளியில், கல்லூரியில், தொழில் நிறுவனங்களில், அலுவலகங்களில் மற்றும் வீடுகளில் என எல்லா இடங்களிலும் அடுத்தவனை ஏமாற்றி முட்டாளாக்கும் காரியம் அரங்கேறுகிறது.
சில செய்தி ஊடகங்கள் கூட அன்றைய தினம் சில பொய்யான செய்திகளை வெளியிட்டுவிட்டு மறுநாள் ஏப்ரல் ஃபூல் என்று சொன்ன வரலாறுகளெல்லாம் உள்ளது.
இதற்கு அவர்கள் சொல்லும் வியாக்கியானம், "இதுவெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே" என்பதாகும்.
ஒருவனை முட்டாளாக்குவதை "ஜாலி" என்று சாதாரணமாக கடந்து போக முடியாது.
ஏனெனில், இவ்வாறாக ஜாலி என்று ஏமாற்றி ஏமாற்றி அன்று ஓர் உண்மையான நிகழ்வு நடந்தாலும் கூட நம்ப மறுக்கின்றனர்.
இப்படித்தான் ஒருவர் ஏப்ரல் 1 அன்று ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொள்கிறார். அவரது பெற்றொரிடம் சென்று தகவல் தெரிவித்தால் ஏப்ரல் 1 என்று ஏமாற்ற வேண்டாம் என்று நம்ப மறுக்கின்றனர் என்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
இந்த அவலத்திற்கு காரணம் யார்? ஏப்ரல் 1 என்றாலே ஜாலி என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் தானே!
இன்னும், இந்த தினத்தில் பாரதூரமான ஏமாற்றங்களினால் பல உயிர்கள் பரிபோயிருக்கிறது.
அந்த உயிர்கள் பரிபோனதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் காரணமா? அல்லது ஜாலிக்குத்தானே என்று சொல்லி இந்த பழக்கத்தை செய்து வளர்த்துக் கொண்டிருக்கும் அனைவருமா?
ஏமாற்றம் சிறிதோ பெரிதோ அது ஒரு மனிதனின் தன்மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் போது அதற்கென்று ஒரு தனி நாளை வைத்திருப்பதே முட்டாள்த்தனம். இதைத்தாண்டிய தனியொரு முட்டாள்த்தனம் அந்நாளுக்கு தேவையில்லை.
இந்நாளின் ஏமாற்றங்களில் பொய், கேலி கிண்டல் மாத்திரமில்லாமல் அத்துடன் அடுத்தவரின் மானத்திலும் உயிரிலும் விளையாடும் காரியங்களும் கலந்துள்ளது. இதுவும் ஒரு வகையான மனித உரிமை மீறலே!

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

என்னவெல்லாம் இருக்கின்றன
தாய்ப்பாலில்?

அம்மாவின் மார்பகத்தில்
குழந்தை வாய் வைக்கும்போது,
தாயின் மூளையில் உள்ள
ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற
ஹார்மோன் தூண்டப்பட்டு, இரத்தம்
பாலாக மாற உதவி செய்கிறது.
ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற
மற்றொரு ஹார்மோன்
சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள்
(Lactiferous ducts) வழியாக
தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த
குழந்தைக்கு நோய்
எதிர்ப்பு மண்டலம் முழுமையாக
வேலை செய்யத் தொடங்காது. இந்த
நேரத்தில் குழந்தைக்கு நோய்
எதிர்ப்புச் சக்தி வேண்டும்.
எப்படி அதை ஏற்படுத்துவது தாய்ப்பா
‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற
பொருள் இந்த நோய்
எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச்
செய்கிறது.
தாய்ப்பாலில் புரதம்,
கார்போஹைட்ரேட், அத்யாவசியக்
கொழுப்பு அமிலம் போன்ற
ஊட்டச்சத்துக்களும் இரும்பு,
கால்சியம், பொட்டாசியம், சோடியம்
உள்ளிட்ட தாது உப்புக்களும் இ,
கே ஆகிய வைட்டமின்களும்
நிறைந்து உள்ளன. மேலும்
குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத்
தேவையான டி.எச்.ஏ.
(Docosahexaenoic acid) மற்றும்
ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid)
ஆகியவையும் தாய்ப்பாலில்
நிறைந்து உள்ளன. எனவே,
தாய்ப்பாலுக்கு இணையான
உணவு குழந்தைக்கு வேறு எதுவும்
கிடையாது.

சொந்த வீடு கட்டுவோர்க்கு...


1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெல்ல மெல்ல அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ,
பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள்...

இயற்கையாகவே கருச்சிதைவை
ஏற்படுத்தும் உணவுகள்...

இன்றைய
காலத்தில் பெரும்பாலானோர்
வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த
பின்னர் கருத்தரிக்கலாம்
என்று நினைத்திருப்பார்கள். ஆனால்
தெரிந்தோ தெரியாமலோ,
உணர்ச்சி வேகத்தில்
கருத்தரித்துவிட்டால் அது பெரிய
ஆச்சரியத்தையும் தரும். அதிலும்
வாழ்வில் நல்ல நிலையில்
இல்லாமல், எதிர்பார்க்காத
வேளையில் கருத்தரித்துவிட்டால்,
அது சந்தோஷத்தை விட
கஷ்டத்தை தான் அதிகம் கொடுக்கும்.
ஆகவே அந்த நிலையில்
செயற்கை முறையில்
மருந்து மாத்திரைகளை வாங்கி
சாப்பிட்டு கருவை கலைப்பதற்கு
பதிலாக, இயற்கை முறையில்
கருவைக் கலைத்தால் நல்லது. மேலும்
பல்வேறு நாடுகளில்
செயற்கை முறையில் கருவைக்
கலைப்பது ஒரு சட்டவிரோதமான
செயலாக இருந்தாலும்,
இயற்கை முறையில் கருவைக்
கலைப்பது சட்டப்பூர்வமாக உள்ளது.
ஆகவே இப்போதைக்கு கருத்தரிக்க
வேண்டாம் என்பவர்கள்
இயற்கை முறையை நாடினால்,
எவ்வித பக்கவிளைவு இல்லாமல்
கருவைக் கலைக்கலாம்.
அதிலும் உயர் இரத்த அழுத்தம்,
ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக
பிரச்சனை இல்லாதவர்களுக்கு
மிகவும் நல்லது. மேலும் பப்பாளி,
அன்னாசி போன்ற
பழங்களை சாப்பிட்டாலும்,
கருச்சிதைவு ஏற்படும்.
ஆகவே கருத்தரிக்க வேண்டாம்
என்பவர்கள் கீழே உள்ள
உணவுகளை கருத்தரித்த முதல்
மூன்று மாதத்தில் அதிகம்
சாப்பிட்டால்,
கருவை கலைத்துவிடலாம். ஆனால்
குழந்தை வேண்டுமென்று
ஆசைப்படுபவர்கள், இந்த
உணவுகளில் கவனமாக இருக்க
வேண்டும்.

அந்த உணவுகள்
வைட்டமின் சி உணவுகள்...

வைட்டமின் சி அதிகம்
நிறைந்துள்ள
உணவுகளை மாதவிடாய் நெருங்கும்
காலத்தில் அதிகம் சாப்பிட்டால்,
கரு உருவாகி இருந்தாலும்
கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.
ஏனெனில் அதிகப்படியான
வைட்டமின்
சி உணவுகளை கர்ப்பத்தின்
ஆரம்பத்தில் சாப்பிட்டால்
கருச்சிதைவு ஏற்படுவது உறுதி.

பப்பாளி..

பப்பாளியில் அளவுக்கு அதிகமாக
வைட்டமின் சி நிறைந்திருப்பதால்
தான், அதனை சாப்பிட்டால்
கருச்சிதைவு ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, இதில் உள்ள
பாப்பைன் என்னும் பொருளும்
கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்
என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னாசி...

முன்னோர்கள் சொல்வது போல்,
அன்னாசியும் நிச்சயம்
கருச்சிதைவை ஏற்படுத்தும்.
எப்படியெனில், பப்பாளியில்
பாப்பைன் உள்ளது போது,
அன்னாசியில் ப்ரோமிலைன் என்றும்
நொதி உள்ளது.
இது கருப்பை வாயை
மென்மையடையச் செய்து,
கருச்சிதைவிற்கு வழிவகுக்கிறது.

எள்...

தினமும் ஒரு டீஸ்பூன்
எள்ளை தேனுடன்
சேர்த்து சாப்பிட்டால்,
கருச்சிதைவு ஏற்படும்.

க்ரீன் டீ...

க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக
சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்
வாய்ப்பு அதிகரிக்கும்.

டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்...

டப்பாவில் அடைக்கப்பட்ட மீனில்,
அது கெட்டுப் போகாமல்
இருப்பதற்கு கெமிக்கல்கள்
பயன்படுத்துவதால், அது இரத்த
அழுத்தத்தை அதிகரித்து, உடலில்
நீர் தக்க
வைத்தலை அதிகரித்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் அதில் உள்ள
மெர்குரி,
கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.

காய்ச்சாத பால்...

காய்ச்சாத பச்சை பாலில் உள்ள
பாக்டீரியாக்கள்,
கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியவை
. ஆகவே கர்ப்பம் வேண்டாம்
என்பவர்கள், காய்ச்சாத
பாலை அருந்தலாம்.

ப்ளாக் கோஹோஷ்...

இது ஒரு இயற்கையான
கருச்சிதைவை ஏற்படுத்தும்
மூலிகை. இந்த சைனீஸ்
மூலிகையை அரைத்து சாறு எடுத்து
சாப்பிட்டால், அது வயிற்றில்
வளரும் கருவை கலைத்துவிடும்.

படிக்கட்டு ஏறுவது...

கர்ப்பமாக இருக்கும் போது அதிக
கனமான பொருட்களை தூக்குவது,
உடலை வருத்தும் வகையில்
வேலை செய்வது, படிக்கட்டுகள்
ஏறுவது போன்றவையும்
கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்