Sunday, 24 January 2016

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல் எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... இந்த கொழுப்பு ஏன் தேவை?உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு.

இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச் சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய் களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல… அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.மொத்தத்தில் உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

இன்னும் கொஞ்சம் விளக்காக சொல்வதென்றால் உடலை என்றும் இளமையுடனும் பளபளப் பாகவும் புத்துணர் வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணைக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய் களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாது காக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்கா எண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்ட மின்கள் குறிப்பாக அண்டி ஆக்சி டண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட் கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் .இவை தான் எண்ணெய் யின் உண்மையான குணங்கள் .

அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர் என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் யை குறை சொல்ல தொடங்கி விட்டோம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் (Ex : GoldWinner ,Sundrop, Fortune ,SVS ,Porna, Sunland , Saffola , Palmolein )என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை .

சமையல் எண்ணெய் களை எபப்டி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நாம் சொன்னதில் உள்ள உண்மை தெரிய வரும் பல உள் நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இய்ற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசயமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை யும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற
சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடு கிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதி யாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்தி ருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார் கள் சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண் ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்கு லைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. இந்த பிசு பிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள நல்ல செல்களில் இணையந்து அந்த செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இதனால்தான் இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற் படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்தி கரிக்கப் பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .

அப்படியானால்… பாரம்பரிய எண்ணெய்தான் நல்லது!

நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணை யையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவை யுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் சேர்ந்து விட்ட தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய் பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை அனப்படும் ஆமனெக்கு எண்ணெ யில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது

இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன் படுத்தினால் சருமம் அழகாவதோடு ,கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும் .குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )

செக்கில் அட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் “லெக்சீதீன்” என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம் .அதனாலையே இதற்கு ” குயின் ஆப் ஆயில் ” என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள்,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .

அது சரி.. மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது.ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற் பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்க படுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில்

வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்

செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குக ளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .மரசெக்கில் கருபட்டி யுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது .அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் அனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் …அதன் ருசி கால கால காலத் திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்.குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.

சளி

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வையுங்கள்.
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை.!!!

ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை.!!!

ஜீரன சக்தியை அதிகரிக்க. என்ன, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கும் முன். ஒரு மனிதன், மனுசி ஆரோக்யமாக வாழ. ஒரு நாளைக்கி எவ்வளவு சாப்பிடலாம். எந்த, எந்த வேளைகளில் எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும். என்பதை பற்றி பாப்போம்.
வெறுமன உட்கார்ந்த இடத்தில் வேலை பார்பவர்கள். அதாவது. physical work. உடற் பயிர்ச்சி கூட செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள். ஒரு நாளைக்கி 1800 கலோரி உணவை தான் அதிக பக்சம் எடுத்து கொள்ள வேண்டும். கடின உடற் பயிர்ச்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கி 2500 கலோரியில் இருந்து. 4000 அதுக்கும் மேல. அவுங்க எந்த அளவு exercise பண்றாங்களோ அதற்கு தகுந்த மாதிரி சாப்பாடு எடுத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நான் என்று எடுத்து கொண்டால். மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில். ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் இரண்டு மணி நேரம் நடப்பேன். 14 கிலோ மீட்டர். என்னுடைய நடை வேகத்திற்கு. ஒரு மணி நேரத்தில் 750 கலோரிகளாவது எரியும். ஆக வெறும் நடையிலேயே. எனக்கு 1500 கலோரிகள் எரிக்கப்படும். அதை தவிர்த்து இரண்டரை மணி நேர கடுமையான உடற் பயிர்ச்சி. முதலில் Floor Exercise ஒண்டரை மணி நேரம். பின்னர். பவர் டியூப், மசில் மாஸ்டர், டம்பிள்ஸ், கர்லா கட்டை, க்ரிப் ட்ரைனர் போன்ற instrumental exercises ஒரு மணி நேரம்.
ஒரு நாளைக்கி. 5000 கலோரிகள் கிடைக்கும் உணவை எடுத்து கொண்டால் தான். என்னால். இவ்ளவும் பண்ண முடியும். 2500 கலோரிகள் உள்ள உணவை எடுத்து கொண்டால். பாதி நடக்கும் பொழுதே. நான் சுருண்டு தெருவில் விழுந்து விடுவேன். ஆக. நீங்கள் உண்ணும் உணவானது. நீங்கள் செய்யும் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு இருக்க வேண்டும்.
நாம் சாப்பிடும் பொழுது. நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். அது தான். உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.
காலையில் ராஜா மாதிரி சாப்பிடனும், மதியம் கொஞ்சும் கம்மியா. ராணி மாதிரி. இரவு பிச்சை காரன் மாதிரி.
நைட் எப்போதுமே புல் லோட் வயிற்றில் ஏற்ற கூடாது.
சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து தான். நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நடுவில் விக்கல் எடுத்தால் வேறு வழியில்லை. அது எப்பொழுதாவது தற்செயலாக நடக்கும் ஒன்று. இரவு நாம் துங்க போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உன்ன வேண்டும்.
மிக கடுமையான உடற் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. உங்களால் முடிந்தால் செய்யலாம். ஒரு நாளைக்கி 15 நிமிடங்கள் உடற் பயிற்ச்சி செய்தாலே ஆரோக்யமாக வாழலாம். மற்றும் தினமும் 30 நிமிட நடை.
ஜீரன சக்திக்கு நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள். !!!
சூடான நீரில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது. உடல் இளைக்க, ஜீரன சக்தி இரண்டிற்கும் நல்லது. மற்றும் வேப்பிலை கட்டி.
உங்களில் சிலருக்கு இதை பற்றி தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள். இது ஏதோ. வேப்பிலையில் இருந்து செய்யபடுவது என்று நினைப்பார்கள். உண்மையில் இதற்கும், வேப்பிலைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. பெயர் ஆராய்ச்சி எதற்கு. இது உடல் ஆரோக்யதிற்கும், ஜீரனத்திற்கும் நல்லது.
இதை எப்படி செய்வது.
நாரத்தை, எலுமிச்சை இலைகள். ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை அரை கைப்பிடி.
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது.
நாரத்தை இலை மற்றும் எலுமிச்சை இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து. ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். தண்ணீர் இதில் கொஞ்சும் கூட சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும். இது சற்று விறுவிறுவென்று இருக்கும். அனைவரின் நாவிற்கும் இது பிடிக்குமா என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் மேலே சொன்னதை போல். நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். இந்த வேப்பிலை கட்டி. காதி, அம்பிகா அப்பளம் டிப்போ, மற்றும் பல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தயிர், மோர் அண்ணம் உண்ணும் பொழுது. உருகாய்க்கு பதில் இதை தொட்டு கொண்டால். நல்ல விறு, விறுப்பா இருக்கும். உடல் ஆரோக்யத்திற்கும் நல்லது.
இஞ்சி ஜீரணத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். தெரிந்து பயன் இல்லை. அதை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் தான் பயனே. நான் தினமும். மூன்று வேளையும். சாப்பிட்டு அரை மணி நேரம் இடைவேளை விட்டு. இஞ்சி மரப்பா ஒரு சிறிய துண்டு வாயில் மென்னுவேன். நெல்லிகாய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். எவ்வாறு தண்ணீர் தித்திக்குமோ. அதே போல். இஞ்சி மறப்பா சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். அது ஒரு தனி சுவை.
பப்பாளி பழம் ஜீரன சக்திக்கு நல்லது. வெளி நாடுகளில் மாமிச உணவு செய்யும் பொழுது. சிறிது பப்பாளி துண்டை சேர்த்து கொள்வார்கள்.
கொத்தமல்லியை சாறாக்கி. அதனுடன் ஒரு கரண்டி ஜீரகம் கலந்து. அது இரண்டையும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
மோரில் ஓமம் கலந்து குடிக்கலாம்.
பெருங்காயத்தை மட்டுமே. சாப்பாட்டில் போட்டு. அதோடு சிறிது நெய்யும் கலந்து உண்பது. ஜீரணத்திற்கு மிக நல்லது. ஒரு 2,3 உருண்டை அவ்வாறு சாபிட்டாலே போதும்.
அஷ்ட்ட சூர்ணம். எட்டு விதமான ஆயுர்வேத முலிகைகளால் இதை தயார் செய்வார்கள். இதன் சிறப்பு என்னவென்றால். பசியே எடுக்கவில்லை என்றாலும். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி பசியை துண்டும். ஔட் கோயிங் ரொம்ப ஓவரா இருந்தாலும். அதை கட்டுபடுத்தும். கோட்டக்கல் போன்ற ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை. அஷ்ட்ட சூரணத்தை அன்னத்தில் ரெண்டு ஸ்பூன் போட்டு. அதில் நெய் ஒரு ஸ்பூன் கலந்து உண்ணலாம்.

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!

* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

* ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

* தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

* மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.

ஜலதோசம்

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் தெரியப்படுத்தி இருந்தனர்.

மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் அகத்தியர் நூலில் நிறைந்து கிடைக்கிறது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.

மிளகு வைத்தியம்.!
இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

மஞ்சளையும், வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு. இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும்.

செய்முறை :-
(சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலக்க வேண்டும்
மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடாது . மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது .பின்னர் 1 மணி நேரம் நன்றாக தூங்கினால் சரியாய் போகும். மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும். எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை