Saturday, 7 March 2015

பத்மாசனம் செய்யும் முறை

பத்மாசனம் செய்யும் முறை

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment