Friday, 13 March 2015

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில வழிகள்

தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில வழிகள்

1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான்

உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்ப‍டி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்ப‍வர்க ளுடன் பேசி, அவர்களுக்கு நீங்கள் சொல்ல‍விரும்பும் கருத்தைப் புரிய வைக்க‍ முடியும்.

2. நீங்கள் பேசும்போது உங்களுக்கு எதிரே இருப்ப‍வர்கள், முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பேசுங்க ள். அப்போது தான் உங்களுக்குள் தைரியம் பிறக்கும் நீங்கள் பேச விரும்பியதை பேசமுடியும், அ தைப்போல அவர்கள்பேசி நீங்கள் கேட்கும்போது அவர்களை சிறந் த அறிவாளிகளாக எண் ணிக்கொள்ளுங்கள் ஏனெ ன்றால், பிறர் பேசுவதில் உ ள்ள‍ நல்ல‍ கருத்துக்களும் உங்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் இருக்க‍ க் கூடும் ஆகையால் அவர் கள் பேசுவதை அலட்சியம் செய்யாமல், அறிவுப்பூர்மான அவர்க ளது பேச்சைக் கேளுங்கள்.

3. எந்த ஒரு இடத்திற்குச் சென்றாலும், அங்கு உங்களுக்குத் தேவையான விவ ரங்களைக் கேட்கச்செல்லும்போது அ ங்கு நீங்கள் கேட்கவிரும்பியதை கேட் காமல் தயங்கி தயங்கி நிற்கக் கூடாது.

4. எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும், அங்கே உங்களது நடையின் வேகத்தை க் கூட்டுங்கள். அங்கே நிமிர்ந்து நில்லுங்கள். பிறரை பார்த்துப் பேசும்போது அவர்களது கண்களைப் பார்த்துப் பேசுங்கள்

5. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங் கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கு ம் சம்பந்தமில்லைஎன்பதை ஏற்றுகொ ள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித் தாலும் தான், நான் அழகு என்று நினை ப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்க ளே ரசியுங்கள்.

6. எந்த மொழி சரளமாக பேச முடிய வில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலரு க்கு அவரவர் தாய் மொழி யையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

7. உங்களால் எது முடியாது. உங்க ளுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்,அதை வி ரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய் யுங்கள்.

8. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அ மைவதில்லை என்பதே உண்மை .

9. உங்களுக்கு எதுவும் தெரியா து. எதிரில் நிற்பவருக்கு எல்லா மே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ண ம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

10. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத் துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரி ந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள் விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

11. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வர ப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங் கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்துவிட்டு முன் செல் லுங்கள்.

12. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிரா கரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில் லை, நிராகரித்தவருக்கே என்பதை புரி ந்துக்கொள்ளுங்க ள்.

13. மாற்றத்தை வெளியில் தேடாமல் உங் களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மை யை எளிதில் போக்கி விடலாம்.

Wednesday, 11 March 2015

8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி ஏழரைதான்...!

8 போட்டா லைசென்ஸ்... இல்லாட்டி ஏழரைதான்...!

கம்ப்யூட்டர் முறையில் ஓட்டுனரின் திறன்களை பரிசோதித்து வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறையை புனே ஆர்டிஓ., நிர்வாகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் பெறுபவர்களை இனி ஆர்டிஓ அதிகாரிகள் பக்கத்தில் இருந்து கண்காணித்து லைசென்ஸ் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய தேவையில்லை. இனி அந்த வேலையை கம்ப்யூட்டர்களே இருக்கும் இடத்திலிருந்து பார்த்துவிடும்.

நவீன டெஸ்ட் டிராக்
புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நவீன டெஸ்ட் டிராக்கில் ஓட்டுனர்கள் தங்களது திறன்களை முழுமையாக நிரூபித்தால்தான் இனி ஓட்டுனர் உரிமத்தை பெற இயலும். இந்த புதிய முறையை அமல்படுத்துவதற்காக அம்மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

சென்சார் நுட்பம்
ரேடியோ பிரிகுயன்ஸி ஐடென்டிகேசன்(ஆர்எப்ஐடி) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் டெஸ்ட் டிராக்கில் இருக்கும் சென்சார்கள் ஓட்டுனர்களின் தவறுகளை துல்லியமாக கணித்துவிடும். டெஸ்ட் டிராக்குகளின் பக்கவாட்டுகளிலும், தரைக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்படும்.

துல்லியம்
இந்த சென்சார்கள் ஆர்டிஓ அலுவலங்களில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தவர் டெஸ்ட் டிராக்கில் வாகனத்தை ஓட்டும்போது, அதை சென்சார்கள் துல்லியமாக அறிந்துகொண்டு செய்து கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யும்.

அறைகுறைகளுக்கு வேலை இல்லை
விதிமுறைகளுக்குட்பட்டு அவர் சரியாக வாகனத்தை ஓட்டினாரா அல்லது அரைகுறையா என்பதை கண்டுபிடித்து லைசென்ஸ் வழங்கலாமா வேண்டாமா என்பதை கம்ப்யூட்டரே கூறிவிடும். கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான டெஸ்ட் டிராக்கில் இந்த புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளுக்கு ஆப்பு
இந்த புதிய நடைமுறையின்படி, ஓட்டுனர் உரிமம் பெறுவதில் இருக்கும் முறைகேடுகள் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

நவீன டெஸ்ட் டிராக்
புனேயிலுள்ள போக்குவரத்து ஆராய்ச்சி கழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நவீன டெஸ்ட் டிராக்கில் ஓட்டுனர்கள் தங்களது திறன்களை முழுமையாக நிரூபித்தால்தான் இனி ஓட்டுனர் உரிமத்தை பெற இயலும். இந்த புதிய முறையை அமல்படுத்துவதற்காக அம்மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

நாடு முழுவதும்...
குஜராத்தில் நவீன டெஸ்ட் டிராக்குகள் இருக்கின்றன. ஆன்லைன் மூலமாகவே இந்த டெஸ்ட் டிராக்குகளில் வாகன ஓட்டி லைசென்ஸ் பெறுவதற்கு முன்பதிவு செய்ய முடியும். இதைத்தொடர்ந்து, புனே நகரில் இந்த நவீன டெஸ்ட் டிராக் செயல்பட உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற நவீன டெஸ்ட் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன.

Saturday, 7 March 2015

பத்மாசனம் செய்யும் முறை

பத்மாசனம் செய்யும் முறை

முதலில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். பின் வலது காலை மடக்கி, இரண்டு கைகளாலும் இடது காலின் தொடை மீது, குதிகால் வயிற்றை தொடும் அளவிற்கு வைக்கவும். இதேப்போல் மற்றொரு காலையும் மடக்கி, வலது காலின் தொடையின் மீது, வயிற்றை தொடும் அளவிற்கு நெருக்கமாக வைக்கவும்.

பின் நேராக அமர்ந்து, கண்களை மூடி கைகள் இரண்டையும் முட்டிகளின் மீது, உள்ளங்களை மேல் நோக்கியவாறு, கட்டை விரல், ஆள்காட்டி விரலைத் தொட்டுக் கொண்டு இருக்கும் வண்ணம் 5 நிமிடம் மூச்சை உள் வாங்கி வெளியே விட்டவாறு அமர வேண்டும். பிறகு இதேப்போல் கால் மாற்றி மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

Friday, 6 March 2015

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்... அதற்கான காரணங்களும்...

புகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்... அதற்கான காரணங்களும்...

பல விதமான பண்பாடுகள் மற்றும் மரபுகளின் கலவையாக இந்தியா விளங்கினாலும், எண்ணிலடங்கா மூட நம்பிக்கைகளால் அவைகள் இருட்டடிப்பு அடைகின்றன. இந்த மூடநம்பிக்கைகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. அவைகளின் முக்கியத்துவங்களை சொல்லி தான் நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். நம் மனதை ஆளுமை செய்வதோடு மட்டும் இது நின்று விடவில்லை.

இந்த மூட நம்பிக்கைகளை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் போது, நம்மை அறியாமலே அதனுடன் ஒன்றி போய் விடுகிறோம். ஆனால் இவைகள் எப்படி உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றை யார் கண்டுபிடித்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தரையை பெருக்கக் கூடாது
இன்றைக்கு போல் இல்லாமல், பொன்னான அந்த 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்கு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. மோசமான வெளிச்சத்தில் தரையை பெருக்கினால் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொலையக்கூடும். மேலும் பெருக்கும் போது, விளக்கின் தீயால் விளக்குமாறில் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் அபாயமும் இருந்தது. அதனால் தான் விளக்கு வைத்தவுடன் வீட்டை பெருக்காதே என கூறி வந்தார்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் முடி வெட்டாதே!
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் பலரும் விவசாயிகளாக இருந்தனர். ஒரு வாரம் அயராமல் வேலை பார்க்கும் அவர்களுக்கு திங்கட்கிழமை தான் ஓய்வு தினமாக இருந்தது. அதனால் பலரும் திங்கட்கிழமைகளில் தான் தங்களின் வீட்டை சுத்தப்படுத்தி, தலை முடியையும் வெட்டினார்கள். இதனால் செவ்வாய்கிழமை என்றால் முடி திருத்துபவர்களுக்கு வேலை இருக்காது. அதனால் பெரும்பாலானோர் தங்கள் முடி திருத்தும் கடைகள் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை என பழக்கத்தை பின்பற்றினர்.

இருட்டிய பிறகு மரத்தில் இருந்து அல்லது வயலில் இருந்து எதையும் பறிக்காதீர்கள்
இதற்கு முக்கிய காரணமே மோசமான வெளிச்சத்தில் பூச்சிகள், பாம்புகள் மற்றும் முட்களால் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது. இதுவே பின்னாளில் ஒரு மூட நம்பிக்கையாக மாறி விட்டது.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின் குளித்தல்
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின் குளிப்பதில் எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தமும் இல்லை. இறந்த உடலில் இருந்து எந்த ஒரு தொற்றுக்களும் நம்மை பாதிக்காமல் இருக்க எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கையே இந்த பழக்கம். அக்காலத்தில் எல்லாம் ஹெபடைடிஸ், சின்னம்மை மற்றும் இதர கொடிய நோய்களுக்கு எல்லாம் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தினால் எளிதில் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தது.

மிளகாய் அல்லது உப்பை யாருடைய கையிலும் நேரடியாக கொடுக்காதீர்கள்
அன்பான விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றதாகும் இந்திய நாடு. ஒருவரின் கையில் உப்பை கொடுப்பதற்கு பதிலாக, ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுப்பதை ஒரு கனிவான செயலாக பார்த்தனர். இதனால் உணவை உண்ணுபவர்கள் தங்களுக்கு தேவையான உப்பு அளவை தாங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

நவராத்திரியின் போது விரதம் இருந்தால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்
9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் போது, உங்கள் உடலின் செரிமானம் மீண்டும் சிறப்பாக செயல்பட துணை புரிந்திடும். இதுவே இந்த விரதத்திற்கு பின்னணியில் உள்ள அறிவியல் ரீதியான காரணமாகும். மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் இது உதவுகிறது.

உங்கள் பாதையில் கருப்பு பூனை கடந்தால் அபசகுனம்
பல பண்பாடுகளில் கருப்பு பூனைகளை சூனியத்திற்கு துணை நிற்கும் விலங்கினமாக பார்க்கின்றனர். ஆனால் பண்டைய எகிப்தியர்களோ அதனை அதிர்ஷ்டமாக பார்த்தனர். இதற்கு பின்னணியில் நேர்மறையான விளக்கம் எதுவும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற இந்த நம்பிக்கையை இன்றளவும் கூட பலர் பின்பற்றுகின்றனர்.

உப்பை கொட்டாதே; அது துரதிஷ்டத்தை கொடுக்கும்
இடைக்காலங்களில் உப்பு என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருந்து வந்தது. மேலும் அது மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் உப்பை கொண்டு செல்லும் போது, அதனை கவனமாக எடுத்து செல்ல சொன்னார்கள். இந்த பழக்கமே பின்னாளில் மூட நம்பிக்கையாக மாறி விட்டது.

வெளியே செல்வதற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுதல்
தயிர் குடிப்பது, வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், வெயில் காலத்தில் வெளியே செல்பவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தார்கள். அது உடனடி க்ளுகோஸாக செயல்பட்டது. இந்த பழக்கம் அப்படியே அதிர்ஷ்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.