Saturday, 28 September 2013

குழந்தைகளை தூங்க வைக்க!

குழந்தைகளைத் தூங்கவைக்க..!
பத்துமாதம் சுமந்து பெறுவது கூட
பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல.
குழந்தை பிறந்து ஒரு வருடம்
வரை அதனுடைய
ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்கு போராட்டம்தான்.

குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம்.

குழந்தையின்
தூங்கும் நேரம்
பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத்
தூக்கமில்லாத பகல்களும்,
இரவுகளுமே மிஞ்சும்.
குழந்தைகளைத் தூங்க வைக்க
தாய்மார்களுக்கு சில யோசனைகள்:

குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள்
வரை, அதற்கு இரவு, பகல்
வித்தியாசம் தெரியாது.
எப்போது தூங்கும்,
எப்போது விழிக்கும் எனச் சொல்ல
முடியாது. மாதங்கள் போகப்
போகத்தான் இது சரியாகும்.
ஆறாவது மாதத்திலிருந்து சில
குழந்தைகள் இரவு வேளைகளில்
தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும்
படுக்கையை நனைக்கும் நேரம் தவிர,
மற்ற நேரங்களிலும்
அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச்
சந்தர்ப்பங்களில்தான்
குழந்தை தூங்கும் நேரத்தைத்
தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும்.
தூக்கம் என்பது இரவு நேரச் செயல்,
அதாவது எந்தவித விளையாட்டும்
இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த
வேண்டும்.
குழந்தை விழித்துக்
கொண்டிருக்கும் பகல் வேளைகளில்
நிறைய வேடிக்கைகள் காட்டவும்
இரவில் அதைத் தவிர்க்கவும்
உங்களுக்கு வசதியான நேரத்தில்
குழந்தையைத் தூங்க வைத்துப்
பழகுங்கள்.
சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேர
குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள்.
பிறகு பவுடர் போட்டு தளர்வான
ஆடைகளை மாற்றிவிடவும்.
இது தூங்குவதற்கான இரவு நேரம்
என்ற எண்ணத்தை குழந்தையின்
மனத்தில் ஏற்படுத்தும்.
குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் படுக்க
விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டோ
இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச்
செய்யவும். குழந்தை தூங்கும்
அறை அதிக வெளிச்சமில்லாததாக
இருக்க வேண்டும்.
சில குழந்தைகள்
சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும்.
பாதி தூக்கத்தில் எழுப்ப
மனமின்றி தாய்மார்களும்
அப்படியே விட்டு விடுவதுண்டு,
பிறகு பசியெடுத்து விழித்துக்
கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி,
உடனடியாக மறுபடியும் தூங்க
வைத்து விடவும். பாதி தூக்கத்தில்
எழுந்திருக்கும்
போது விளையாட்டு காட்ட
வேண்டாம்.
தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில்
குழந்தையின் உடல் நலம்
பாதிக்கப்பட்டுள்ளதா எனவும்
பார்க்கவும். தூக்கத்தில்
குழந்தை சிணுங்கினாலோ,
அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க
வேண்டாம். சில நிமிடங்களில்
அது தானாகவே தூங்கிவிடும்.
அப்படித் தூங்காவிட்டால்
அதனருகில்
உட்கார்ந்து மென்மையாகத் தடவிக்
கொடுத்து, நெற்றி கழுத்துப்
பகுதியில் வருடினால்
தூங்கிவிடும்.
குழந்தை பிறந்த அடுத்த
மாதத்திலிருந்தே அதன் தூக்கப்
பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினமும் ஒரே நேரம் தூங்கும்
பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும்.
எப்படியோ தூங்கினால் போதுமென
ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க
வேண்டாம். குழந்தை தானாகத்
தூங்கட்டும் என்று விட வேண்டாம்.
சாப்பாடு கொடுத்த சில
நிமிடங்களில் தூங்க
வைப்பதே சிறந்தது. தூங்குமிடம்
காற்றோட்டமாக, அமைதியானதாக
இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில்
குழந்தையை அணைக்க வேண்டாம்.
குழந்தையின் தூக்கம் கெடும்.

ஞாபகம்

மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
சற்று முன் கேட்ட டெலிபோன்
நம்பரை உடனே திருப்பிச் சொல்ல
முடிகிறது. ஒரு மணிநேரம்
கழித்து அதே நம்பர்
மறந்துவிடுகிறது. ஆனால்
நமது சொந்த டெலிபோன் எண்,
பிறந்த தேதி போன்ற நம்பர்கள்
என்றும் மறப்பதில்லை.
ஏன் இப்படி?
நமக்கு இரண்டுவித
ஞாபகசக்தி இருக்கிறது.
தற்காலிக நினைவு மற்றது
நிரந்தர நினைவு.
நினைவுகள் யாவும் மூளையில்
நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக்
கேட்டதும் அதற்கான
ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப்
பதிவு செய்வதில் முனைகிறது.
இந்த நரம்புக்கூட்டத்தை “ட்ரேஸ்’
என்று (Trace)கூப்பிடுகிறார்கள்.
நமக்கு தற்காலிக
நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும்
அதே சமயம் நிரந்தர
நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும்
ஒரே சமயத்தில் மூளையில்
உருவாகிறது. மூளையில், தற்காலிக
ட்ரேஸானது காம்மா கதுப்பிலும்
நிரந்தர ட்ரேஸ்கள்
ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும்
காணப்படுகின்றன.
இதே அமைப்பு ஈக்களிலும்
காணப்படுகிறது என்றால் நம்ப
முடிகிறதா?
ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல்
முறையாக
கேட்கும்போது அல்லது படிக்கும்போது இரண்டு
டிரேஸிலும் பதிகிறது. தற்காலிக
டிரேஸ் வேகமாக உருவானாலும்
அது உடனே கலைந்து விடுகிறது.
நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக
உருவாகிறது.
அது முடிவடையவேண்டுமானால்
மீண்டும்
அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம்
அனுபவிக்க வேண்டும். நிரந்தர
டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம்
முறை, மூன்றாம்
முறை தூண்டப்படும்போது அதன்
டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப்
பெற்றதும் அது நிரந்தர
நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ்
எத்தனை முறை தூண்டப்பட்டாலும்,
அது உடனே கலைந்துவிடுகிறது.
ஈ க்குக்கூட தற்காலிக, நிரந்தர
நினைவுகள்
இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங்
ஹார்பர் ஆய்வுக்கூடத்தின்
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈயை சின்னக் குழாயில்
வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய
காற்றை அனுப்பும்போது கூடவே லேசான
மின்சார ஷாக் கொடுப்பார்கள்.
அதற்கப்புறம் ஈக்கு ஷாக்
கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக்
காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும்.
அல்லது துர்நாற்றக்
காற்று வரும்போதெல்லாம் ஷாக்
அடிக்குமோ என்று அஞ்சும். ஈயின்
காம்மா கதுப்பிலும்
ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த
அனுபவம்
பதிகிறது என்று தெரிந்துகொண்டனர்.
நுட்பமான கத்தி மூலம் இந்த
கதுப்புகளை ஒவ்வொன்றாக
வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப
தற்காலிக அல்லது நிரந்தர
நினைவுகள் மறைவதைக்
கவனித்தனர். ஒரு படி மேலே சென்று,
நிரந்தர நினைவினை சேமிக்க
உதவும் என்ஸைமினையும் அதற்கான
ஜீனையும் கண்டுபிடித்தனர். என்ன
ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட
அதே ஜீனும் அதே என்ஸைமும்
இருக்கிறது.
நினைவினை சேமிக்கும் தந்திரம்
ஈயில் தோன்றி பின் மனிதன்
வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்
எல்லாருக்கும் ஒரு சேதி; எதை நீங்கள்
நிரந்தரமாக நினைவில்
பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக
நினைத்துப் பாருங்கள் மீண்டும்
அதை மறுபடி மறுபடி மூன்று முறை சிறிது நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டி பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள்.
மறக்க மாட்டீர்கள் அதற்கு நான்
கியாரண்டி.

முட்டை

முட்டை உள்ளிருந்து தன்னால்
உடையும் போது
ஒரு உயிர் பிறக்கிறது..
வெளியில் இருந்து நம்மால்
உடைக்கப்படும் போது
ஒரு உயிர் அழிகிறது..
நல்ல மாற்றங்கள் எதுவாயினும்
அது அவரவர்
உள்ளிருந்து தன்னால் பிறக்க
வேண்டும்..
கையாளத் தெரியாமல் வெளியில்
இருந்து
அதிகம் அழுத்தினால் மனங்கள்
உடைந்து போகுமே தவிர
மாற்றம் இருக்காது...