Thursday, 13 May 2021

குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும்உணவுகளும் வழிகளும்!

குழந்தையின் ஞாபக
சக்தியை அதிகரிக்கும்
உணவுகளும் வழிகளும்!
ஒவ்வொருவரும்
தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள்
புத்திசாலியாகவும் ஞாபக
சகதியில் புலியாகவும் விளங்க
வேண்டும்
என்று விரும்புவது இயற்கைதான்.
அப்படி விரும்புவர்கள் முதலில்
தங்கள் குழந்தைகளுக்கு நல்ல
மூளை வளர்ச்சியைத் தரும்
உணவுகளை தர வேண்டும்.இந்த
உணவானது உடலுக்கு மட்டும்
நன்மையைத் தருவதில்லை,
மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
இத்தகைய
மூளையை ஆரோக்கியமாக வைக்கும்
உணவுகளை உண்பதால்
குழந்தைகளின் நினைவாற்றல்
அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக
சக்தியும் கூடுகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம்
மூளை நரம்புகள்
வயது முதிர்ச்சியாலும்,போதிய
போசாகின்மையாலும், மன
அழுத்தத்தினாலும் சோர்வடைவதே.
அதனால் மூளை சரியாக எதையும்
ஞாபத்தில் வைத்துக் கொள்ள
முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த
ஒரு முக்கியமான வேலையை செய்ய
நினைத்தாலும்,
அதனை உடனே மறந்துவிடுவர்.
இவை அனைத்திற்கும் சரியான
உணவுகளை சாப்பிடாததும்
ஒரு காரணம். எனவே ஞாபக
சக்தியை அதிகரிக்கவும்,
மூளையை சுறுசுறுப்புடனும்
வைத்துக் கொள்ள உதவும்
உணவுகளை சரியாக
சாப்பிட்டு வந்தால், ஞாபக
சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன்
மூளையின்
செயல்பாட்டை அதிகரிப்பதோடு,
உடலையும் ஆரோக்கியத்துடன்
வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள்
உண்ணும் தாய்மார்களுக்குப்
பிறக்கும் குழந்தைகள் மிகுந்த
புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில்
இருக்கும்போது மூளை தொடர்பான
நோய்கள் தாக்குவதும் குறைவாக
இருக்கும்.குழந்தைகளின்
மூளையும் சிறப்பாக
வளர்ச்சி அடையும்.
கர்ப்பிணிகளாக
இருக்கும்போதே ஆரம்பித்து,
பிரசவசத்துக்குப் பின்
குழந்தைகளிடமும் இந்த
ஆய்வு தொடர்ந்தது. அதில்,
கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம்
உண்ட தாய்களின் குழந்தைகளின்
புத்திக் கூர்மையும்,
அவர்களது கை-கண்
இணைந்து செயல்படுவதும்,தகவல்
தொடர்பும் மிகச் சிறப்பாக
இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான
ஒமேகா-3 fatty
acids’ (docosahexaenoic acid)
மீன்களில் அதிகமாக
காணப்படுவதே இதற்குக் காரணம்.
தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3
fatty acids’ அளவு மிகவும்
குறைவாக இருந்தால்
குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும்
வாய்ப்புள்ளது.
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட
உணவுகள்…
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட
உணவுகளில் அதிகமாக
புரோட்டீன், கால்சியம்,
பொட்டாசியம் மற்றும் வைட்டமின்
டி உள்ளது.
இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற
பாலானது நரம்புத்தசை மண்டலத்தை
நன்கு இயக்குவதோடு மற்றும்
மூளை செல்களை நன்கு செயல்பட
வைக்கிறது. அதுவும் வளரும்
குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல
ஒரு உடல் வளர்ச்சியைத்
தருவதோடு, மூளையையும்
சுறுசுறுப்பாக வைக்கிறது.
முட்டை மற்றும் நட்ஸ்…
மூளையின் ஞாபக
சக்தியை அதிகரிக்கும் செல்களின்
முக்கியமானது தான் கோலைன் சத்து.
இது முட்டையில் அதிகம்
இருக்கிறது. மேலும் இதை அதிகம்
உண்பதால், ஞாபக
சக்தி அதிகரிப்பதோடு,
மூளையானது களைப்படையாமல்
சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ்
அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள
வைட்டமின்
டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
தானிய வகைகள் …
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ்
அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும்
சிவப்பு அரிசியை அதிகம்
சாப்பிட்டால்,
மூளையானது ஆரோக்கியமாக
இருக்கும். நமது உடலுக்கு தினமும்
ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால்
நல்லது. மேலும் வைட்டமின்
பி அதிகம் இருப்பதால், உடலில்
இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால்,
உடலில் எல்லா பாகங்களும்
சுறுசுறுப்பாக இருக்கும்.
மீன் :
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
அதிகம் உள்ளது. இந்த
ஃபேட்டி ஆசிட்
இதயத்திற்கு மட்டுமின்றி,
மூளையின் செயல்பாட்டிற்கும்
சிறந்தது. ஏனெனில் மூளையின்
செயல்பாட்டிற்கு ஒமேகா-3
ஃபேட்டி ஆசிட் மிகவும்
முக்கியமானது. மேலும
இது மூளைச் செல்களின்
இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும்
குறிப்பாக ஹெர்ரிங், சால்மன்,
சூரை (Tuna), கானாங்கெளுத்தி,
பொத்தல், நெத்தலி, மற்றும்
மத்தி போன்றவை மிகவும்
சிறந்தது.
இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான
DHA மற்றும் EPA அதிகம் உள்ளது.
இது மூளை வளர்ச்சிக்கு மிகவும்
நல்லது. மற்ற உணவுப்
பொருட்களை மீனிலேயே
அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும்
திறன் அதிகமாக உள்ளது. மேலும்
மற்ற உணவுப்பொருட்களான
காய்கறிகளில் தக்காளி, கேரட்,
பீன்ஸ், கீரைகள் போன்றவையும்
சிறந்தது. ஆகவே மேற்கூறிய
உணவுப்
பொருட்களை குழந்தைகளுக்கு
தினமும் கொடுத்து வந்தால்
மூளையானது நன்கு
சுறுசுறுப்போடு இருப்பதோடு,
ஆரோக்கியமாகவும் இருக்கும்.
க்ரீன் டீ:
க்ரீன் டீயில் மூளைச் செல்கள்
பாதிப்படையாமல் தடுக்கும்,
ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
எனவே இதனை குடிப்பதால் ஞாபக
சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான
மனநிலை மாறும்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்களில் குவர்செடின்
என்னும் மூளைச் செல்களில்
இயக்கத்தை அதிகரிக்கும் பொருள்
உள்ளது. அதுமட்டுமின்றி இதில்
ஆந்தோசையனின் என்னும்
ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர்
என்னும் ஞாபக
மறதி நோயை தடுக்கும். அதிலும்
சில பெர்ரிப் பழங்களான
ராஸ்ப்பெர்ரி,
ப்ளூபெர்ரி போன்றவை மிகவும்
சிறந்தது.
பச்சை இலைக் காய்கறிகள் :
பொதுவாக கீரைகள், காய்கறிகள்
போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால்,
ஞாபக சக்தி அதிகரிக்கும்
என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
அவர்கள் சொன்னது பொய்யல்ல
உண்மை தான். அதிலும் பசலைக்
கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி,
காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ்
போன்றவற்றில் ஞாபக
சக்தியை அதிகரிக்கும் பொருள்
இருப்பதோடு, வைட்டமின்கள்
மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம்
இருப்பதால், உடலும்
ஆரோக்கியத்துடன் இருக்கும்.
தேன்:
தேனில் அளவற்ற நன்மைகள்
அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக
சக்தியை அதிகரிப்பதும் ஒன்று.
எனவே தினமும் காலையில்
எழுந்து ஒரு ஸ்பூன்
தேனை சாப்பிட்டால்,
எடை குறைவதோடு, ஞாபக
சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ் :
நட்ஸில் மூளையின்
சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்
ஈ மற்றும் பி6 இருக்கிறது.
எனவே தினமும் ஒரு கை பாதாம்,
பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது,
ஞாபக சக்திக்கு மட்டுமின்றி,
முழு உடலுக்கும் நல்லது.
தண்ணீர்:
மூளையில் நான்கில்
மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது.
எனவே தண்ணீர் குறைவானால்
மூளையில் செயல்பாடும் குறைந்து,
மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக
சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர்
குடிப்பதால், மூளையில்
வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள்
சுறுசுறுப்போடு செயல்படும்.
ஒயின் :
நிறைய பேர் ஆல்கஹால்
பருவதற்கு தடை சொல்வார்கள்.
ஆனால் ஆல்கஹால் குடிப்பதால்,
மூளையின்
செயல்பாடு அதிகரிக்கும். அதிலும்
ரெட் ஒயின் தான் மிகவும் சிறந்தது.
ஆகவே இதனை குடிப்பதால்,
மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக
இருந்து, அல்சீமியர் நோய்
ஏற்படுவதை தடுக்கும். மேலும் ரெட்
ஒயின் மூளைக்கு மட்டுமின்றி,
இதயத்திற்கும் நல்லது.
ரோஸ்மேரி:
ரோஸ்மேரி சாலட் மற்றும்
டாப்பிங்கில்
அலங்கரிப்பதற்கு மட்டும்
பயன்படுவதில்லை.
அவை மூளையின் இயக்கத்திலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த
ரோஸ்மேரியில் மூளையின்
வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-
ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.
பொதுவாக ஞாபகம் ஒரு வியாதி,
மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்,
ஆனால் நம்
குழந்தை படித்தததை எல்லாம்
மறக்கும் போது மறதி ஒரு சாபம்
போல நமக்கு தோன்றும்.
அப்படியான ஞாபகம் குறித்து சில
தகவல்கள்:
நாம் பார்க்கும், கேட்கும், உணரும்,
சுவைக்கும், முகரும்
அனைத்துமே நமது ஞாபகங்கள்
ஆகும். இது முதலில் குறைந்த
நேரமே மனதில் இருக்கும்
(சென்சரி மெமரி).
உடனே மறந்து விடும்.
இந்த சென்சரி மெமரியில் நாம்
முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து
கவனித்தால் அது ஷார்ட் டெர்ம்
மெமரி ஆக பதிவாகும். இதுவும்
சில மணித்துளிகளுக்கு மட்டும்
இருக்கும்.
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத்
திரும்ப செய்யும்போது அது நாள்
பட்ட ஞாபக சக்தியாக மாறும்.
எனவே ஞாபக சக்திக்கு மிகவும்
முக்கிமானது இரண்டு: ஆர்வம்
மற்றும் கவனம், திரும்ப திரும்ப
செய்தல்.
மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க
வாய்ப்பு உள்ளது, இதுவும்
நல்லது தான். சில சமயம் வாழ் நாள்
முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட
ஞாபகத்தை இரண்டு வகையாக
பிரிக்கலாம்: explicit & implicit
explicit என்பது கொஞ்சம்
யோசித்தால்
நினைவுக்கு கொண்டுவர
முடியும்.
implicit என்பது யோசிக்க
தேவை இல்லாமல்
உடனே நினைவுக்கு கொண்டு
வருதல்.
நினைவு திறனை சிறு உதாரணம்
கொண்டு விளக்கலாம்:
மிதி வண்டி ஓட்ட
பழகுதலை எடுத்துக் கொள்வோம்.
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது –
சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட
கற்று கொள்வது – ஷார்ட் டெர்ம்
மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம்
explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது – லாங்
டெர்ம் implicit மெமரி (சாகும்
வரை மறக்காது)
இனி நினைவு திறனை
அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய்
மொழியிலேயே சிந்திக்க
வேண்டும், நீங்கள்
படிப்பது ஆங்கிலமோ,
ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள்
தாய் மொழி என்னவோ அதில்
சிந்தித்து மனதில் பதிய செய்ய
வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க
கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள்
ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics
வைத்து படிப்பது ஒரு கலை.
அதை உங்கள்
குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news – north, east, west,
south
* படித்தவுடன் எழுதி பார்க்கும்
பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஹோம் வொர்க் என்ற பெயரில்
கடமைக்கு எழுதும்
சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள்
மனதில் பதியும். பட
விளக்கங்களை திரும்ப திரும்ப
வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம்.
குறைந்தது 8 மணி நேர தூக்கம்
கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம்
தூங்கி அதிகாலை படிக்கும்
படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த
அனைத்தையும்
ஒரு முறை மேலோட்டமாக
நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
அப்படி செய்யும் போது நாம்
தூங்கினாலும் நம் மூளையின் சில
மூலைகள் விழிப்புடன்
இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம்
மெமரியில் இருந்து லாங் டெர்ம்
மெமரியில்
பதிவு செய்து கொண்டு இருக்கும்.
இது மிக முக்கியமான
பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த
நிலையை ஏற்படுத்தும்,
எனவே புரதம் நிறைந்த எளிதில்
செரிக்கும்
உணவை சேர்த்துகொள்வது நல்லது.