Monday, 19 June 2017

கவலை இன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிகள்

கவலை இன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிகள்

1. Take a 10-30 minute walk every day. And while you walk, smile. It is the ultimate anti-depressant.

தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் புன்னகையோடு! இவை இரண்டும் சிறந்த மனச்சோர்வு நீக்கும் மருந்துகள்!

2. Sit in silence for at least 10 minutes each day.

தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்!

3. When you wake up in the morning complete the following statement, “My purpose is to ______ today.”

காலையில் கண் விழிக்கும் போது, இன்று நான் ………. இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

4. Live with the 3 E’s — Energy, Enthusiasm and Empathy.

ஆற்றல், ஆர்வம், கருணை இவை மூன்றையும் கைக்கொள்ளுங்கள்

5. Plan to read at least one book every month .

மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

6. Make time to practice meditation or prayer. They provide us with daily fuel and a mental center to focus on in our busy lives.

கடவுள் வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நம் பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் மன ஒருமைப்பாட்டை வளர்க்க இவை உதவும்.

7. Spend more time with people over the age of 70 and under the age of 6.

6 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதிற்கு அதிகமான முதியோரிடமும் அதிக நேரம் செலவழியுங்கள்.

8.Dream more while you are awake.

விழித்திருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்.

9. Try to eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளை விட இயற்கையாக மரம், செடிகளில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

10. Drink green tea and plenty of water.

அதிகமாக தண்ணீர் மற்றும் மூலிகைத் தேயிலை அருந்துங்கள்

11. Try to make at least three people smile each day with your humor sense..

உங்கள் நகைச்சுவை உணர்வால், தினம் ஒருவரையாவது சிரிக்க வையுங்கள்.

12. Clear clutter from your house, your car, your desk and let new and flowing energy into your life .

கன்னா பின்னாவென்று கிடக்கும் உங்கள் வீடு, கார், மேசை ஆகியவற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

13. Don’t waste your precious energy on gossip, OR issues of the past, negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive aspects of the moment.

தேவையில்லாத கிசு கிசுக்கள், ”மொக்கைகள்”, எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.

14. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class, but the lessons you learn will last a lifetime.

வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள்! ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்!

15. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a college going girl .

காலை உணவை ராஜா போலவும், மதிய உணவை ராணி போலவும், இரவு உணவை கல்லூரி மாணவி போலவும் உண்ணுங்கள்.

16. Smile and laugh more. It will keep the negative blues away.

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்!

17. Life isn’t fair, but it’s still good.

வாழ்க்கை எப்போதும் நியாயமானதல்ல எனினும் சிறந்தது.

18. Life is too short to waste time hating anyone.

வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்

இழிநிலைக்கு காரணம் சுயநலம்...

இழிநிலைக்கு காரணம் சுயநலம்...

சேவை புரியாமலேயே உயர்நிலை அடைய வேண்டுமென ஆசைப்படுபவர்கள், அப்படிப்பட்ட நிலையை எட்ட முடியாது.

உயர்வு தாழ்வு என்னும் தப்பான எண்ணத்தைக் கற்பிதஞ் செய்து கொள்ளும் பொழுதுதான், சமுதாயத்தில் சிக்கல்கள் எழுகின்றன.

இந்தியாவிலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இன்று நிலவுகின்ற இழிநிலைக்கான காரணம் மனிதர்களின் பேராசை, சுயநலம், வரட்டுக் கவுரவம், அகங்காரம் போன்ற விரும்பத்தகாத பண்புகளேயாகும்.

மக்களின் பொதுவான இயற்கைத் தேவைகளையும், விருப்புகளையும் புரிந்து கொள்ளாமல், எப்பொழுதும் கடும் ஒழுக்கக்கட்டுப்பாட்டை மட்டுமே வலியுறுத்துகின்ற சமயம் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது.

மாணவர்கள் தமது விதியையும், தேசத்தின் தலைவிதியையும் உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும். இது அவர்களுக்குரிய மாபெரும் பொறுப்பாகும்.

உங்களுக்குரிய வாழ்க்கையை அமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னேறுவதற்குப் பிறரை நம்பியிருக்காதீர்கள். பொறுப்புகளை ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுங்கள்.

தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. தோற்றுவிடுவோமோ என அஞ்சினால் உன்னால் ஒருபோதும் எதனையுமே சாதிக்க முடியாது.

பிரச்னைகளைக் கண்டு மலைக்காமல், அவற்றைத் துணிவாக எதிர்கொள்ளுங்கள்.அவற்றிலிருந்து தப்புவதற்காக ஒழிந்து கொள்ள முயன்றால் மேலும் பல சிக்கல்களே உருவாகும்.

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

‘புலரும் ஒவ்வொரு பொழுதும் நாம் இழந்துவிட்டதை மீண்டும் அடைய ஒரு புது வாய்ப்பு!’

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்.

நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லட்சியங்களும் இருக்கும்!!

இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!

ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மகனுடைய லட்சியத்தை செவியுற்று மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். வருகின்ற வழியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்கையில் மகன், ‘அம்மா நான் பெரியவனானதும் கண்டக்டராகப் போகிறேன்.’ என்றான்.

நம்முடைய வயதும் அனுபவமும் அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய பார்வையின் கோணமும், ஆழமும் மாறத்தான் செய்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அந்த மாற்றம் நம்முடைய வாழ்க்கையின் போக்கை அடியோடு புரட்டிப் போட்டுவிட நாம் அனுமதிக்கலாகாது.

கள்வனைப் பார்த்து கள்வனைப் போலானால் என்ன என்றும் காவலனைப் பார்த்து காவலானானால் என்ன என்றும் நினைத்தால் அது ஒன்றுக்கொன்று முரணான பார்வையாகிவிடும்.

நம்முடைய லட்சியம் ஒன்றே ஒன்றுதான்..

அது என்னவென்பதைக் குறித்த காலத்தில் கணித்துக்கொண்டு அந்த இலக்கை நோக்கியே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வும் அமைய வேண்டும்.

லட்சியத்தையடைய நாம் வகுத்திருக்கும் பாதைகள் மாறலாம், ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய தவறான பாதையால், அணுகு முறையால் தோல்விகளை, சரிவுகளைச் சந்திக்க நேரலாம்.

ஆனால் நம்முடைய லட்சியப்பயணத்தில் சோர்வோ, தயக்கங்களோ அல்லது தடுமாற்றங்களோ இருக்கலாகாது.

இன்று இல்லையேல் நாளை, நாளையில்லையேல் மறுநாள்..

புலரும் ஒவ்வொரு பொழுதும் நமக்கு புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்தும் யுகங்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்..

புலரும் ஒவ்வொரு நாளும் எப்படி மடிகிறதோ அதுபோன்றே தோல்விகளும், சரிவுகளும்..

ஒரு சரிவு முடிவடையும் இடத்திலிருந்து மற்றொரு உயர்வு ஆரம்பமாகிறது என்பதையும் மறக்கலாகாது..

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

Sunday, 18 June 2017

வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்!

வெற்றி இலக்கை அடைய சுலபமான 5 வழிகள்!

ஒரு ஈசியான வழி இருக்கிறது. எப்போதும் எடுக்கும் முயற்சியைவிட, கூடுதலாக நீங்கள் கடுமையாக உழைத்தால் வெற்றிக்கு அருகில் நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற தீவிரமாக உழைக்கவேண்டும். உழைப்பின்றி வெற்றிக்கனி கிடைப்பதென்பது நிஜத்தில் சாத்தியமற்றது.

உங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் 5 சுலபமான வழிகள் இதோ!

1.இந்த முக்கிய கேள்விகளை உங்களிடமே நீங்கள் கேளுங்கள்.

உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தை காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் ஐடியா ஏற்ப்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள். சமூகத்தில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கத்தை விட்டுச்செல்லப் போகிறீர்கள் என்ற நினைப்பே உங்களுக்கு ஊக்கத்தை கொடுத்து உந்துதலை அளிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலனை உணர்ந்தால் நீங்கள் செய்யும் வேலை சுலபமாக தெரியும், அதனோடு உங்களுக்கு நெருக்கமும் கிட்டும்.

2.உங்கள் முன்னேற்றத்தை அளவிடும் செயற்திட்டத்தை உருவாக்குங்கள்.

எத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாக ஆகிவிடும். உங்களின் இலக்கு, அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக வரையறுங்கள். இந்த திட்டம் ரெடி ஆனவுடன், பணியை தொடங்குங்கள். ஒரு ஐடியா முழுதும் நிறைவு பெறாமல் அடுத்தவற்றுக்கு தாவாதீர்கள்.

3.தொழில் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்.

தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் சுயநலமாக இருந்து உங்களைப் பற்றி மட்டும் யோசித்தால், மற்றவர்களும் அதேபோல் உங்களிடம் இருப்பார்கள் என்பதை மறவாதீர்கள்.

4.உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிடுங்கள்.

உங்கள் வேலை பலு அதிகமாக இருக்கும். ஆனால் அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது நல்லதல்ல. குடும்பம், நண்பர்கள் என்று அவருகளுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். அதே போல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படிப்பது, சினிமா என்று நீங்கள் விரும்பிய ஒன்றை செய்ய தவறாதீர்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும்.

5.உங்களின் முக்கிய இலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் தொடங்கிய முக்கிய இலக்கை எப்போதும் மறவாமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். உயரிய இலக்கை அடைய மூன்று வழிகளை எழுதிவைத்து அதை ஒவொன்றாக நிறைவேற்றிடுங்கள். அதே போல் ஒவ்வொரு நாளும் அதே ஊக்கத்துடன், குறிக்கோளுடன் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை நீங்கள் நெருங்கமுடியும்.

வாழ்க்கைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாக வகுத்துக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே உங்கள் கனவு நிறைவேற வழி கிடைக்கும். உற்சாகமாக மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்!

Tuesday, 6 June 2017

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே..

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.......

உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!

உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…

நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

அரசியலும், அர்த்தசாஸ்திரமும்...

அரசியலும், அர்த்தசாஸ்திரமும்...

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாமென்ற ஒற்றை சௌகரியத்தை வைத்துக்கொண்டும்.. எதை வேண்டுமானாலும் பேசலாமென்ற கருத்து சுதந்திரத்தை தவறாக புரிந்துக்கொண்டும் வருகிறார்கள்..

அரசியல் சதுரங்கம், மாக்கியவெல்லிய, சாணக்கியம், நெறி சார்ந்த அரசியல், நேர்மையான அரசியல், தந்திர உபாயங்கள், ராஜதந்திரங்கள், அரசியல் சூழ்ச்சிகள், அரசியல் குடிலங்கள், மக்கள் நல அரசு (Welfare State), ஜனநாயகம், குடியரசு, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, விலை போன வாக்குகள் (மன்னிக்கவும். வாக்கு விபச்சாரம்), பிரச்சார அரசியலும், உறுதிகளும், மறதிகளும், ஊழலும், ஊழலை நியாயப்படுத்த சேவை கட்டணம், நீதிவிசாரணைகள், நீதிவிசாரனை அறிக்கைகள், கிடப்பில் போட்ட அறிக்கைகள் இப்படியான பதங்களுக்கு, சொல்களுக்கு அகராதியில் நேர்மையான, யதார்த்தமான அர்த்தங்கள் இன்றைய சூழலில் பின்நவீனத்துவ பாணியில் தேவை. ஜனநாயகத்தின் இறையான்மை மக்கள் சக்தி தான்.

அரசியலுக்கு சம்மந்தமான அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில செய்திகள்.

ஏமாற்றும் மனைவி,
போலியான நண்பன்,
சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும்.
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும்இருக்க வேண்டாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு.

பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1.சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2.கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

3.விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4.இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5.கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , அறகாரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன
பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்தை செய்யுங்கள்.