Sunday, 22 February 2015

வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

ஒரு நல்ல குறிக்கோளோடு இருந்தாலே போதும், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணம் தவறானது.

குறிக்கோள் மட்டும் போதாது; அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய நடை, உடை, பாவனைகள்தான் உங்களுடைய பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கின்றன. அவற்றை நல்ல பழக்கங்களாகக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!

1. சிறந்த தொடர்புகள்!

உங்கள் பக்கத்து வீட்டு ஐ.டி. நண்பர் முதல் பக்கத்துத் தெரு பலசரக்குக் கடைக்காரர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.

2. சிறந்ததையே செய்யுங்கள்!

உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள். ஆனால், இதில் கிடைக்கும் வெற்றியால் உங்களுக்குத் தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

3. திட்டமிடுங்கள்!

நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எனர்ஜி இருக்கும்போது கடினமான காரியங்களை முதலில் செய்து முடியுங்கள். சிறிய, எளிதான காரியங்கள் அப்புறம் தானாகவே முடியும்.

4. அசை போடுங்கள்!

ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு சிறிது நேரமாவது அசைபோட்டுப் பாருங்கள். நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு அருமையான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

5. துணிவே துணை!

எதையும் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில் எவ்ளோ பெரிய பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்தாலும் உங்கள் துணிச்சல்தான் உங்கள் வெற்றிக்கு ஆணிவேர்.

6. சவாலே சமாளி!

எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

7. அன்றே செய்!

'ஒன்றே செய்; அதை நன்றே செய்; அதையும் இன்றே செய்!' என்று சொல்வார்கள். எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். அன்றைக்குள்ளாகவே செய்து முடித்து விடுங்கள்.

8. வெற்றிக் கூட்டணி!

உங்களுக்கு முன் வெற்றி பெற்றவர்களுடனேயே கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் அவர்களுடைய நேர்மையும் கடும் உழைப்பும் உங்களுக்குப் புரியும். உங்கள் வெற்றிக்கும் கை கொடுக்கும்.

9. கடும் உழைப்பு!

நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் போட்டியாளர்களைவிட அதிகமாக உங்கள் உழைப்பைக் கொட்டினால் வெற்றி என்பது கைகூடி வரும் விஷயம்தான்.

10. இடைவேளை!

உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.

11. வேகமாக எழவும்!

அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.

12. உடல் நலம்!

ஒரு நல்ல வெற்றியாளராக வேண்டுமானால், உங்கள் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது.

13. நல்ல விஷயங்கள்!

நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்!

14. பயணம்!

புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்!

15. தன்னம்பிக்கை!

வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!

16. தியாகம்!

ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!

17. அடுத்தகட்டம்!

நீங்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டே நீங்கள் அடுத்தகட்டத்திற்கான காய்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

18. மதிப்பீடு!

உங்களுடைய ஒவ்வொரு லட்சியத்தையும் அடிக்கடி மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் பணியின் உண்மையான ப்ளூ பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்கும். இதுதான் உங்கள் வெற்றிப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.

19. தோற்றம்!

உங்களுடைய வெற்றிக்கு உங்கள் தோற்றமும் மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான நேரங்களில் உங்கள் தோற்றமே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் உடையாக இருக்கும்.

20. நீங்கள் நீங்களாகவே!

உங்களுக்கு எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்களைத் தலைக்கனம் கொண்டவனாக மாற்றிவிடக் கூடாது. உங்கள் வெற்றியின் உண்மையான ரகசியமும் இதுவே!

Tuesday, 17 February 2015

இளமையை காக்கும் துளசி...

இன்னும் பல
நோய்களை தீர்க்கும்!
நந்தவனத்தில் எத்தனைச் செடிகள்
இருந்தாலும், அது நந்தவனமாகாது.
அதே நேரத்தில்
ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும்
அது நந்தவனம் ஆகிவிடும்
என்கிறது வேதம். துளசியின்
இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும்
மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும்,
வெண்துளசியைத்தான் நாம் அதிகம்
பயன்படுத்துகிறோம்.

மூலிகைகளின் அரசி!

‘துளசி இலை நல்லது..அதை சாப்பிட்டா
சளிப் போயிடும்...’ என்ற ஒற்றை சொல்லில்
அலட்சியப்படுத்தும் துளசி,
கட்டுப்படுத்தும்
நோய்களின்
எண்ணிக்கை ஓராயிரம்.
அதனால்தான்
இதனை ‘மூலிகைகளின்
அரசி’ என்கிறார்கள்.
நோய் வருமுன்
காத்து, வந்த
நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய்
வராத அளவுக்கு எதிர்ப்புச்
சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல்
வாய்ந்தது.
நாம் நினைப்பதுப் போல நோய்
நிவாரணி மட்டுமல்ல.. சுற்றுச்சூழலிலும்
இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள
கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக
வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது.
இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள்
செய்தாலும், துளசிக்கும் மற்ற
தாவரங்களுக்கும் வித்தியாசம்
இருக்கிறது. துளசியிலுள்ள மருத்துவ
குணம் வாய்ந்த பொருட்களால்
வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள்
போன்ற மாசுக்கள்
சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால்
சுத்தமான காற்று கிடைக்கிறது. துளசி,
அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள்
வராது.
காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து!
மாதம் ஒரு பெயரில்
புதுப்புது காய்ச்சல்
வந்துக்கொண்டே இருக்கிறது...
ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பெயர்
வைப்பதில் காட்டும் வேகம், நிவாரண
நடவடிக்கைகளில் காட்டுவதில்லை. ஆனால்,
இதுவரை வந்த காய்ச்சல், இனி வரப்போகும்
காய்ச்சல் என எந்த காய்ச்சலாக
இருந்தாலும், துளசியிடம்
இருக்கிறது தீர்வு. இதை உலகளவில்
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
ஒப்புக்கொண்டுள்ளனர். ஏற்கனவே வைரஸ்
காய்ச்சல், ஜப்பானியர்கள், என்செபலாடிடிஸ்
எனப்படும் மூளைக்காய்ச்சல்
ஆகியவற்றுக்கு துளசியைப்
பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ‘‘10
துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2
டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர்
சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு,
சிறிது எலுமிச்சை சாறை அருந்தி,
கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க
மூடிக்கொண்டு படுத்தால்
மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக
குறையும்’’ என்கிறது சித்த மருத்துவம்.
இருமலை இல்லாமல் செய்துவிடும்!
சளித்தொல்லைக்கான நிவாரணத்தையும்
தன்னுள் வைத்துள்ளது துளசி. உடலில்
வெப்பத்தை உண்டாக்கி கோழையை
அகற்றுவதுடன், உடலில்
உள்வெப்பத்தை ஆற்றும் குணமும்
இதற்கு உண்டு. துளசி சாறுடன் கொஞ்சம்
தேன் கலந்துக் கொடுத்தால்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல்
குணமாகும். இருமல், சளி, ஜலதோஷம்
உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும்
அருமருந்து துளசி. இருமலைக்
கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட
வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.

ரத்த அழுத்தம் குறையும்!

இன்றைக்கு முக்கிய நோய்களாக
மூன்றை சொல்லலாம். 'நீரிழிவு' என்ற
சர்க்கரை நோய், 'ஒபிசிட்டி' என்ற உடல்
பருமன், 'பிளட் பிரசர்' என்ற ரத்த
அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில்
பலருக்கும் இருக்கிறது. தினமும் சில
துளசி இலைகளை மென்று தின்றாலே
சர்க்கரையின் அளவு கட்டுப்படும். எடையைக்
குறைக்க, எத்தனை தூரம் ஓடினாலும்,
நடந்தாலும், ‘நான் வளர்கிறேனே மம்மி’ என
ஊட்டச்சத்து குடித்த குழந்தைப் போல
தொப்பை மட்டும்
வளர்ந்துகொண்டே இருக்கிறது.
தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து,
ஆயிரக்கணக்கான
பணத்தை செலவழித்து எது எதையோ வாங்கி
சாப்பிட்டும் பயனில்லை என
புலம்புபவர்களுக்கான தீர்வும்
துளசியிடத்தில் இருக்கிறது.
துளசி சாற்றையும்,
எலுமிச்சை சாற்றையும்
கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன்
கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு
வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்
எடை குறையும். துளசி இலை, முற்றிய
முருங்கை இலைகளை சம
அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும். அந்த சாற்றில் 50
மில்லி எடுத்து, 2
சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை,
மாலை இருவேளையும் 48 நாட்கள்
உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி,
காரம் குறைக்க வேண்டும்.

தோல் நோய் தொல்லை, இனி இல்லை!

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு
விழுது போல் அரைத்து, தோல்
நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால்
சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.
துளசி இலையுடன், அம்மான்
பச்சரிசி இலையை சம
அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள
இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்’’
என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

என்றும் இளைமை!

இவையெல்லாம் விட, என்றும் இளமையுடன்
திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான
செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல
தண்ணீரை ஊற்றி, அதில்
ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8
மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த
நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும்
வயிற்றில் 48 நாட்கள்
செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது.
அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள்
பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

உடலுக்கான கிருமிநாசினி!

துளசி அதி அற்புதமான கிருமிநாசினி.
வீட்டுக்கு கிருமிநாசினி
பயன்படுத்துவதுப் போல மனித
உடலுக்கான கிருமிநாசினியாக
பயன்படுகிறது துளசி. ஆனால், நாம் தான்
பயன்படுத்துவதில்
அக்கறைக்காட்டுவதில்லை. தினமும்
துளசி இலையை மென்று சாறை விழுங்கி
வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான
பல பிரச்னைகள் வாழ்நாள் முழுக்க
வரவே வராது. வாய் துர்நாற்றம்
இருக்கவே இருக்காது. ‘உடலில்
வியர்வை வாடை போகவே மாட்டேங்குது’
என கவலைப்படுபவர்கள், குளிக்கும் நீரில்
முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால்,
வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.
மொத்தத்தில் துளசி இலையை தினமும்
மென்று தின்பதனாலும், குடிநீரில்
போட்டு குடிப்பதனாலும் அனேக
நோய்களை விரட்டலாம் என்கிறது சித்த
மருத்துவம்.

Monday, 16 February 2015

சிறந்த பெற்றோராக இருப்போம்!

மக்கட்
செல்வமே பிற
செல்வங்கள்
யாவற்றினும்
சிறந்த
செல்வம்’ எனக்
கூறுகிறது வள்ளுவம். “பெற்றோர்’ என்ற
சொல்லுக்கேற்ற
தகுதி படைத்தவர்களாகவே பிள்ளைகளைப்
பெற்ற தாய் தந்தையரும்
வாழ்ந்து வந்துள்ளார்கள். “தம் பொருள்
என்பர் தம் மக்கள்’ வள்ளுவர் வாய்
மொழி இது. அறிவறிந்த “மக்கட் பேறு’
உடையவர்களே பெற்றோர் என்றும்
கூறுகிறார்.
குழந்தைப் பேற்றுக்குத்
தகுதியுடையவர்கள் இவர்கள் தாம் என்ற
வரைமுறைகளை வகுத்திருந்தார்கள்
அன்றையச் சான்றோர்கள். வயது வந்த
இளைஞனும், பருவ மங்கையும் தாயும்
தகப்பனும் ஆவதற்குரிய பக்குவத்தைப்
பெற்றுள்ளார்கள் என்று அறிந்த
பிறகே அன்றைய நாள்களில் திருமண
ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
தன்னைச் சார்ந்துள்ள தனது பெற்றோர்,
மனைவி, பிள்ளைகள் முதலானவர்களைப்
பேணிக் காக்கும் குடும்பப்
பொறுப்புணர்வு, பொருளீட்டும் முயற்சி,
பிறருக்குச் சான்றாக விளங்கும் தலைமைப்
பண்பு, சிக்கல்கள்
சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி
காணும் சாதுர்யம், துணிவு,
தனது நற்பண்புகளைத் தம் மக்களுக்கும்
பயிற்றுவிக்கும் நல் ஆசான் இன்னபிற
தகுதிகள் வாய்க்கப் பெற்றுள்ள ஆண்
மகனே இல்லற வாழ்வுக்கு ஏற்றவன்
என்பது அன்றையச் சான்றோர் முடிவு.
குடும்பத்தை நடத்தும் பொறுப்புணர்வு,
குடும்பத்தில் உள்ள அனைவரையும்
அரவணைத்துச் செல்லும் சகிப்புத் தன்மை,
மற்றும் தாய்மையாவதற்குரிய (உடல், உள்ளம்,
இரண்டிலும்) பக்குவ நிலை பெற்றுள்ள
மங்கையர் தாம் மணவாழ்வுக்குத்
தகுதி பெற்றவர்களாக
வரையறுத்திருந்தார்கள். “பிள்ளைகளைப்
பெறுவதனால் மட்டும் பெற்றோர் ஆகாமல்,
தமது நற்பண்புகளைப்
பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பவர்களே பெற்ற
ோர் என்ற சொல்லுக்கு ஏற்புடையவர்கள் ஆவர்’
என்ற
நமது முன்னோர்களது கருத்து மறுப்புக்கு
ரிய தன்று.
“பத்து வயதுச்
சிறுமி ஒரு குழந்தைக்குத்
தாயாகிவிட்டாள். தனது வகுப்பில்
படிக்கும் பண்ணிரன்டு வயதுச்
சிறுவனுடன் ஓர் ஆசிரியை உல்லாச
வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்’.
மேலை நாடுகளின் தவறான கலாசாரச்
சூழலில் இந்நிகழ்வுகள் அங்கே சகஜம்.
நமது நாட்டலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள்
நடந்துவிட்டதாகத் தினசரி நாளேடுகளில்
ஒரு மூளையில் பெட்டிச் செய்தியாக
வருவதையும் பார்க்கிறோம். உடல் ரீதியாக
மட்டும் சில சிறுவர் – சிறுமியர்கள்,
தாய் – தந்தையர்களாகி விடுகிறார்கள்.
“பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால்
சுட்டு சில மாணவர்களுடன் ஆசிரியரும்
பலி. இரு மாணவர்களுக்கிடையே இருந்த
சிறு பூசலால் ஒரு மாணவன் சக மாணவனைக்
கத்தியால் குத்தியதால் அந்த
இடத்திலேயே பலியானான். மதிப்பெண்
குறைவாகப் போட்ட ஆசிரியரைத்
தாக்கிவிட்டு மாணவன் தலைமறைவு’.
இச்செய்திகள் நமக்குச் சில உண்மைகளைச்
சூசகமாகச் சொல்கின்றன.
இத்தவறுகளுக்கு மாணவர்கள்
மட்டுமே காரணமா என்ன? பிழையான
வளர்ப்பு முறைகளைக் கையாண்ட பெற்றோர்,
கல்வியுடன் நற்பண்புகளையும் கற்பிக்காத
கல்விக் கூடம், குற்றச் செயல்களால் மலிந்த
சமுதாயம் இவர்களெல்லாம்
சேர்ந்து பிஞ்சு உள்ளங்களைக்
கெடுப்பதுடன் ஊடகங்கள் இந்த நச்சுப்
பண்புகளின் வளர்ச்சிக்கு உரமாகின்றன.
இல்லங்களின் நடுக்கூடத்தில்
அமர்ந்து கொண்டு வெளி உலகின்
குப்பைகளையெல்லாம் வீட்டுக்குள் கொட்டும்
தொலைக்காட்சியில் தொலைந்து போகும்
சிறார்களே மிகுதி.
நற்பண்புகளைக் தாம் பெற்றுக் கொள்வதுடன்
குழந்தைகளுக்கும் ஊட்டும் பெற்றோர் மிக
மிகக் குறைவு. மாலை 5
மணியிலிருந்து இரவு படுக்கைக்குச்
செல்லும் வரை தொலைக்காட்சிகளின் முன்
கற்சிலைகளாக முடங்கும் பெற்றோர், தம்
சிறார்கள் அருகிலிருக்கவே ஆபாசத்
திரைப்படக் காட்சிகளில்
மெய்ம்மறந்து லயித்துக் கிடப்போர்,
குழந்தைகளின்
நெருக்கடிகளிலிருந்து விலகி நிற்க
அக்குழந்தைகளைத் தொலைக்காட்சிகளின் முன்
சிறை வைத்துக் கணினிப் பெட்டிக்குள்
மூழ்குவோர் என எண்பது சதவீத வீடுகளில்
நகரங்களில் இத்தகைய அவலங்களைக் காணலாம்.
இச்சீரழிவுக்கெல்லாம் முழுக்க முழுக்கக்
காரணமாக இருப்பவை ஊடகங்கள்
மட்டுமே என்று சொல்வதில் அர்த்தமில்லை.
உண்ணும் உணவு முறைகளும் ஒருவகையில்
காரணமாக உள்ளன. மது அருந்திய
நிலையில் ஆபாசத் திரைப்படங்களில்
மூழ்கும் கல்லூரி மாணவ – மாணவியர்,
உணர்வு மேலீட்டால் பாலியல்
தவறுகளுக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்.
கொழுப்பும் கார வகை உணவுகளும் உடல்
ரீதியாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும்
காரணிகள் தாம். அன்றாடம் மாமிச
உணவுக்குப் பழக்கப்பட்ட குழந்தைகள்
சிறு வயதிலேயே பாலியல் ரீதியான
பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க
முடியாதது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்
பதினான்கு அல்லது பதினைந்து வயதை எட்டு
ம் பருவத்திலேயே இளம் பெண்கள்
பூப்பெய்தும் (வயதுக்கு வரும்) நிலையில்
இருந்தார்கள். அதற்குப்
பிறகு ஏழெட்டு ஆண்டுகள்
கழித்தே திருமண ஏற்பாடுகள் செய்த காலம்
அது.
இளைஞர்களும் பாலியல் உணர்வு பற்றிய
சிந்தனையின்றியே மனக்கட்டுப்பாடுகளுடன்
வாழ்ந்தனர். நாகரிக வளர்ச்சி, பழக்க
வழக்கங்கள், உணவு முறைகள் முதலான
வாழ்வியல் மாற்றங்களால் பெண்களின் பருவ
வயது படிப்படியாகக்
குறைந்து தற்போது பத்து வயதிலேயே பூப்ப
ெய்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
பிள்ளைகளைப் பெறுவதால்
மட்டுமே பெற்றோர்களாகும்
முதிர்ச்சியில்லாத ஆண் – பெண்களிடம்
வளரும் குழந்தைகள் எப்படி நல்ல
ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவர்.
அப்பிள்ளைகளிடம்
நற்பண்புகளை எதிர்பார்ப்பது நமது தவறல்ல
வா? போதிய அளவில் உடல் வளர்ச்சி, மன
வளர்ச்சி அமைவது ஒருக்காலும்
சாத்தியமாகாது. ஒரு தேசத்தின் பலம்
ஆக்கபூர்வமான இளைஞர்களும் மகளிரும்
தாம். ஆற்றல் மிக்க
சந்ததியினரை இழந்து கொண்டிருப்பது நாட்
டின் சாபமல்லவா?
நன்மக்களைப் பெற்றுள்ள தாய் –
தந்தையரே பெற்றோர். பெற்றோருக்கான
எல்லாத் தகுதிகளை பெறுவதுடன்
நன்மக்களை நம் தேசத்துக்குத் தரும்
பெற்றோராக ஆக முயல்வோம். பெற்றோர் என்ற
சொல்லுக்கான முழுமையான தகுதிகளையும்
பிள்ளைகளைப் பெறும் தாய் – தந்தையர்
பெற்று வளர்க்கட்டும். தம்மினும் தம் மக்கள்
அறிவுடையவர்களாகவும்
நற்பண்பினராகவும்
வாழ்வது பெற்றோருக்குச் சிறப்பும்
பெருமையும் அல்லவா?

Saturday, 14 February 2015

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்!

இவ்வுலகில் பிறப்பு என்ற
ஒன்று இருந்தால், இறப்பு என்ற
ஒன்று நிச்சயம் இருக்கும்.
பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப்
கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம்
இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற
எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம்
ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க
நேரிடும். அதை யாராலும் தடுக்க
முடியாது.
இத்தகைய இறப்பை சந்திக்கும்
முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.
மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப்
போகிறான் என்பதை வெளிப்படுத்தும்
அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவன் இறக்கப் போகிறான்
என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :
அறிகுறி 1 :
எப்போது ஒருவரது சருமத்தின்
நிறமானது வெளிர்
மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ
அல்லது லேசான சிவப்பாக மாற
ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத
காலத்தில் உயிரை விடப் போகிறார்
என்று அர்த்தமாம்.
அறிகுறி 2 :
எப்போது ஒருவனால்
அவனது பிம்பத்தை எதிரொலியை
தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ
தெளிவாக காண முடியவில்லையோ,
அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப்
போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 3 :
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும்
அனைத்தும் கருப்பாக தெரிய
ஆரம்பிக்கிறதோ, அவர்களும்
இறப்பை சந்திக்கப் போகிறார்
என்று அர்த்தம்.
அறிகுறி 4 :
ஒருவரது இடது கை மட்டும்
ஒரு வாரத்திற்கு மேல்
துடிக்கவோ அல்லது நடுங்க
ஆரம்பிக்கிறதோ, அவர்கள்
ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன்
இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
அறிகுறி 5 :
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள்
இறுக்கமடைந்து கல்
போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும்
கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார்
என்று அர்த்தமாம்.
அறிகுறி 6 :
நிலா, சூரியன் அல்லது நெருப்பின்
ஒளியை சரியாக காணமுடியவில்லையோ,
அத்தகையவர்களும் விரைவில்
மரணத்தை சந்திக்கப் போகிறார்
என்று அர்த்தம்.
அறிகுறி 7 :
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து,
ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ,
அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப்
போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 8 :
ஒருவரால் வானத்தில் உள்ள
நட்சத்திரங்களை காண முடியவில்லையோ,
அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார்
என்று அர்த்தம்.
அறிகுறி 9 :
சூரியன், நிலா மற்றும்
வானத்தை பார்க்கும் போது,
அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால்,
அத்தகையவர்களும் விரைவில்
மரணத்தை சந்திக்கப் போகிறார்
என்று அர்த்தமாம்.
அறிகுறி 10 :
ஒருவரின் கனவில் ஆந்தையோ,
வெற்றிடமோ அல்லது கிராமம்
அழிவது போன்றோ வந்தால், அவரும்
மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்
என்று அர்த்தமாகும்.