Thursday, 29 January 2015

டீசல் எரிபொருள் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

டீசல் எரிபொருள் பற்றிய சிறப்புத்
தகவல்கள்!

உலக நாடுகளின்
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்
சக்தியாக கச்சா எண்ணெய்
இருப்பது தெரிந்ததே. குறிப்பாக,
கச்சா எண்ணெயிலிருந்து
பிரித்தெடுக்கப்படும் பல
எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல்
ஆகியவை முக்கியமானதாகவும்,
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார
வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தநிலையில், பெட்ரோலைவிட டீசலின்
விலை குறைவு என்பதுடன்
பல்வேறு கூடுதல் நன்மைகளை வழங்குவதால்,
அதிக அளவில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல்
எரிபொருள் பிறந்த வரலாறு, பெயர்
காரணம், நன்மைகள், பெட்ரோலைவிட எந்த
விதத்தில் சிறந்தது, டீசல்
பற்றி அடிக்கடி மனதில் எழும் கேள்விகள்
உள்ளிட்டவற்றை அடக்கிய சிறப்புத்
தொகுப்பாக இந்த செய்தி அமைகிறது.

கச்சா எண்ணெயை கண்டுபிடித்தவர்கள்
உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும்
சக்தியான
கச்சா எண்ணெயை முதல்முதலாக
பூமியிலிருப்பதை கண்டறிந்த
பெருமை ஈராக்கியர்களுக்கே சாரும்.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,
கட்டிடங்கள் அமைக்க மிக ஆழமான
அஸ்திவாரம் அமைத்தபோது,
கச்சா எண்ணெய் இருப்பதை ஈராக்கியர்கள்
கண்டறிந்தனர். ஆனால்,
அதே கச்சா எண்ணெயை கண்டுபிடித்து
பயன்பாட்டுக்கு கொண்டு அந்நாட்டு
மக்களின் வாழ்வு நிலை இன்று பெரும்
சோகம்.

கச்சா எண்ணெய் மோகம்
கச்சா எண்ணெய் எரியும்
தன்மை இருப்பதை கண்ட பின்னர் உலகின்
பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில்
கச்சா எண்ணெய் வளம் இருப்பதற்கானன
சோதனைகளை துவங்கின. சீனா, ஐரோப்பா,
ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதில்
ஆர்வம் காட்டின.

டீசல் உற்பத்தி
போலந்து நாட்டில்தான் முதல்முறையாக
கச்சா எண்ணெயிலிருந்து பல வித
எரிபொருள்களை பிரித்தெடுக்கும்
சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது.
1856ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த
ஆலையிலிருந்து பெட்ரோல், டீசல்,
மண்ணெய் உள்ளிட்டவை தனித்தனியாக
பிரித்தெடுக்கப்பட்டன. முதலில்
டீசலை ஆயில் என்றுதான் அழைத்தனர்.
அப்புறம் எப்படி, டீசல் என்று பெயர்
வந்தது.

பெயர் காரணம்
1892ல் முதல்முறையாக டீசலில்
இயங்கும் எஞ்சினை ஜெர்மனியை சேர்ந்த
ரூடால்ஃப் டீசல் என்ற
விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
அவரது கண்டுபிடிப்பை போற்றும்
வகையிலேயே, டீசல் என்று இந்த
எரிபொருளுக்கு பெயரிடப்பட்டது.
மேலும், டீசல் ஆயில் என்றும்
அழைக்கப்படுகிறது.

பிரித்தெடுப்பு முறை
கச்சா எண்ணெயை குறிப்பிட்ட வெப்ப
நிலைகளில் வேதிம
கட்டமைப்பு மாறிவிடாத வகையில்
கொதியூட்டப்பட்டு பெட்ரோல், டீசல்
உள்ளிட்டவை பிரித்தெடுக்கப்படுகின்றன
. பின்னர் அவற்றின் தரம்
மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு
வருகின்றன. 250 - 350
டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில்
கச்சா எண்ணெயிலிருந்து டீசல்
வடிகட்டி பிரிக்கப்படுகிறது.

ஆயில் என அழைப்பதேன்
பெட்ரோல், மண்ணெண்யெயைவிட டீசலில்
எண்ணெய் பசை அதிகம் கொண்டது. இதன்
காரணமாக பல நாடுகளில் டீசல் ஆயில்
என்றே அழைக்கப்படுகிறது. மேலும்,
டீசல் எஞ்சின்களை ஆயில் பர்னர் என்றும்
அழைப்பதை காணமுடியும்.

சாதகங்கள்
பெட்ரோல், மண்ணெய் போன்றவற்றைவிட
அடர்த்தி அதிகம் என்பதோடு, எண்ணெய்
பசை அதிகம் கொண்ட எரிபொருள்
என்பதால், டீசலின் ஆவியாகும்
தன்மை குறைவானது. இதனால்,
போக்குவரத்தின்போதும்,
பயன்பாட்டின்போது இழப்பு ஏற்படுவது
குறைவாக இருக்கும். மிக
முக்கியமாக வெடிப்புத்
தன்மை குறைவு.

அடர்த்தி அதிகம்
பெட்ரோலைவிட டீசல் 18சதவீதம் கூடுதல்
அடர்த்தி கொண்டது. இதற்கு காரணம்
ஹைட்ரோகார்பனின் கட்டமைப்பு. டீசலில்
இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பனின்
நெருக்கமான கட்டமைப்பு காரணமாக
அதிக அடர்த்திகொண்டுள்ளது.
சிலவேளை, வெப்பநிலை வெகுவாக
குறையும்போது டீசலில் இருக்கும்
ஹைட்ரோகார்பன்கள்
உறைந்து பசைத்தன்மை அதிகமாகி திட
நிலையை அடையும். ஆனால், பெட்ரோலில்
ஹைட்ரோகார்பன் கட்டமைப்பு நெருக்கம்
குறைவு என்பதால், திரவ
நிலையிலிருந்து திட
நிலைக்கு செல்லாது. இதேபோன்று,
பெட்ரோலைவிட டீசலின் எடையும்
அதிகம்.

அதிக மைலேஜ்
பெட்ரோலைவிட அதிக ஆற்றல்
செறிந்திருப்பதால், டீசல் வாகனங்கள்
அதிக மைலேஜை டீசல் வாகனங்கள்
தருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல்
எஞ்சின் தொழில்நுட்பங்கள்
வெவ்வேறானவை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
அதை வேறோரு செய்தியில் காணலாம்.

டீசல் வகைகள்
டீசல் எரிபொருள் இரண்டுவிதமான
வகைகளில் வருகிறது. டீசல் 1- D
மற்றும் 2 D
என்று இவை அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான வாகன தயாரிப்பாளர்கள்
2 D வகை டீசல்
எரிபொருளுக்கு தக்கவாறு
எஞ்சின்களை தயாரிக்கின்றனர். 10
டிகிரி வெப்பநிலைக்கு குறைவான
பகுதிகளில் வாகனங்களை வாங்குவோர்,
வாகன தயாரிப்பாளரின்
பரிந்துரையின்படி டீசல்
வகையை பயன்படுத்துவது அவசியம்.

பயோ டீசல்
உயிரிகள் மற்றும் தாவர
மூலங்களிலிருந்து பெறப்படும்
பயோ டீசல், சாதாரண டீசலைவிட
குறைவான நச்சுத்தன்மை கொண்ட
புகையை வெளியிடுவதால்,
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக
கருதப்படுகிறது. இவை குறைவான
சதவீதத்தில் டீசலுடன்
கலந்து பயன்படுத்தப்படுவதால்,
எஞ்சினில் பெரிய மாற்றங்களை செய்ய
தேவையில்லை. மேலும், டீசலுடன்
கலக்காமல் தனியாகவும்
எரிபொருளாகா பயன்படுத்த
முடியும். இதனால், தற்போது பயோ டீசல்
பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள்
தீவிரமடைந்திருக்கின்றன. ஆனால்,
இவற்றின் தயாரிப்பு செலவீனம் அதிகம்
என்பதே முட்டுக்கட்டையான விஷயம்.

பாதகங்கள்
டீசல் அடர்த்தி அதிகம் என்பதால்,
எரிக்கப்படும்போது எஞ்சினில் அதிக
புகை படியும் என்பதால் கூடுதல்
பராமரிப்பு தேவைப்படும்.

பயன்பாடு
கனரக வாகனங்கள், கப்பல் போக்குவரத்து,
தொழிற்சாலை எந்திரங்கள், மின்
உற்பத்தி ஜெனரேட்டர்கள், வர்த்தக
மற்றும் தனிநபர்
பயன்பாட்டு வாகனங்கள்,
கட்டமைப்பு துறைகள் என டீசல்
எரிபொருளின் பயன்பாடு மிக
அதிகம்.

இந்தியாவில் டீசல் தரம்
இந்தியாவில்
மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களை
பொறுத்து, ஒவ்வொரு பகுதியிலும்
டீசலின் தரம் மாறுபடுகிறது.
அதனை ஸ்லைடரில் காணலாம்.

அருமருந்து
இந்தியாவில் பெட்ரோலைவிட டீசல்
விலை குறைவாக இருப்பதால், டீசல்
வாகனங்களுக்கு அதிக
மவுசு இருக்கின்றது. மேலும், அதிக
மைலேஜ் என்பதும் இந்திய
வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான
புதைபடிவ எரிபொருளாக டீசல்
இருந்து வருகிறது. இந்த நிலையில்,
புதைபடிவ
எரிபொருளுக்கு மாற்றான புதிய
எரிபொருள் வகைகளை கண்டறியும்
முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
அதுவரை டீசல்தான் உலகின்
இயக்கத்திற்கு உயிர் கொடுக்கும்
அருமருந்தாக இருக்கும்.

Wednesday, 28 January 2015

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்மமுடிச்சுகள்!!!

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம
முடிச்சுகள்!!!
இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த
பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும்
அப்பாற்ப்பட்டு இந்தியாவின்
மூலை முடுக்குகளில் பல விஷயங்கள்
நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம்
அது வெறும் ஏமாற்று வேலை தான்
என்றாலும் கூட சில நேரங்களில்
அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக
இருக்கும். இதில் பல
மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும்
தீர்க்கப்படாமலேயே உள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்
இந்தியாவின் இரண்டாம் பிரதம
மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966
ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில்
டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட சில மணிநேரங்களில்
மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அரை நூற்றாண்டை கடந்த போதிலும்,
இன்று வரை அவர் மரணத்தில் மர்மம்
நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009
ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற
பத்திரிகையாளர், சாஸ்திரியின்
மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
பிரதம மந்திரியிடம்
கோரிக்கை விடுத்தார். ஆனால்
அப்படி தெரிவித்தால்
அது இந்தியாவின்
வெளிநாட்டு உறவுகளில்
பாதிப்பை உண்டாகும் என அவரின்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அவரின் மரணத்தின் போது,
அவருக்கு விஷம்
கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின்
பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர்
ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்
விடுதலை செய்யப்பட்டார்.
அவருக்கு மாரடைப்பு என
சொல்லப்பட்டாலும், அவர் விஷம்
கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின்
குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்
மரணம்
இந்திய சுதந்திரத்துகாக
வெள்ளையர்களை எதிர்த்து போராடிய
நேதாஜியைப்
பற்றி அறியாதவரே இருக்க
முடியாது. ஃபோர்மோசா (தைவான்)
என்ற இடத்தில் அவர் சென்ற ஜப்பானிய
விமானம் வெடித்ததால், ஆகஸ்ட் 18, 1945
ஆம் ஆண்டில் அவர் தீயில்
கருகி இறந்து போனார் என தகவல்கள்
கூறுகிறது. ஆனால் அவரின்
ஆதரவாளர்களோ, குறிப்பாக
வங்காளத்தில், அவர் இறந்து விட்டார்
என்பதை அவர்கள் நம்பவில்லை. அவரின்
மரணத்தை கேள்விப்பட்ட
காந்திஜி இப்படி கூறியுள்ளார்
"சுபாஷ் இறக்கவில்லை. சுபாஷால்
இப்படி இறக்க வாய்ப்பில்லை"
ரூப்குந்த் ஏரி - உத்தர்கண்ட்
உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என
அழைக்கப்படும் ரூப்குந்த்
உறைபனி ஏரி உத்தர்கண்ட் மாநிலத்தில்
உள்ளது. யாருமே வசிக்காத இந்த
பகுதி, இமயமலையின் மீது 5,029 மீட்டர்
உயரத்தில் அமைந்துள்ளது. 2 மீட்டர்
ஆழத்தை கொண்டுள்ள இந்த ஏரியின்
முனையில் நூற்றுக்கணக்கான மனித
எலும்புக்கூடுகளை காணலாம். ஆன்மீக
ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும்
இதனைப் பற்றி பல கருத்துக்கள்
கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-
ஆம்
நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை
இங்கு கிடக்கிறது. இந்த
எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட்
பல்கலைகழகம் ஆராய்ந்த
போது அது 850 ஆம்
வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என
தெரிவித்துள்ளது. ஆனால் எதுவும்
உறுதியாக தெரியவில்லை.
ஓம் பன்னா
ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள
பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார்
பைக் கோவிலாகும். பாதுகாப்பான
பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல்
என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக
அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம்
ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார்
பைக்கில் சென்று கொண்டிருந்த
போது ஒரு மரத்தில்
மோதி அங்கேயே இறந்துள்ளார்.
மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள்
அருகிலுள்ள காவல் நிலையத்தில்
நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால்
மறுநாள் அந்த பைக் விபத்து நடந்த
பகுதியில் இருந்துள்ளது.
அதனை மீண்டும் காவல்
நிலையத்திற்கு கொண்டு வந்த
காவலாளிகள் பைக்கில் இருந்த
பெட்ரோலை எடுத்து விட்டு,
அதனை சங்கிலியால்
கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால்
மீண்டும் அது மாயமாகி, விபத்து நடந்த
பகுதிக்கு சென்றுள்ளது. இது பல
தடவை நடந்திருக்கிறது. அதிசயமாக
பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும்
அந்த பைக்கை வணங்க தொடங்கினர்.
அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள்
அந்த பைக்கையும் ஓம் பன்னாவையும்
வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில
ஓட்டுனர்கள் மதுபானத்தையும்
அதற்கு படைக்கின்றனர்.
ஸ்டோன்மேன்
யாரென்று கண்டுபிடிக்க முடியாத
ஒரு தொடர்ச்சி கொலைகாரனுக்கு அள
ிக்கப்பட பெயரே ஸ்டோன்மேன். இவன்
கொல்கத்தாவில் 1989 ஆம் வருடம்
வீடு இல்லாத 13
நபர்களை கொன்றுள்ளான். 6 மாதத்தில்
13 பேர்களை கொன்றதாக கூறப்படும்
அவன், இதை தனியாக
செய்தானா அல்லது கூட்டாக
செய்தானா என்பது தெரியவில்லை.
இன்று வரை இந்த குற்றத்திற்காக
யாருமே கைது செய்யப்படவில்லை.
இதனை யார் செய்தது என
கொல்கத்தா காவலர்களால்
கடைசி வரியா கண்டுபிடிக்க
முடியவில்லை. இதே போலான
தொடர்ச்சி கொலைகள் மும்பையிலும்
குவாஹத்தியிலும் நடந்துள்ளது.
சாந்தி தேவி
1930-களில், டெல்லியை சேர்ந்த 4
வயதான சாந்தி தேவி என்ற குழந்தை,
தான் இதற்கு முன் மதுராவில்
வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம்
கூறியுள்ளது. தான் 3
குழந்தைகளுக்கு தாய் என்பதையும்
ஒரு பிரசவத்தின்
போது இறந்து விட்டதாகவும்
கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர்
லுட்கி எனவும் கூறியுள்ளது.
இதனை கேட்ட அவளின் பெற்றோர்கள்
விசாரணையில் இறங்கிய போது,
மதுராவில் லுட்கி என்ற பெண்
சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது.
சாந்தி தேவியை அந்த
கிராமத்திற்கு அழைத்து சென்ற
போது, அவள் உள்ளூர் மொழியில்
சரளமாக பேச தொடங்கினால். தன் பூர்வ
ஜென்ம கணவன் மற்றும்
குழந்தைகளை அடையாளம் கண்டால்.
இதனை கேள்விப்பட்ட மகாத்மா காந்தி,
இதனை விசாரிக்கும்
படி ஒரு குழு ஒன்றை நியமித்தார்.
அதன் படி 1936 ஆம்
ஆண்டு ஒரு அறிக்கையும்
சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண்
லுட்கியின் வாழ்க்கையில் நடந்த
சம்பவங்களில் இருந்து 24 சரியான
தகவல்களை அளித்துள்ளார்.
ப்ரஹ்லாத் ஜானி
மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத்
ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர்
மற்றும் உணவருந்தாமல் வாழும்
ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள்
இருப்பதாக அவர் கூறுகிறார்.
அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வ
ுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த
அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக
15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர
வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
இந்த 15 நாட்களுக்கு அவரின்
ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள்
கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர்
தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த
ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள்
முடியும் வரை அவருடைய உடலில்
பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால்
ஏற்படும் பாதிப்புகள் எதுவும்
ஏற்படவில்லை.
யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல்
இப்படி மாறியிருக்கலாம் என
ஒரு காரணம் கூறப்படுகிறது.
இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த
பிறகு அவர் 40 வயது மனிதனை விட
ஆரோக்கியமாக இருந்ததாக
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tuesday, 20 January 2015

கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா?

இந்த உலகம் எப்படிப்பட்டவை என்பதையும்,
அதில் சிறப்பாக எப்படி வாழ முடியும்
என்பதையும் கண்டுபிடிக்க உதவும்
ஒரே கருவி உங்களது மூளை மட்டுமே.
அதனால் அதனை ஆரோக்கியமாக
வைத்திருக்க வேண்டும். உங்கள் அறிவாற்றல்
கூர்மையாக இருந்தால், நீங்கள் கூடுதலாக
சாதிக்கலாம். ஒரு வேளை, சமீப காலமாக
நீங்கள் சில
விஷயங்களை மறந்து போகிறீர்கள்
(மோசமான நினைவாற்றல்) என்றால்
அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்
என்றால், உங்கள் மூளையின்
நலனை எண்ணி நீங்கள் வருத்தப்பட வேண்டிய
நேரம் இது.

உங்கள் புத்தி கூர்மை வளர்வதற்கு உங்கள்
மூளைக்கு சரியான காரணத்தை கொடுக்க
வேண்டும். கண்டிப்பாக அது வளர
ஆரம்பிக்கும். மூளைக்கு சில கடினமான
வேலைகளை நீங்கள் கொடுக்க வேண்டும்.
அது பதிலுக்கு அந்த
வேலையை உங்களுக்கு முடித்து கொடுக்கு
ம். பயன்படுத்தக்கூடிய உண்மையான
சேவகனே உங்கள் மூளை. அதனை பயன்படுத்த
தவறி விட்டால், அதற்கு நீங்கள்
சேவகனாகி விடுவீர்கள். சரி, மூளையைத்
தீட்டுவதற்கான சில
டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம், வாங்க!
மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய
முக்கிய 8 அறிகுறிகள்!!!

புது மனிதர்களை சந்தியுங்கள்
புதிதாக யாரையாவது சந்திக்கும்
போது உள்ளீடுகளை உருவாக்குவதில்,
கோப்புகளை பராமரிப்பதில் மற்றும்
பார்ப்பவரின் விவரத்தை பதிவதில்
உங்கள் மூளை பிஸியாக இருக்கும்.
பல்வேறு பின்னணியிலிருந்து புதிது
புதிதான மனிதர்களை சந்திக்கும்
போது, உங்கள் மூளைக்கு அதிகமாக
வேலை கொடுப்பீர்கள். மூளையின்
வளர்ச்சிக்கு இது நல்லதாகும்.

தியானம் உதவும்
தியானம் செய்வதால் மூளைக்கு சில
பயன்கள் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர். அதனால் உங்கள்
மனது அமைதியாகும். தியானம் மூலம்
புத்துயிர் அளிக்கும் போது, புதிய
ஆற்றல்களை தேர்ந்தெடுக்கும்
நிலையை மூளை அடையும்.

புதிய ஆற்றல்களின் மூலமாக உங்கள்
மூளைக்கு சவாலிடுங்கள்
புதிய ஆற்றல்,
மொழி அல்லது கலையை கற்றுக்
கொள்ளும் போது உங்கள்
மூளைக்கு நீங்கள் சவால் அளிக்கிறீர்கள்.
மூளைக்கு சவால் அளிக்கும் போது,
புதிய நரம்பணுக்களையும்
பாதைகளையும் உருவாக்க
அது வலியுறுத்தப்படும். புதிதாக
கற்பதன் மூலம், மூளையின் அறிவாற்றல்
அளவிற்கு தொடர்ச்சியாக சவால்
விடுவதால் உங்கள் மூளை மிக
கூர்மையாக மாறும்.
புத்தியை கூர்மையாக்கும் டிப்ஸ்களில்
இதுவும் ஒன்றாகும்.

உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன்
இருங்கள்
காதல் இல்லையென்றால் வாழ்க்கை அதன்
அர்த்தத்தை இழந்து விடும். உங்கள்
வாழ்க்கையில் அர்த்தமுள்ள உறவுகள்
இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன்
இருந்தால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.
உங்கள்
வாழ்க்கை துணை அல்லது குழந்தைகளுடன்
நீங்கள் செலவழிக்கும் ஒரு நொடியும்
மனதில் பதிந்து கொள்ளும் அழகான
தருணமாகும். ஆரோக்கியமான
உணர்ச்சிகள்
வாழ்க்கைக்கு முக்கியமாகும்.
மூளையை கூர்மையாக்கும் டிப்ஸ்களில்
இதுவும் ஒன்றாகும்.

உடற்பயிற்சிகள்
உங்கள் உடல் சுறுசுறுப்புடன் செயல்பட
வேண்டும் என்றால் உங்கள் மூளையும்
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
எப்போதும் உடற்பயிற்சிகளில் ஈடுபட
வேண்டியது அவசியமாகும். சீரான
முறையில் உடற்பயிற்சியில்
ஈடுபடுங்கள். மூளையை கூர்மையாக்கும்
டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும்.

மூளைக்கு தீனி போடா மறந்து விடாதீர்
கள்
மூளைக்கு நல்லது என கருதப்படும்
உணவுகளை அதிகமாக உண்ணுங்கள்.
கூர்மையான
மூளையை பெறுவதற்கு ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.
மூளைக்கு தேவையான ஆரோக்கியமான
உணவுகளை சீரான முறையில் உண்ண
மறந்து விடாதீர்கள். ஆரோக்கியமான
வாழ்க்கைக்கு கூர்மையான
மூளைக்கு தேவையான
உணவுகளை கண்டிப்பாக உண்ண வேண்டும்.

போதிய தூக்கம்
தூக்கத்தின் போது உங்கள்
மூளை பிசியாகவே இருக்கும். ஆனால்
அதன் பாகங்களோ தூக்கத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும் ஓய்வு எடுக்க
தொடங்கும். முறையற்ற தூக்க
அமைப்பினால் மூளையின் ஒட்டுமொத்த
செயல்பாடும் பாதிக்கப்படும்.
கூர்மையான
மூளையை பெறுவதற்கு மேற்கூறிய
டிப்ஸ்களை பின்பற்றவும்.

Friday, 16 January 2015

தலைமுறை இடைவெளி என்றால் என்ன?


பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது,
அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல
என்றாலும், அவர்களின் பசி, தூக்கம்
என்பவற்றைக் கவனித்து விட்டால்
தொந்தரவின்றி விளையாடிக்
கொண்டிருப்பார்கள்.
ஆனால் குழந்தைகள் வளர வளரத்தான்
பிரச்சினை ஆரம்பிக்கிறது. பிள்ளைகள்
தங்கள் பேச்சைக்
கேட்பதில்லை என்று பெற்றோரும், பெற்றோர்
தங்களைப்
புரிந்து கொள்வதில்லை என்று பிள்ளைகளும்
புலம்புகிறார்கள்.
கரு முதல் இறுதி வரை கூடவே இருக்கும்
ஒரே உறவு, இந்தப் பெற்றோர் –
பிள்ளை உறவுதானே? அதை பலப்படுத்தும்
முயற்சி மிகவும் அவசியம் அல்லவா!
* தலைமுறை இடைவெளி என்பது என்ன?
புரிந்துகொள்ளுதலில்
இடைவெளி என்பது பெற்றோர் பிள்ளைகள்
இடையே மட்டும்தான் வருகிறதா?
இடைவெளியைக் குறைத்து இந்த உறவுக்குப்
பாலம் அமைப்பது எப்படி?
தலைமுறை இடைவெளி என்பது, கருத்துப்
பரிமாற்றத்திலும்
புரிந்துகொள்ளுதலிலும் இருக்கக் கூடிய
இடைவெளி. அது பொதுவாக,
இளையவர்களுக்கும் பெரியவர்களுக்கும்
இடையே இருப்பதாகக் கருதப்படுகிறது.
எண்ணப்போக்கிலும் இலட்சியங்களை நோக்கிச்
செல்வதிலும் இந்த
இடைவெளி தோன்றுகிறது.
இந்த இடைவெளியை அதிகப்படுத்துவதில்
பெரியவர், சிறியவர் என்ற
இரு பக்கத்தினருக்குமே பங்கிருக்கிறது.
ஆர்வம், சாதிக்கும் வெறி, துணிச்சல்
எல்லாம் இளம் தலைமுறையினருக்கு அதிகம்
என்பதில் சந்தேகம் இல்லை.
அதே நேரத்தில், அனுபவமும் ஞானமும்
பெரியவர்களுக்கு அதிகம் என்பதையும்
மறுக்க முடியாது. ஆக, வெவ்வேறு பலங்கள்
கொண்ட
இரு சாராருமே இணைந்து செயற்பட்டால்
அதிக நன்மை உண்டு.
இருவருமே ஆரோக்கியமான கருத்துப்
பரிமாற்றத்தில் ஈடுபட்டு,
நல்லவற்றை மற்றவர்களிடமிருந்து
கிரகித்துக் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்
கொள்ளவேண்டும். விரிசலுக்குக் காரணம்
சொல்லாமல், பாலம் அமைக்க வழிகள்
கண்டுபிடிப்பது தான் சரியான வழி.

Sunday, 4 January 2015

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15 விஷயங்கள்!!!

உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 15
விஷயங்கள்!!!

கொஞ்சமாக யோசித்து, வேகமாக
வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய
காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும்
பொருட்களின் விவரத்தைப் பற்றி சரியாக
தெரிந்து கொள்வதில்லை;
அது மருந்துகளாகட்டும்,
உணவு பொருட்களாகட்டும்
அல்லது கருத்துக்களாகட்டும்,
அதை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள
நமக்கு நேரமும் இருப்பதில்லை,
அக்கறையும் இருப்பதில்லை. அப்படி நாம்
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சில
விஷயங்கள்
நமக்கு தெரியாமலேயே நமக்கு பேராபத்து
க்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சில விஷயங்கள் மிகவும்
ஆபத்தானதாய் இருப்பதால், அதனால்
நமக்கு ஏற்படும் தாக்கங்களின்
அளவை விவரிக்க முடியாத அளவில்
உள்ளது. இதில் பெரிய சோகம்
என்னவென்றால் இதைப்
பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை.
அதிகப்படியான கதிர்வீச்சு,
நுண்ணலை போன்ற பல தீமையான
விஷயங்களை நாம் அன்றாடம் பயன்படுத்தும்
பொருட்கள் கொண்டுள்ளது. இவைகள்
நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்
கொண்டிருக்கிறது.

உப்பு
உப்பு அல்லது சோடியம், இதய நோய்கள்
மற்றும் வாதம் ஏற்படும்
இடர்பாட்டை அதிகரிக்கும்
என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றே.
உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட
இந்தியாவில் சராசாரிக்கும்
அதிகமான அளவில்
உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்படி நாம் கூடுதலாக பயன்படுத்தும்
உப்பினால், அந்த உணவே நமக்கு கொஞ்சம்
கொஞ்சமாக விஷமாக
மாறி வருகிறது.

கைப்பேசிகள்
கைப்பேசியின்
பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால
கட்டத்தில், ரேடியோ அதிர்வெண்களில்
கதிரியக்க மாசுக்கள் உள்ளதாக
ஆய்வுகள் கூறியுள்ளன. இது சில
வகையான புற்றுநோய்களை உண்டாக்கும்.
அதனால் கைப்பேசிகளை எப்போதும்
பேண்ட் பாக்கெட்டில்
வைப்பதை தவிர்க்கவும். வேண்டுமானால்
கைப்பேசிக்கு கதிர்வீச்சு தடுப்பை வா
ங்கவும். இருப்பினும் இதன் திறனைப்
பற்றி விவாதங்கள்
நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்
பொறித்த உருளைக்கிழங்கு சிப்ஸ்
குடல், மார்பகம், சிறுநீர்ப்பை மற்றும்
புரோஸ்டேட்
புற்றுநோய்களை உண்டாக்கலாம்.
இதுப்போக சருமத்தில்
பாதிப்பு மற்றும் தமனிகளில்
அடைப்புகளும் ஏற்படும்.

வெள்ளை பிரட்
பாஸ்தாவுடன் சேர்த்த வெள்ளை பிரட்
மற்றும் செறிவூட்டப்பட்ட
கோதுமை மாவால் செய்யப்பட்ட எந்த
ஒரு உணவானாலும் சரி, இரத்தக்
கொதிப்பை அவைகள் அதிகரிக்கும்.
காலப்போக்கில் டைப் 2 சர்க்கரை நோய்,
இதய குழலிய நோய்கள் மற்றும்
கீல்வாதம் போன்ற பிரச்சனைகள்
ஏற்படும். நல்லது என நினைக்கும்
விஷயமெல்லாம் கெட்டதாக உள்ளதல்லவா?

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள கசப்புத்
தன்மைக்கு காரணம் அதிலுள்ள
குகுர்பிடசின்ஸ் எனப்படும் நச்சுப்
பொருளாகும். வெள்ளரிக்காயின்
இரு பக்க நுனிகளை வெட்டுவதால்,
வெள்ளரிக்காயின் மற்ற
பகுதி குகுர்பிடசின்ஸால்
விஷமாக்கப்படுவது குறையும்.
அதை அப்படியே சாப்பிடுவதால்
அனைத்து வகையான வயிற்று புழுக்கள்
மற்றும் சுகவீனங்களும் ஏற்படும்.

உட்கார்வது
ஆய்வுகளின் படி, ஒரு நாளில்
தொடர்ச்சியாக 3
மணிநேரத்திற்கு மேல்
அமர்ந்திருந்தால், பெரிய அளவிலான
ஆரோக்கிய இடர்பாடுகள் ஏற்படும்.
உறுப்புகளின் பாதிப்பு, தாமதமாகும்
எதிர்வினைகள், தசை சீரழிவு, ஏன்
மரணம் ஏற்படக்கூடிய அளவில்
பாதிப்புகள் ஏற்படலாம்.

தூக்கம்
அதிகமாக தூங்கினால் உடல்
எடை அதிகரிக்கும். தினமும் இரவில்
7-8 மணிநேரம் தூங்குபவர்களை விட, 9
மணிநேரத்திற்கு மேல்
தூங்குபவர்களுக்கு இதய நோய்கள்
ஏற்படும் இடர்பாடு 41% அதிகமாக
உள்ளது என தூக்கத்தைப் பற்றிய
ஆய்வுகள் கூறியுள்ளது.

சமையலறை மேடை
சமையலறை கிரானைட்
மேடை சராசரி அளவை விட
அதிகளவிலான
ரேடானை வெளியிடுகிறது. ரேடான்
வெளிப்பாடுக்கும் புற்றுநோய்க்கும்
நெருங்கிய தொடர்பு உள்ளது.
பயந்து விடாதீர்கள். இதனால் ஏற்படும்
தாக்கத்தினால் நீங்கள் சாவதற்கு 100
வருடங்கள் ஆகும். அதனால் இது மிகவும்
மெதுவாக கொல்லும் விஷயங்களில்
ஒன்றாகும்.

சோடா பானங்கள்
குளிர் பானத்தில் அனைத்து விதமான
செயற்கை உணவு சாயங்களும்,
பதப்பொருட்களும் (BVO -
ப்ராமினேட்டட் வெஜிடபிள் ஆயில்
போன்றவைகள்) உள்ளது. இது உங்கள் எடை,
பற்கள், சருமம், இரத்தத்தில் உள்ள
சர்க்கரை போன்றவைகளுக்கும் ஆபத்தே.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
உங்கள் மனம் விரும்பும் உணவுகளான
ஸ்பைசி சலாமி துண்டுகள், காக்டைல்
சாசேஜ்கள்,
பன்றி இறைச்சி போன்றவைகள்
அனைத்திலும் பதப்பொருட்கள் மற்றும்
சேர்க்கைப் பொருட்கள் அடங்கியுள்ளது.
இதய நோய், புற்றுநோய்,
குழந்தைகளின் கற்கும் திறனில்
பாதிப்பு என பல பிரச்சனைகள்
ஏற்படுவதற்கு இது காரணமாக உள்ளது.

டூத் பேஸ்ட்
நாம் பயன்படுத்தும் பல டூத்
பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன் எனப்படும்
ரசாயனம் இருப்பது சமீபத்தில் தான்
கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த
ரசாயனத்தைப் பற்றி சரியாக
தெரியவில்லை என்றாலும் கூட
இது நரம்பியல் மற்றும் இதய
பிரச்சனைகள் மற்றும் மார்பக
புற்றுநோயை உண்டாக்கும் என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏர் ஃப்ரெஷ்னர்
ஏர் ஃப்ரெஷ்னர் டப்பாவில் அஸ்பர்டேம்,
நியோடேம் மற்றும் இதர ஆபத்தான
ரசாயனங்கள் உள்ளது. இவைகள் இரத்த
கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய
குழலிய நோய்கள் என பல விதமான
பிரச்சனைகளை ஏற்படுத்தும்

பச்சைப் பால்
பச்சைப் பாலில் போவைன் க்ரோத் ஹார்மோன்
என்ற ரசாயனம் உள்ளது. இது மாடுகளில்
பாலின் வரத்தை அதிகரிக்க உதவும்
ஒரு ரசாயனம். அடிப்படையில்
புற்றுநோய், கீல்வாதம் மற்றும்
தீவிரமான மைக்ரைன்களை ஏற்படுத்தும்
BGH.

நாப்த்தலின் உருண்டைகள்
நாப்த்தலின் உருண்டைகளில் நச்சுமிக்க
ரசாயனங்கள் உள்ளது. குறைந்த அளவில்
இருக்கும் போது, மயக்கம் மற்றும்
குமட்டல்
போன்றவைகளை இது ஏற்படுத்தும்.
இவைகள் உங்கள் இரத்தத்தில்
கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் என
கருதப்படுவதால் சில நாடுகளில்
தடை செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்கள்
இவைகள் சமையலில் வேகமான
தீர்வுகளை அளித்து வருகிறது. ஆனால்
நாம் பார்க்கப்
போவது அதிலிருந்து ஏற்படும்
கதிர்வீச்சு கசிவை பற்றி. இதனால்
பிறப்பு குறைபாடு, புற்றுநோய்
மற்றும் வலுவிழந்த நோய்
எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சனைகள்
ஏற்படும். மைக்ரோவேவ் செய்யப்பட்ட
உணவுகள் உங்கள் இரத்த
கொதிப்பை அதிகரிக்கும்.