Wednesday, 31 December 2014

சிரிக்க மறந்த மனித குலமே!

சிரிக்க மறந்த மனித குலமே!

”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்
விட்டுச் சிரிப்பதுதான்”.இதன் தாக்கம்
தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில்
மருத்துவர்கள்,
பல்வேறு நோயாளிகளுக்குச்
சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்
தினமும் 3 வேளை பாருங்கள்
என்பதை ஒரு பரிந்துரையாகச் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.• சிரிப்பு – நம்
குருதியில் அதிகப்படியான பிராண
வாயு இருப்பதற்கான
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
• சிரிப்பினால் இதயத் தசைகள்
வலுவடைகின்றன.
• ரத்த அழுத்தம் சீராகிறது.
• நுரையீரல் நன்றாக வேலை செய்கின்றது.
• என்சீபேலின்ஸ் என்கிற ஹார்மோனை நம்
உடம்பில் சுரக்கச்
செய்து தசை வலியை நீக்கச் செய்கிறது.
• சிரிப்பதனால் குருதிக் குழாய்
விரிவடைகின்றது.
• குருதி ஓட்டம் அதிகரிக்கின்றது.
• மன இறுக்கம் தளர்கின்றது.
• சிந்தனைக்கும் உணர்ச்சிகளுக்கும்
தலைமைப் பீடமாகச் செயல்படுகின்ற
நமது மூளையின் வலது பக்கப்
பகுதி சிரிப்பினால் நன்றாக
வேலை செய்கின்றது.
• சிரிப்பு, பெப்டிக் அல்சர் போன்ற
இரைப்பைப் புண்கள் வராமல்
தடுக்கின்றது.>>>இவையெல்லாம் நீண்ட கால
ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகள்.
ஆனால் இது அவசர உலகம். காலையில்
எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ,
அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து,
மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும்
வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு கவலை.
கவலையின் அளவு வேண்டுமானால்
ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால்,
எல்லாருமே பிரச்னைகளைப்
பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க
மறந்து நாள்களை நகர்த்திக்
கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.
இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில்
வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது.
ஏழை, பணக்காரன் என்ற
வேறுபாடு கிடையாது.சென்னை போன்ற
நகரங்களில் மின்சார ரயிலில்
தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும்
ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம்
ஒரு வார்த்தைகூட பேசாமல்
சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார்.
தான் தினமும் கடந்து செல்லும் பாதையில்
பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும்.
ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத்
தெரிந்தே இருக்காது.இருபது
ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ
மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம்
தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என
பல்வேறு விளையாட்டுக்களை
விளையாடுவார்கள்.
எப்போது பள்ளி முடியும், விளையாடச்
செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர்.
இன்று அப்படியல்ல.
விடியோ விளையாட்டுகளும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப்
பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்த்து அவர்களாகவே சிரித்துக்
கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப
உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக
உள்ளது.
“மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு’
என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி
விட்டது என நாம்
நினைக்கிறோம்.வேறு சிலருக்கோ, “சே,
என்னடா வாழ்க்கை இது’ என்ற சலிப்பு.
வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம்.
ஆனால், இன்றைய இளைய
தலைமுறையினரே இவ்வாறு கூறுவது
மிகவும் கவலையளிக்கிறது.
பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும்
இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய
பழக்கங்களுக்கு ஆளாகிறான்.
அது அவனது எதிர்காலத்தையே
பாழாக்குகிறது.சிரிப்பை விலை
கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய
சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு
குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத்
துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக
கவலை நம்முன் நிற்கிறது.
கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும்
பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில்
பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம்
பல்வேறு பிரச்னைகளுக்குத்
தீர்வு கிடைக்கிறது.அதுபோல,
தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன்
மூலம் மனசு லேசாகிறது.
யோகா வகுப்புகளில்
இது ஒரு பாடமாகவும் கற்றுத்
தரப்படுகிறது.
கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு
நகரத்திலும்
தற்போது நகைச்சுவை மன்றங்கள்
ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற
உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி,
தங்கள் கவலையை மறந்து,
சிரிப்பு மூட்டும் செய்திகளைக்
கூறி மகிழ்கின்றனர்.சிரிப்பு என்பது
மனித குணநலன்களின் ஒன்று.
சிரிப்பை நிர்ணயிப்பது மூளை.
ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன்
சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக
ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து
400 முறை வரை சிரிக்கிறது. ஆனால்,
சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல்
20 முறைதான் சிரிக்கிறான்.
நமது மனத்துக்குள் எழும்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
சிரிப்பு. மனிதர்கள்
வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்.
ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும்
பொதுவானது.சிரிப்பில் பல வகைகள்
உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச்
சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி.
சிரிப்பு ஒருவரின் மனத்தையும்,
உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப்
புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
“நைட்ரஸ் ஆக்ûஸடு’ என்ற
ஒரு வேதிப்பொருளுக்கு “லாஃபிங்
கேஸ்’ (சிரிப்பு வாயு) என்று பெயர்.
இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில்
பெரிதும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள்
கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர்
அருமருந்தாக
விளங்குகிறது என்று மருத்துவர்கள்
கூறுவதை முன்ன்ரே பார்த்த பின்னரும்
சிருக்க மறக்கலாமா?”ஏழையின்
சிரிப்பில் இறைவனைக் காண்போம்’
என்பது உண்மைதான். ஆனால்,
அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம்
நம்மைக் காண்போமே!

உங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா?

உங்க குழந்தையோட நட்பா இருக்கணுமா?

ஒவ்வொரு மனிதனும்
பெரிதாக நினைக்கும்
தன்னுடைய சொத்தே தன்
குழந்தை தான்.
ஆனால் நம் குழந்தை என்ற உரிமையில்
பெற்றோர்கள் அவர்களை அடிப்பது,
கடிந்துறைப்பது சரியல்ல.
தவறே செய்தாலும் அதை பொறுமையுடன்
கையாள வேண்டும்.
இல்லையேல் குழந்தைகளுக்கு உங்கள்
மீது வெறுப்பு தான் வரும்.
எனவே அவர்களுடன் நீங்கள் நண்பனாக
இருப்பது அவசியமாகும்.
கொஞ்சம் ப்ரீயா விடுங்க
குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது
பெற்றோர்கள் செய்யும் பல தவறுகளில்
முக்கியமான ஒன்றாகும்.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம்
அதிகாரம் செலுத்துவர். ஆனால்
இது குழந்தைகளுக்கு பெற்றோரின்
மீது அன்பை வரவழைக்காது, மாறாக
பயத்தையே தரும்.
எனவே அவர்களுக்கு தரும்
சுதந்திரத்தை தடுக்காமல், சரியான
அளவில் குழந்தைகளுடன் கட்டுப்பாடாக
இருந்தால், உங்கள் குழந்தையிடம் நீங்கள்
நல்ல நண்பனாகவும் இருக்க முடியும்.
குழந்தைகளிடம் கத்தாதீங்க
உங்கள் குழந்தைகள் தவறு செய்தால்
அதை பார்த்து கத்தவோ,
பயமுறுத்துவோ செய்யாதீர்கள்.
அவர்களிடம் அன்புடன்
எடுத்துறைத்து நல்லது எது?
கெட்டது எது?
என்பதை தெரியப்படுத்துங்கள்.
சப்ரைஸ் கொடுங்க
குழந்தையின் இதயத்தில் இடம் பிடிக்க,
சில நேரம் அவர்களை ஈர்ப்பதற்காக, சின்ன
சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுங்கள்.
அவர்கள் எதிர்பாராத நேரத்தில்
அவர்களுக்கு பரிசினை வாங்கி கொடுத்து
அசத்துங்கள்.
ஏனெனில் அப்படிப்பட்ட
தருணத்தை குழந்தைகள் மிகவும்
விரும்புவார்கள், ஆனால்
இதையே வாடிக்கையாக கொள்ள வேண்டாம்.
உறுதுணையாக இருங்கள்
ஒவ்வொரு தருணத்திலும் தான்
பாதுகாப்பாக இருக்கிறோம்
என்று உணர்ச்சி ரீதியாக உங்கள்
குழந்தை உணர வேண்டும்.
அதற்கு, அவர்களுக்காக அவர்களின்
ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள்
எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்ற
உணர்வை அவர்களுக்கு முதலில்
ஏற்படுத்துங்கள்.
இதற்கு உங்கள் குழந்தைகளிடம்
அடிக்கடி பேசுவது அவர்களுக்காக நேரம்
ஒதுக்கினால் மட்டுமே அந்த
எண்ணத்தை அவர்களின் மனதில் விதைக்க
முடியும்.

Thursday, 25 September 2014

மரம் ஏன் பெரிசா இருக்கு? இது குழந்தைகள் உலகம்

குழந்தைகள் வளர
ஆரம்பிக்கும்
போது சில
அறிவுத்தனமாக
கேள்விகளை கேட்பார்கள்.
பெரியவர்கள் கேட்கும் கேள்விளுக்கு கூட
பதில் சொல்லிவிடலாம், ஆனால் குழந்தைகள்
கேட்கும் கேள்வியே சற்று வித்தியாசமாக
இருக்கும்.
அவர்கள் கேட்கும் கேள்விகளால்
நம்மை வாயடைக்க வைத்துவிடுவார்கள்.
அர்த்தம் புரிந்து, உச்சி முகர்ந்து,
முத்தமிட்டு, முடி கோதி,
காதுகளை வருடி, நெஞ்சோடு இறுக்கி,
தோளில் சாய்த்து, செல்லத்தின்
பசி உணர்ந்து பால் ஊட்டுகிறாள் தாய்.
தாயின் வெளிப்பாடுகளில் இருந்து தன்
கேள்விகளுக்கான
பதில்களை குழந்தை சேகரிக்கிறது.
குழந்தை, சுற்றியுள்ளவர்களின்
உதட்டு அசைவுகளைப்
புரிந்து கொண்டு வார்த்தைகளைக் கற்கத்
தொடங்குகிறது. கேட்பதை மழலையில்
திரும்பச் சொல்கிறது.
வார்த்தைகளால்
வாக்கியங்களை அமைக்கிறது. பிறந்ததும்
முதல் கண் அசைவில் இருந்தே குழந்தையின்
கேள்விகள் தொடங்கி விடுகின்றன.
கியூரியாசிட்டி எனப்படும் தூண்டுதல்
மற்றும் தேடல் இருக்கும் போது குழந்தைகள்
கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை.
பதிலைப் பற்றிக் கவலைப்படாமல்
எழுகின்றன அவர்களின் கேள்விகள். சரியான
பதில் கிடைக்கும் போது புரிதலுடன்
அவர்களின் தேடலுக்கான எல்லைகளும்
விரிவடைகின்றன.
சில பெற்றோர் குழந்தைகளின்
கேள்விக்கு பதில் அளிக்காமல்
தவிர்ப்பார்கள்...
‘வயதுக்கு மீறி கேள்வி கேட்கிறாய்’ என
அடக்க முற்படுவார்கள். அதனால்
குழந்தைகளின் ஆர்வம் தடுக்கப்படுகிறது.
கேள்வி கேட்பதை நிறுத்தும்
போது தேடலும் புரிதலும்
நின்று போகிறது. இது குழந்தைகளுக்குள்
இயல்பாக வளரும் மற்ற திறன்களையும்
மந்தமாக்கும்.
குழந்தைகளிடம் இரண்டு வகையான
கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஒரு விஷயத்தைச் சொல்லி, ‘இதைப் பற்றி நீ
என்ன நினைக்கிறாய்?’
என்று கேட்பது ‘ஓப்பன் எண்டட்’.
இது போன்ற கேள்விகளுக்குக் குழந்தைகள்
மனம் திறந்து தயக்கமில்லாமல்
சுதந்திரமாக பதில் அளிக்கலாம்.
மழலை ததும்பும் வயதில்
‘உனக்கு அம்மா பிடிக்குமா,
அப்பா பிடிக்குமா’ என்று பலர்
கேட்பதுண்டு. இது குழந்தைகளின்
உளவியலை தகர்க்கும் கேள்வி.
அம்மா, அப்பா இருவரிடமும்
ஒரே மாதிரியான
அன்பை வெளிப்படுத்தவே குழந்தை
விரும்புகிறது. இப்படிக் கேட்கும்
போது குழந்தை சங்கடத்தை எதிர்கொள்கிறது
.
இது போன்ற கேள்விகள் ‘க்ளோஸ் எண்டட்’
எனப்படுகின்றன. இவற்றைத்
தவிர்ப்பது நல்லது.
கேட்கும் கேள்விகளின் அடிப்படையில்
குழந்தைகளின் மனநிலையைப்
புரிந்து கொள்ள முடியும். ஆர்வத்தின்
அடிப்படையில் எழுந்தவையா, சிக்கலான
கேள்விகளா, எந்த விஷயத்தில் அதிகம்
கவனம் செலுத்துகின்றனர்
போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
பிரச்னைக்குரிய கேள்விகளாக இருந்தால்,
அவர்கள் எப்படிப்பட்ட மனக்குழப்பத்தில்
இருக்கிறார்கள் என்பதையும்
சிந்தனை ஓட்டத்தையும்
தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின் கேள்வி எப்படிப்பட்டதாக
இருந்தாலும் பொறுப்பாக பதில் சொல்ல
வேண்டியது பெற்றோர் மற்றும்
சுற்றியிருப்பவர்களின் கடமை.
வீடு, பள்ளி, வெளியிடம் என
எல்லா இடங்களிலும் குழந்தைக்கு பதில்
கிடைக்க வேண்டும், பெற்றோர் கேள்வியைத்
தெளிவாகப் புரிந்து கொண்டு பதில்
தருவது நல்லது.

Sunday, 21 September 2014

கிருமிகளால் விளையும் நன்மைகள்!

கிருமிகளால் விளையும் நன்மைகள்!

கிருமிகளில் நோயுண்டாக்கும்
தீயவை மட்டுமல்ல; நமக்குப் பல
விதங்களிலும் உதவுகிற நல்ல
கிருமிகளும் உண்டு. அவை இட்லி மாவைப்
புளிக்க வைத்து மென்மையான
இட்லி தயாரிக்க உதவுகின்றன. பாலைத்
தயிராக மாற்றுகின்றன. ரொட்டி மற்றும்
மது தயாரிப்பில் உதவுகின்றன.
பயறு வகைத் தாவரங்களின் வேர்களில்
குடியேறி நைட்ரஜனை உரமாக மாற்றி மண்
வளத்தைப் பெருக்குகின்றன.இசாட்
லிடினெட்ஸ்கி என்ற ரஷிய விஞ்ஞானி,
மனிதனுக்கு வேண்டிய உணவு, உடை,
மருந்து, மின்சக்தி, விலையுயர்ந்த
உலோகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும்,
நகரங்களில் குவியும் குப்பைகளைப் பயன்
தரும் பொருள்களாக மாற்றவும்,
தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைக்
கொல்லவும், நீர்நிலைகள் தூர்ந்து விடாமல்
பராமரிக்கவும் கிருமிகளைப் பயன்படுத்த
முடியும் என்கிறார்.
உலகில் கிருமிகள் இல்லாத இடமேயில்லை.
தரையிலும், நீரிலும் காற்றிலும்,
உறைபனித் துருவங்களிலும், வெந்நீர்
ஊற்றுகளிலும், மலைச் சிகரங்களிலும்,
கடலடியிலும்கூட அவை காணக்
கிடைக்கும்.கிருமி என்பது மிகப்பெரும்
செயல்திறன் கொண்ட ஒரு ரசாயனத்
தொழிற்சாலைக்கு ஒப்பானது. சில
கிருமிகள் தாவர – மாமிசக் கூட்டுப்
புரதங்களையும், சில கிருமிகள்
சாதாரணக் குப்பைகளையும்
சாப்பிட்டு ஜீரணம் செய்கின்றன.
வேறு சில, காற்றிலுள்ள நைட்ரஜனையும்
கரியமில வாயுவையும் உட்கொண்டு மண்
வளத்தைப் பெருக்கும்
நைட்ரேட்டுகளை வெளிப்படுத்துகின்றன.
யீஸ்ட், பாக்டிரியம், பூஞ்சை, ஆல்கா போன்ற
நுண்ணுயிரிகள் மனிதர்களுக்கும்
விலங்குகளுக்கும் உணவாகக்கூடிய
புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
கிருமிகளுக்கு உணவாகக்கூடிய
ஊட்டச்சத்துகள் அடங்கிய செயற்கையான வளர்
ஊடகங்களில் யீஸ்ட் கிருமிகளை வேகமாக
இனப்பெருக்கம் செய்ய வைத்துக் கால்நடைத்
தீவனங்களுடன் கலக்கக்கூடிய ஒற்றை ùஸல்
புரதங்களைத் தயாரிப்பதற்குப்
பல்வேறு நாடுகளிலுள்ள தொழிற்சாலைகள்
அவற்றைப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம்
கால்நடைத் தீவனங்களின் புரத உள்ளடக்கம் 50
சதவீதத்துக்கு மேல் அதிகமாகிறது.
கால்நடைகளுக்கு ஊட்டப்படுகிற தீவனத்தில்
20 முதல் 30 சதவீத அளவே மாமிசமாகவும்
பாலாகவும் திரும்பக் கிடைக்கும்.
கால்நடைக்கு வயதானால் இது 5 முதல் 10
சதவீதம்
என்று குறைந்து போகும்.இவ்வாறு சுற்றி
வளைத்துப் புரதச்சத்தைப் பெறுவதைவிட
கால்நடைகளுக்கான புரதச்சத்துகளையும்
கார்போ ஹைட்ரேட்டுகளையும்
வைட்டமின்களுடன்
கலந்து நேரடியாகவே மனிதர்கள்
சாப்பிடக்கூடிய
சத்துணவை உருவாக்கி விடலாம் என
ஆய்வர்களுக்குத் தோன்றுகிறது.
அமெரிக்காவில் சோயா மொச்சைப்
புரதங்களைப் பயன்படுத்தி, கிருமிகளின்
உதவியால் மாடு, கோழி,
பன்றி ஆகியவற்றின்
மாமிசத்தை ஒத்திருக்கிற உணவுகள்
உருவாக்கப்படுகின்றன.ரொட்டி மாவை
நொதிக்க வைக்க உதவும் யீஸ்ட்
கிருமிகளை எதைல் ஆல்கஹாலில் வளர்த்துப்
பெருக்கி அவற்றைக் கோதுமை மாவுடன்
கலந்து அதன் புரத
உள்ளடக்கத்தை அதிகரிக்கும்
முறையை ரஷிய விஞ்ஞானிகள்
உருவாக்கியுள்ளனர்.
காற்றின் நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக
மாற்றும் சில
வகை பாக்டிரியங்களை செயற்கையான வளர்
ஊடகங்களில் வளர்த்துப் பெருக்கி மண்ணின்
வளத்தை அதிகரிக்கலாம்.ஆக்சிஜன்
தேவைப்படாமல் உயிர் வாழக்கூடிய சில
பாக்டிரியங்களைப் பயன்படுத்தி, ஏரிகள்,
குளங்கள் போன்றவற்றின்
அடித்தரையை இறுக்கிக்
கெட்டிப்படுத்தலாம் என்று ஜியார்ஜிய
விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.
இதன் மூலம் நீர் தரைக்குள் ஊறிப்போய்
விடாலும், சுற்றுப்புறங்களுக்குக்
கசிந்து வெளியேறி விடாமலும்
பாதுகாக்க முடிகிறது.சிலவகைப்
பாறைகளையும் தாதுப் படிவுகளையும்
உருவாக்குவதில் சில வகைக் கிருமிகள்
முக்கியப் பங்கு வகிக்கின்றன.வேறு சில
வகைக் கிருமிகள் சில வகைப்
பாறைகளையும் உலோகத் தாதுக்களையும்
கரைத்துச் சிதைக்கின்றன. எண்ணெய் மற்றும்
எரிவாயுப்
படிவங்களை உருவாக்குவதிலும் சில
கிருமிகள் பங்கு வகிக்கின்றன. அத்தகைய
கிருமிகளைப் பயன்படுத்திப் பல
பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
சுரங்கங்களில் உலோகத்
தாதுக்களை வெட்டியெடுக்கும்போது,
ஐந்து முதல் இருபது சதவீத தாதுக்கள்
மண்ணிலேயே தங்கி விடும்.
அவற்றை மீட்டெடுப்பது பெரும்
செலவு பிடிக்கிற வேலை. கந்தகச்
சத்துகளும் இரும்புச் சத்துகளும் சில
வகை பாக்டிரியங்களால்
உள்கவரப்பட்டு நீரில் கரைகிற கூட்டுப்
பொருள்களாக மாறும்.
அவை சுரங்கங்களில் கசியும் நீரில்
கரைந்து தேங்கும். அந்தக்
கரைசலை எளிதாக
வெளியேற்றி தாதுக்களைப்
பிரித்தெடுக்கலாம். இந்த முறையில்
ரஷியாவிலும் மெக்சிகோவிலும்
இருப்பு தீர்ந்து போனதாகக் கைவிடப்பட்ட
சில செப்புச் சுரங்கங்களிலிருந்து பல
நூறு டன் செப்பு வெளிக்கொணரப்பட்டது.
சில கிருமிகள் தங்கத்தையும் கூடக்
கரைக்க வல்லவை. அவற்றைப்
பயன்படுத்தி தங்கச் சுரங்கங்களின்
அடிமண்ணிலிருந்து 82 சதவீதம்
வரை தங்கத்தை மீட்டெடுக்கிறார்கள்.
நிலக்கரிச் சுரங்கங்களில் மீத்தேன் வாயுக்
கசிவு ஏற்பட்டு பயங்கரமான தீ விபத்துகள்
ஏற்படுவதுண்டு. ரஷிய விஞ்ஞானிகள்
மீத்தேன் வாயுவை உள்கவரக்கூடிய
நுண்ணுயிரிகளை நிலக்கரிச்
சுரங்கங்களில் வளர்த்து, மீத்தேன்
செறிவை வெகுவாகக் குறைப்பதில்
வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சில நுண்ணுயிரிகள்
மின்னாற்றலை உற்பத்தி செய்து, அதைச்
சேமித்து வைத்துக்கொள்ளும் திறமையைப்
பெற்றிருக்கின்றன. அவற்றைப்
பயன்படுத்தி மலிவான, கையடக்கமான
உயிரி ரசாயன மின்கலங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.விண்வெளிப் பயணக்
கலங்களில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், குடிநீர்,
சுவாசக் காற்று போன்ற இன்றியமையாத்
தேவையுள்ள பொருள்களை உற்பத்தி செய்யும்
கருவிகளை இயக்க இத்தகைய உயிரி மின்
சேமிப்புக் கலங்களைப்
பயன்படுத்துவதற்கான முயற்சிகள்
நடைபெற்று வருகின்றன.
கடலில் மிதக்கும்
எச்சரிக்கை விளக்கு மிதவைகள் கடலின்
ஆழம், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மீன்
கூட்டங்களின் நடமாட்டம்
போன்றவற்றை எதிரொலிகள் மூலம்
கண்காணிக்கிற சோனார் கருவிகள்,
கலங்கரை விளக்குகள், மின்
சைகை விளக்குகள் போன்றவற்றில்
உயிரி ரசாயன மின்கலங்கள்
பயன்படுத்தப்படுகின்றன.
பிரிட்டிஷ் ஆய்வர்கள் பாலிகுளோரோவைனல்
வகைப் பிளாஸ்டிக்குகளைச் சிதைத்துக்
கார்பனாக மாற்ற வல்ல
ஒரு கிருமியினத்தை
உருவாக்கியிருக்கிறார்கள். கூடிய
விரைவில் மற்ற வகைப்
பிளாஸ்டிக்குகளையும்
சிதைத்து அழிக்கவல்ல
கிருமிகளை உருவாக்கிவிட முடியும்
என அவர்கள் நம்புகிறார்கள்.சில
விசேஷமான கிருமிகளை பிளாஸ்டிக்கின்
உற்பத்திக் கட்டத்திலேயே அதனுடன்
கலந்துவிடும் ஓர்
உத்தி பரிசோதனையிலுள்ளது. கொஞ்ச
காலத்துக்கு அந்தக் கிருமிகள் செயலற்ற
நிலையிலிருக்கும்.
பிளாஸ்டிக் பொருள்களைக் குப்பைத்
தொட்டிகளில் போட்டவுடன் பிற
குப்பைகளிலிருந்து வெளிப்படும்
வாயுக்கள் அக்கிருமிகளைத்
தூண்டுவிட்டுப் பிளாஸ்டிக் பொருள்களைச்
சிதைக்க வைக்கும்.மனிதர்கள் மற்றும்
விலங்குகளின் குடல்களில் பல்லாயிரம்
கோடிக் கிருமிகள்
கூட்டு வாழ்க்கை நடத்தி வருகின்றன.
அவை உணவிலுள்ள ஊட்டச்சத்துகளைப்
பிரித்து உடலுக்கு வழங்குவதிலும்,
கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதிலும்
பெரும் பணியாற்றுகின்றன.இத்தகைய
சகவாழ்வுக் கிருமிகள், தயிர் மூலமும்,
நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் மூலமும்
உட்கொள்ளப்படுகின்றன. சில நோய்த்
தாக்குதல்களின்போது, அதிக அளவில்
கிருமிக்கொல்லி மருந்துகளை உட்கொள்வதால்
குடல் வாழ் கிருமிகளும்
அழிக்கப்படுவதுண்டு.
அப்போது வயிற்றுப்போக்கு போன்ற
கோளாறுகள் ஏற்படும். அதற்கு மாற்றாக
புரோபயாட்டிக்
மருந்துகளை உட்கொண்டு குடல்
கிருமிகளின்
எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள
மருத்துவர்கள்
பரிந்துரைப்பார்கள்.மனிதனுக்கு உதவும்
பாக்டிரியங்களை உருவாக்கும் கலை,
படிப்படியாக முன்னேறி வருகிறது.
ஒவ்வொரு செயலுக்கும், நோக்கத்துக்கும்
உரிய பாக்டிரியங்களைப் பெயர்
சொல்லி மருந்துக்கடைகளில்
கேட்டு வாங்கிப் பயன்படுத்தும் காலம்
விரைவில் வரலாம்.
கிருமிகளை முழு அளவில்
கட்டுப்படுத்தவும், தேவையான அளவில்
உருவாக்கவும் மனிதன் தேர்ச்சி பெற்ற பின்
அண்மையிலுள்ள கோள்களின்
வாயு மண்டலத்தை மாற்றியமைத்து அவற்றில்
மனிதக் குடியேற்றங்களை உருவாக்க
முயலலாம் என விஞ்ஞானிகள்
கருதுகிறார்கள்.உதாரணமாக, புதனின்
வாயு மண்டலம் கரியமில வாயுவாலானது.
அதைச் சிதைத்து கார்பனாகவும்
ஆக்சிஜனாகவும் மாற்றக்கூடிய கிருமிக்
கூட்டங்களை ஏராளமான அளவில் புதனின்
வளி மண்டலத்தின் மேலடுக்குகளில்
பரப்பிவிட்டால், ஒரு சில
நூற்றாண்டுகளுக்குப் பின்
அங்கு மனிதர்கள் வாழக்கூடிய
அளவுக்கு ஆக்சிஜன்
செறிவு அதிகமாகிவிடும் என்கிறார்கள்.
ஆதியில் பூமியின் வளிமண்டலமும்
கரியமில
வாயுவாலானதாகத்தானிருந்தது.பல
கோடி ஆண்டுகளாகக் கிருமிகள் செயல்
பட்டு அதை இன்றைய
தன்மைக்கு மாற்றியுள்ளன. எனவே, ஒரு சில
நூற்றாண்டுகள் என்பது அவ்வளவு அதிக கால
இடைவெளியல்ல.