Thursday, 13 May 2021

குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும்உணவுகளும் வழிகளும்!

குழந்தையின் ஞாபக
சக்தியை அதிகரிக்கும்
உணவுகளும் வழிகளும்!
ஒவ்வொருவரும்
தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள்
புத்திசாலியாகவும் ஞாபக
சகதியில் புலியாகவும் விளங்க
வேண்டும்
என்று விரும்புவது இயற்கைதான்.
அப்படி விரும்புவர்கள் முதலில்
தங்கள் குழந்தைகளுக்கு நல்ல
மூளை வளர்ச்சியைத் தரும்
உணவுகளை தர வேண்டும்.இந்த
உணவானது உடலுக்கு மட்டும்
நன்மையைத் தருவதில்லை,
மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
இத்தகைய
மூளையை ஆரோக்கியமாக வைக்கும்
உணவுகளை உண்பதால்
குழந்தைகளின் நினைவாற்றல்
அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக
சக்தியும் கூடுகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம்
மூளை நரம்புகள்
வயது முதிர்ச்சியாலும்,போதிய
போசாகின்மையாலும், மன
அழுத்தத்தினாலும் சோர்வடைவதே.
அதனால் மூளை சரியாக எதையும்
ஞாபத்தில் வைத்துக் கொள்ள
முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த
ஒரு முக்கியமான வேலையை செய்ய
நினைத்தாலும்,
அதனை உடனே மறந்துவிடுவர்.
இவை அனைத்திற்கும் சரியான
உணவுகளை சாப்பிடாததும்
ஒரு காரணம். எனவே ஞாபக
சக்தியை அதிகரிக்கவும்,
மூளையை சுறுசுறுப்புடனும்
வைத்துக் கொள்ள உதவும்
உணவுகளை சரியாக
சாப்பிட்டு வந்தால், ஞாபக
சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன்
மூளையின்
செயல்பாட்டை அதிகரிப்பதோடு,
உடலையும் ஆரோக்கியத்துடன்
வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள்
உண்ணும் தாய்மார்களுக்குப்
பிறக்கும் குழந்தைகள் மிகுந்த
புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில்
இருக்கும்போது மூளை தொடர்பான
நோய்கள் தாக்குவதும் குறைவாக
இருக்கும்.குழந்தைகளின்
மூளையும் சிறப்பாக
வளர்ச்சி அடையும்.
கர்ப்பிணிகளாக
இருக்கும்போதே ஆரம்பித்து,
பிரசவசத்துக்குப் பின்
குழந்தைகளிடமும் இந்த
ஆய்வு தொடர்ந்தது. அதில்,
கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம்
உண்ட தாய்களின் குழந்தைகளின்
புத்திக் கூர்மையும்,
அவர்களது கை-கண்
இணைந்து செயல்படுவதும்,தகவல்
தொடர்பும் மிகச் சிறப்பாக
இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான
ஒமேகா-3 fatty
acids’ (docosahexaenoic acid)
மீன்களில் அதிகமாக
காணப்படுவதே இதற்குக் காரணம்.
தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3
fatty acids’ அளவு மிகவும்
குறைவாக இருந்தால்
குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும்
வாய்ப்புள்ளது.
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட
உணவுகள்…
பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட
உணவுகளில் அதிகமாக
புரோட்டீன், கால்சியம்,
பொட்டாசியம் மற்றும் வைட்டமின்
டி உள்ளது.
இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற
பாலானது நரம்புத்தசை மண்டலத்தை
நன்கு இயக்குவதோடு மற்றும்
மூளை செல்களை நன்கு செயல்பட
வைக்கிறது. அதுவும் வளரும்
குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல
ஒரு உடல் வளர்ச்சியைத்
தருவதோடு, மூளையையும்
சுறுசுறுப்பாக வைக்கிறது.
முட்டை மற்றும் நட்ஸ்…
மூளையின் ஞாபக
சக்தியை அதிகரிக்கும் செல்களின்
முக்கியமானது தான் கோலைன் சத்து.
இது முட்டையில் அதிகம்
இருக்கிறது. மேலும் இதை அதிகம்
உண்பதால், ஞாபக
சக்தி அதிகரிப்பதோடு,
மூளையானது களைப்படையாமல்
சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ்
அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள
வைட்டமின்
டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
தானிய வகைகள் …
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ்
அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும்
சிவப்பு அரிசியை அதிகம்
சாப்பிட்டால்,
மூளையானது ஆரோக்கியமாக
இருக்கும். நமது உடலுக்கு தினமும்
ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால்
நல்லது. மேலும் வைட்டமின்
பி அதிகம் இருப்பதால், உடலில்
இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால்,
உடலில் எல்லா பாகங்களும்
சுறுசுறுப்பாக இருக்கும்.
மீன் :
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
அதிகம் உள்ளது. இந்த
ஃபேட்டி ஆசிட்
இதயத்திற்கு மட்டுமின்றி,
மூளையின் செயல்பாட்டிற்கும்
சிறந்தது. ஏனெனில் மூளையின்
செயல்பாட்டிற்கு ஒமேகா-3
ஃபேட்டி ஆசிட் மிகவும்
முக்கியமானது. மேலும
இது மூளைச் செல்களின்
இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும்
குறிப்பாக ஹெர்ரிங், சால்மன்,
சூரை (Tuna), கானாங்கெளுத்தி,
பொத்தல், நெத்தலி, மற்றும்
மத்தி போன்றவை மிகவும்
சிறந்தது.
இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான
DHA மற்றும் EPA அதிகம் உள்ளது.
இது மூளை வளர்ச்சிக்கு மிகவும்
நல்லது. மற்ற உணவுப்
பொருட்களை மீனிலேயே
அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும்
திறன் அதிகமாக உள்ளது. மேலும்
மற்ற உணவுப்பொருட்களான
காய்கறிகளில் தக்காளி, கேரட்,
பீன்ஸ், கீரைகள் போன்றவையும்
சிறந்தது. ஆகவே மேற்கூறிய
உணவுப்
பொருட்களை குழந்தைகளுக்கு
தினமும் கொடுத்து வந்தால்
மூளையானது நன்கு
சுறுசுறுப்போடு இருப்பதோடு,
ஆரோக்கியமாகவும் இருக்கும்.
க்ரீன் டீ:
க்ரீன் டீயில் மூளைச் செல்கள்
பாதிப்படையாமல் தடுக்கும்,
ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
எனவே இதனை குடிப்பதால் ஞாபக
சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான
மனநிலை மாறும்.
பெர்ரிஸ்
பெர்ரிப் பழங்களில் குவர்செடின்
என்னும் மூளைச் செல்களில்
இயக்கத்தை அதிகரிக்கும் பொருள்
உள்ளது. அதுமட்டுமின்றி இதில்
ஆந்தோசையனின் என்னும்
ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர்
என்னும் ஞாபக
மறதி நோயை தடுக்கும். அதிலும்
சில பெர்ரிப் பழங்களான
ராஸ்ப்பெர்ரி,
ப்ளூபெர்ரி போன்றவை மிகவும்
சிறந்தது.
பச்சை இலைக் காய்கறிகள் :
பொதுவாக கீரைகள், காய்கறிகள்
போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால்,
ஞாபக சக்தி அதிகரிக்கும்
என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
அவர்கள் சொன்னது பொய்யல்ல
உண்மை தான். அதிலும் பசலைக்
கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி,
காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ்
போன்றவற்றில் ஞாபக
சக்தியை அதிகரிக்கும் பொருள்
இருப்பதோடு, வைட்டமின்கள்
மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம்
இருப்பதால், உடலும்
ஆரோக்கியத்துடன் இருக்கும்.
தேன்:
தேனில் அளவற்ற நன்மைகள்
அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக
சக்தியை அதிகரிப்பதும் ஒன்று.
எனவே தினமும் காலையில்
எழுந்து ஒரு ஸ்பூன்
தேனை சாப்பிட்டால்,
எடை குறைவதோடு, ஞாபக
சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ் :
நட்ஸில் மூளையின்
சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்
ஈ மற்றும் பி6 இருக்கிறது.
எனவே தினமும் ஒரு கை பாதாம்,
பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது,
ஞாபக சக்திக்கு மட்டுமின்றி,
முழு உடலுக்கும் நல்லது.
தண்ணீர்:
மூளையில் நான்கில்
மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது.
எனவே தண்ணீர் குறைவானால்
மூளையில் செயல்பாடும் குறைந்து,
மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக
சக்தியும் குறைந்துவிடும்.
எனவே அதிகப்படியான தண்ணீர்
குடிப்பதால், மூளையில்
வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள்
சுறுசுறுப்போடு செயல்படும்.
ஒயின் :
நிறைய பேர் ஆல்கஹால்
பருவதற்கு தடை சொல்வார்கள்.
ஆனால் ஆல்கஹால் குடிப்பதால்,
மூளையின்
செயல்பாடு அதிகரிக்கும். அதிலும்
ரெட் ஒயின் தான் மிகவும் சிறந்தது.
ஆகவே இதனை குடிப்பதால்,
மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக
இருந்து, அல்சீமியர் நோய்
ஏற்படுவதை தடுக்கும். மேலும் ரெட்
ஒயின் மூளைக்கு மட்டுமின்றி,
இதயத்திற்கும் நல்லது.
ரோஸ்மேரி:
ரோஸ்மேரி சாலட் மற்றும்
டாப்பிங்கில்
அலங்கரிப்பதற்கு மட்டும்
பயன்படுவதில்லை.
அவை மூளையின் இயக்கத்திலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த
ரோஸ்மேரியில் மூளையின்
வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-
ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.
பொதுவாக ஞாபகம் ஒரு வியாதி,
மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்,
ஆனால் நம்
குழந்தை படித்தததை எல்லாம்
மறக்கும் போது மறதி ஒரு சாபம்
போல நமக்கு தோன்றும்.
அப்படியான ஞாபகம் குறித்து சில
தகவல்கள்:
நாம் பார்க்கும், கேட்கும், உணரும்,
சுவைக்கும், முகரும்
அனைத்துமே நமது ஞாபகங்கள்
ஆகும். இது முதலில் குறைந்த
நேரமே மனதில் இருக்கும்
(சென்சரி மெமரி).
உடனே மறந்து விடும்.
இந்த சென்சரி மெமரியில் நாம்
முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து
கவனித்தால் அது ஷார்ட் டெர்ம்
மெமரி ஆக பதிவாகும். இதுவும்
சில மணித்துளிகளுக்கு மட்டும்
இருக்கும்.
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத்
திரும்ப செய்யும்போது அது நாள்
பட்ட ஞாபக சக்தியாக மாறும்.
எனவே ஞாபக சக்திக்கு மிகவும்
முக்கிமானது இரண்டு: ஆர்வம்
மற்றும் கவனம், திரும்ப திரும்ப
செய்தல்.
மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க
வாய்ப்பு உள்ளது, இதுவும்
நல்லது தான். சில சமயம் வாழ் நாள்
முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட
ஞாபகத்தை இரண்டு வகையாக
பிரிக்கலாம்: explicit & implicit
explicit என்பது கொஞ்சம்
யோசித்தால்
நினைவுக்கு கொண்டுவர
முடியும்.
implicit என்பது யோசிக்க
தேவை இல்லாமல்
உடனே நினைவுக்கு கொண்டு
வருதல்.
நினைவு திறனை சிறு உதாரணம்
கொண்டு விளக்கலாம்:
மிதி வண்டி ஓட்ட
பழகுதலை எடுத்துக் கொள்வோம்.
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது –
சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட
கற்று கொள்வது – ஷார்ட் டெர்ம்
மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம்
explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது – லாங்
டெர்ம் implicit மெமரி (சாகும்
வரை மறக்காது)
இனி நினைவு திறனை
அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய்
மொழியிலேயே சிந்திக்க
வேண்டும், நீங்கள்
படிப்பது ஆங்கிலமோ,
ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள்
தாய் மொழி என்னவோ அதில்
சிந்தித்து மனதில் பதிய செய்ய
வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க
கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள்
ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics
வைத்து படிப்பது ஒரு கலை.
அதை உங்கள்
குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news – north, east, west,
south
* படித்தவுடன் எழுதி பார்க்கும்
பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஹோம் வொர்க் என்ற பெயரில்
கடமைக்கு எழுதும்
சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள்
மனதில் பதியும். பட
விளக்கங்களை திரும்ப திரும்ப
வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம்.
குறைந்தது 8 மணி நேர தூக்கம்
கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம்
தூங்கி அதிகாலை படிக்கும்
படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த
அனைத்தையும்
ஒரு முறை மேலோட்டமாக
நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.
அப்படி செய்யும் போது நாம்
தூங்கினாலும் நம் மூளையின் சில
மூலைகள் விழிப்புடன்
இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம்
மெமரியில் இருந்து லாங் டெர்ம்
மெமரியில்
பதிவு செய்து கொண்டு இருக்கும்.
இது மிக முக்கியமான
பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த
நிலையை ஏற்படுத்தும்,
எனவே புரதம் நிறைந்த எளிதில்
செரிக்கும்
உணவை சேர்த்துகொள்வது நல்லது.

Friday, 27 December 2019

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா...

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா...


மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Monday, 29 April 2019

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்x
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

Tuesday, 16 April 2019

விதுரர் நீதி...

விதுரர் நீதி

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...

Saturday, 6 April 2019

வாழ்க்கை என்பது ஒரு வட்டம்...


1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது.
4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது.
8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது.
12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது.
18 − வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது.
23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது.
25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது.
30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது.
35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது.
45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது.
50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது.
55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது.
60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது.
65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது.
70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது.
75 − வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது.
81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது.
86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது.
90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது.

Tuesday, 2 April 2019

அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்...

அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ கட்டியதை இடிக்கவோ தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிற ார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து... திருமணமாகிச் செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ அழாமல் நடிக்க அண்ணன்கள் கற்றுக் கொள்கிறார்கள்..

முடி

தினமும் ஹேர் வாஷ் செய்வது நல்லதா?

ஆம், நிச்சயம் செய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது தூசு, புகை போன்றவை நம் கேசத்தின் வேர்க்கால்களில் படிந்து அரிப்பு உண்டாகும்; முடிகொட்டுதல் பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்க, தினமும் ஹேர் வாஷ் செய்துகொள்வது நல்லது. ஜலதோஷம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது ஹேர் வாஷ் செய்துகொள்ளுங்கள். தினமும் ஹேர் வாஷ் செய்தால் கூந்தல் வறண்டு போகிறது என்பவர்கள் உங்கள் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப மைல்டு ஷாம்பூகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். வெளியே செல்லும்போது கூடுமானவரை கேசத்தை ஏதேனும் ஸ்கார்ஃப் கட்டிப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

எந்த எண்ணெய் தலைமுடிக்கு நல்லது?

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செம்பருத்தி எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் எனக் கூந்தலுக்கு எல்லா வகையான எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். அதற்கு முன், உங்கள் கூந்தலின் தன்மையைப் பொறுத்து எண்ணெய்த் தேர்வு இருப்பது அவசியம். கூந்தல் அதிக வறட்சியாக இருக்கிறது என்பவர்கள் ஆலிவ் எண்ணெய்யைத் தேர்வு செய்யலாம். கூந்தல் வலிமையிழந்து அடர்த்தியின்றி இருக்கிறது எனில் பாதாம் எண்ணெய் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். சில்க்கி ஹேர் வேண்டுமெனில் செம்பருத்தி எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். உடல் சூடு காரணமாகக் கூந்தல் உதிர்கிறது எனில் வாரத்துக்கு மூன்று முறை நல்லெண்ணெய் மசாஜ் செய்துகொள்ளலாம். பொடுகுப் பிரச்னை நீங்க, அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யுடன் சிறிது லேவண்டர் ஆயிலைக் கலந்துகொள்ளலாம். உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் பிரச்னைகளுக்கு ஏற்ப சரியான எண்ணெய்யைத் தேர்வு செய்து பயன்படுத்தினால் கூந்தல் பிரச்னைகள் நிச்சயம் குறையும்.

எண்ணெய் அப்ளை செய்யும் முறை

முன்பெல்லாம் எண்ணெய் வைத்துத் தலைசீவித்தான் பெண்கள் வெளியே செல்வார்கள். ஆனால், இன்றிருக்கும் சுற்றுச்சூழல் மாசில் எண்ணெய் வைத்து வெளியே சென்றால் கூந்தலில் அழுக்குப் படிந்து பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும். எனவே, வெளியில் செல்லும்போது தலைக்கு எண்ணெய் அப்ளை செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோன்று சிலர் தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் எண்ணெய் தேய்த்து, மறுநாள் காலையில் ஹேர்வாஷ் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது பயனற்றது. நீங்கள் தேய்க்கும் எண்ணெய் தலையணை உறைக்குத்தான் செல்லும். எனவே, தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கூந்தலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். எண்ணெய்யைக் கூந்தலில் மட்டுமல்லாது ஸ்கால்பிலும் படும்படி அப்ளை செய்வதே நல்ல பலன் அளிக்கும்

ஷாம்பூ தேர்வு

உங்களால் தினமும் சீயக்காய் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்ய முடியும் எனில் சீயக்காயே பெஸ்ட் சாய்ஸ். இயலாது என்பவர்கள் PH மதிப்பு 4.5-க்கும் கீழ் உள்ள கெமிக்கல் ஃப்ரீ ஷாப்பூகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். விளம்பரங்களைப் பார்த்து அடிக்கடி ஷாம்பூவை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது அப்படியே நேரடியாகக் கூந்தலில் அப்ளை செய்யாமல், ஒரு கப் தண்ணீரில் தேவைக்கேற்ப ஷாம்பூ எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் உங்கள் கூந்தலை அதிகம் பாதிக்காமல் இருக்கும். இதனால் இளநரை, கூந்தல் வறட்சி போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.

முடி உதிர்வைத் தடுக்க

அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் முதலில் உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை செக் செய்வது அவசியம். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பின் கீரைகள், பேரீச்சம்பழம், நெல்லிக்காய், புதினா போன்றவற்றை உணவில் ரெகுலராக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கூந்தல் பிரச்னையையும் சரிசெய்யலாம். வறட்சியால் முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் ஹேர் ஸ்பா ஒரு முறை செய்து கொள்ளலாம். அல்லது தினமும் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம். முடி வெடிப்பு அல்லது பிளவு காரணமாகவும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படவும், வளர்ச்சி தடைப்படவும் செய்யும். இதுபோன்ற நிலையில் மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். ஈரமான கூந்தலுடன் தலைசீவுவது கேசத்தை வலிமையிழக்கச்செய்து முடி உதிர்வை அதிகப்படுத்தும். எனவே, கூந்தலை நன்கு காயவைத்த பின்னர் பெரிய பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி சிக்குகளை எடுத்து பின் தலைவாரிக் கொள்ளவும். ஹேர் டிரையர்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் கூல் டிரையர்கள் பயன்படுத்துவது நல்லது.

ஹென்னா பயன்படுத்துபவர்களின் கவனத்துக்கு

ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், கலரிங் என அடிக்கடி ஹேர் பேட்டர்னை மாற்றுபவர்கள் ஹென்னா பயன்படுத்தினால் சரியான ரிசல்ட் இருக்காது. நரைமுடியை மறைக்க ஹென்னா பயன்படுத்துகிறீர்கள் எனில் பிளைன் ஹென்னா பவுடருடன் பீட்ரூட் கலவை 4 டீஸ்பூன் கலந்து தலைக்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் ஹேர் வாஷ் செய்ய அழகான பர்கண்டி கலர் ஹேர் கிடைக்கும். அடர்த்தி அல்லது கண்டிஷனிங் காரணங்களுக்காக ஹென்னா பயன்படுத்துபவர்கள் ஹென்னா பவுடருடன் சிறிதளவு டீ -டிக்காக்ஷன் சேர்த்து கேசத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.